வியாழன், 12 நவம்பர், 2009

வரலாற்று சம்பவம் : இரண்டாம் உலகப்போர் :1942



ஜன.1:26 உறுப்பினர்களுடன் ஐ.நா.சபை உருவாயிற்று.
ஜன.2: பிலிப்பைன்ஸ் தீவில் உள்ள மணிலா நகரத்தை ஜப்பானியர் கைப்பற்றினர்.

ஜன.19: ஜெர்மணி படைகள் இருந்த பகுதிக்குள் ரஷிய பாராசூட் படையினர் குதித்து திடீர் தாக்குதல் நடத்தினர்.

ஜன.31: சிங்கப்பூரை ஜப்பான் படைகள் முற்றுகையிட்டன.

பிப்.8: சிங்கப்பூருக்குள் ஜப்பான் படைகள் புகுந்தன. சிங்கப்பூர் வீழ்ந்தது.

பிப்.15: ஜப்பானிடம் சிங்கப்பூர் சரண் அடைந்தது

மார்ச்.7: ஜப்பானிடம் ஜாவா சரண் அடைந்தது.

ஏப்.1: இலங்கை மீது ஜப்பான் விமானங்கள் குண்டு வீச்சு.

ஏப்.18: ஜப்பான் தலைநகர் டோக்கியோ மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தியது.

ஏப்.30: ஹிட்லரும் முசோலினியும் சந்தித்துப் பேசினார்கள் ( லெனின்கிராட் நகரில் மட்டும் ஏப்பரல் மாதத்தில் 1 லட்சம் பேர் மாண்டனர்)
மே.2: பர்மாவில் உள்ள மாண்டாலே நகரை ஜப்பான் கைப்பற்றியது.

மே.4: மடகாஸ்கர் தீவை பிரிட்டீஷ் படைகள் கைப்பற்றின.

மே.31: ஆஸதிரேலியாவில் உள்ள சிட்னி துறைமுகத்தின் மீது ஜப்பானின் நீர்மூழ்கி கப்பல்கள் தாக்குதல் நடத்தின. ( இந்த மே மாதத்தில் மட்டும் 1,30,000 யூதர்கள் விஷவாயு மூலமாகவும் துப்பாக்கியால் சுட்டும் ஜெர்மானியர்கள் கொன்றனர். )

ஜூன்.10: போலந்து நாட்டில் ஏராளமான மக்களை ஜெர்மனி தூக்கிலிட்டது.

ஜூன்.16: மத்திய தரைக்கடலில் பிரிட்டீஷ் போர்க்கப்பல்களும் 3 இத்தாலி போர்க்கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டன ஐசோனவர்

ஜூன்.25: ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க படைகளுக்கு தளபதியாக ஐசனோவர் (பிற்காலத்தில் ஜனாதிபதியானவர்) நியமிக்கப்பட்டவர்.
( ஜூன் மாதத்தில் வட அட்லாண்டிக் கடலில் நேச நாடுகளின் 124 கப்பல்களை ஜெர்மனி தாக்கி மூழ்கடித்தது )

ஜூலை.27: ரஷியாவுக்கு நுழைந்த ஜெர்மணிப்படைகள் டான் சூ ஆற்றைக்கடந்து காகசஸ் நகரை நோக்கி முன்னேறின. ஒரு அடிக்கூட பின்வாங்கக்கூடாது என்று ஸ்டாலின் தனது படைகளுக்கு கட்டளையிட்டார்.

ஆக.9: காகசஸ் நகருக்கு அருகில் எண்ணெய் கிணறுகள் உள்ள முக்கிய பகுதிக்குள் ஜெர்மணிப்படைகள் நுழைந்தன.

ஆக.13: இங்கிலாந்துப்பிரதமர் சர்ச்சில் ரஷுயாவுக்கு சென்று ஸ்டாலினை சந்தித்து பேசினார்

ஆக.23: ஸ்டாலின் கிரேடுக்கு வடக்கே உள்ள வால்கா என்ற பகுதியை ஜெர்மனிப்படைகள் அடைந்தன.

செப்.13: ஸ்டாலின் கிரேடு நகருக்குள் ஜெர்மனி படைகள் புகுந்தன.
செப்.22: ஸ்டாலின் கிராடு மையப்பகுதியை ஜெர்மனிப்படைகள் அடைந்தன. இரு தரப்பு படைகளுக்கும் இடையே கடும் போர் நடந்தது. ஜெர்மனி ரானுவம் திணறல்

நவ.22: ஸ்டாலின் கிராடு நகரில் புகுந்த ஜெர்மனிப்படைகளை ரஷ்யப்படைகள் சுற்றி வளைத்து தாக்கின.

டிச.11: ரஷ்யாவில் காகசஸ் நகரை பிடித்த ஜெர்மனி ரானுவம் அங்கிருந்து பின்வாங்கியது.

டிச.19: ஸ்டாலின் கிராடில் அகப்பட்டுக்கொண்ட தனது ரானுவத்தை மீட்க ஜெர்மனி செய்த முயற்சி தோல்வி அடைந்தது.( டிசம்பர் மாதத்தில் மட்டும் 18 ஆயிரம் ரஷிய யுத்தக்கைதிகளை ஜெர்மனி ரானுவம் பட்டினி போட்டுக் கொன்றது. 1942-ல் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை 30 லட்ச

1 கருத்து:

malar சொன்னது…

உங்கள் படைப்புகளை படிக்கச் தூண்டினாலும் எழுத்துக்கள் ரொம்ப சிறிய அளவில் உள்ளது படிக்க சிரமமாக இருக்கிறது .