திங்கள், 30 நவம்பர், 2009

துபாய் பொருளாதார நெருக்கடி: 20 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் பணி நீக்கம் நோட்டீசு அனுப்பினர்

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் திடீர் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு நடக்கும் வளர்ச்சி பணிகள் அனைத்தும் ஸ்தம்பித்து உள்ளன.
 
பொருளாதார நெருக்கடியால் கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை நிறுத்திவிட்டனர்.
 
இந்த பணிகளில் 60 லட்சம் பேர் ஈடுபட்டு வந்தனர். அவர்களில் 40 லட்சம் பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அதில் 20 லட்சம் பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
 
இவர்களில் ஏராள மானோருக்கு அந்தந்த நிறுவனங்கள் ஏற்கனவே வேலை நீக்க நோட்டீசு அனுப்பி விட்டது. விடு முறையில் ஊருக்கு வந்து இருப்பவர்களுக்கு நீங்கள் துபாய்க்கு திரும்பி வரவேண்டாம். உங்களுக்கு இனி வேலை கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறோம் என செல்போன் எஸ்.எம்.எஸ். அல்லது இ-மெயில் மூலம் அனுப்பி விடுகின்றனர்.
 
எனவே விடுமுறையில் வந்து இருப்பவர்கள் அனைவரும் வேலை பறி போய்விடுமோ என்று கலக்கத்தில் உள்ளனர்.
 
உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாஜித் என்பவர் பக்ரீத்துக்காக ஊருக்கு வந்திருந்தார். அவரது இ மெயிலுக்கு அவர் வேலை பார்த்த நிறுவனம் ஒரு கடிதம் அனுப்பி உள்ளது.
 
அதில் உங்கள் வேலை காண்டிராக்டை ரத்து செய்து விட்டோம், வேலைக்கு வழங்கிய அனுமதியும் ரத்தாகி விட்டது. நீங்கள் துபாய்க்கு திரும்பி வரவேண்டாம். உங்கள் சம்பள பாக்கி, உங்கள் உடமைகள் அனைத்தும் தபால் மூலம் அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
 




இதுபற்றி சாஜித் கூறும் போது எங்களுக்கு கடந்த 4 மாதமாக சம்பளம் தரவில்லை. இப்போது வேலையை விட்டே நீக்கி விட்டார்கள். எனது நண்பர் கள் பலருக்கும் இதே போல நோட்டீசு வந்துள்ளது. எங்கள் கனவெல்லாம் வீணாகி விட்டது என்றார்.
 
துபாயில் இருக்கும் இந்தியர்கள் இந்தியாவில் முதலீடு செய்வது அதிகமாக இருந்தது. சமீப காலமாக அது குறைந்து வந்தது. பொருளாதார நெருக்கடியும் முதலீடு கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

2.1 கோடி சீன செல்போன் இன்றுடன் இணைப்பு ரத்து


சர்​வ​தேச செல்​போன் அடை​யாள எண் ​(ஐஎம்​இஐ)​ இல்​லாத செல்​போன்​கள் திங்​கள்​கி​ழமை முதல் செயல்​ப​டாது.​ ஐஎம்​இஐ எண் இல்​லாத செல்​போன்​க​ளுக்கு நவம்​பர் 29-ம் தேதி​யு​டன் சேவை அளிப்​பதை ​ தொலை​தொ​டர்பு சேவை நிறு​வ​னங்​கள் நிறுத்​திக்​கொள்ள மத்​திய அரசு கெடு​வி​தித்​தி​ருந்​தது. அந்த கெடு முடி​வ​டைந்த நிலை​யில் ஐஎம்​இஐ எண் இல்​லாத செல்​போன்​க​ளுக்​கான சேவை நிறுத்​தப்​ப​ட​வுள்​ளது.​ முன்​னணி செல்​போன் நிறு​வ​னங்​கள் தயா​ரிப்​பில் சந்​தைக்கு விற்​ப​னைக்கு வரும் ஒவ்​வொரு ​ செல்​போ​னுக்​கும் தனித்​தனி சர்​வ​தேச செல்​போன் அடை​யாள எண் அளிக்​கப்​ப​டு​கி​றது. இந்த எண்,​ அந்த செல்​போன் எந்த நிறு​வ​னத்​தால் தயா​ரிக்​கப்​பட்​டது,​ அந்த செல்​போ​னின் மாடல் ஆகி​ய​வற்றை குறிக்​கும். ஐஎம்​இஐ எண் குறித்த தக​வல்​கள் அனைத்​தும் அந்த செல்​போ​னுக்கு சேவை அளிக்​கும் நிறு​வ​னத்​தில் தானா​கவே பதி​வா​கி​வி​டும்.​ கொரியா,​ சீனா உள்​ளிட்ட நாடு​க​ளில் தயா​ரிக்​கப்​பட்டு இந்​திய சந்​தைக்கு வரும் பெரும்​பா​லான செல்​போன்​க​ளில் இந்த ஐஎம்​இஐ எண் இருப்​ப​தில்லை. ​ பயன் என்ன?​​ ஐஎம்​இஐ எண் மூல​மாக ஒரு செல்​போ​னில் இருந்து மற்​றொரு செல்​போ​னுக்கு சென்ற அழைப்​பு​கள்,​ வந்த அழைப்​பு​கள் குறித்​தும்,​ எந்த இடத்​தில் இருந்து செல்​போன்​க​ளுக்கு இடையே தக​வல் பரி​மா​றிக்​கொள்​ளப்​பட்​டது என்​ப​தை​யும் எளி​தாக அறிந்​து​விட முடி​யும்.​ சமீ​ப​கா​ல​மாக பெரும்​பா​லான குற்ற சம்​ப​வங்​க​ளில் செல்​போன்​கள் பயன்​ப​டுத்​தப்​ப​டு​கின்​றன. இந்​நி​லை​யில் ஐஎம்​இஐ எண் உத​வி​யு​டன் அந்த செல்​போன்​களை பயன்​ப​டுத்​தி​ய​வர்​கள்,​ அதில் வந்த அழைப்​பு​கள் குறித்த தக​வல்​களை குற்ற சம்​ப​வங்​களை விசா​ரிக்​கும் அதி​கா​ரி​கள் பெற்று வரு​கின்​ற​னர்.​ ஐஎம்​இஐ எண் இல்​லாத செல்​போன்​கள் குற்ற சம்​ப​வங்​க​ளில் பயன்​ப​டுத்​தப்​ப​டும் போது குற்​ற​வா​ளி​கள் குறித்து எவ்​வித தக​வ​லை​யும் பெற முடி​யாது. இத​னால்​தான் பயங்​க​ர​வா​தி​கள் பெரும்​பா​லும் ஐஎம்​இஐ எண் இல்​லாத செல்​போன்​களை பயன்​ப​டுத்தி தங்​க​ளது சதித்​திட்​டங்​களை கச்​சி​த​மாக அரங்​கேற்​றி​வி​டு​கின்​ற​னர்.​ இந்​தி​யா​வுக்கு பயங்​க​ர​வா​தி​க​ளின் அச்​சு​றுத்​தல் நாளுக்கு நாள் அதி​க​ரித்து வரு​கி​றது. இத​னால் இனி​மே​லும் ஐஎம்​இஐ எண்​கள் இல்​லாத செல்​போன்​கள் புழக்​கத்​தில் இருப்​பதை அனு​ம​திப்​பது நாட்​டின் பாது​காப்​புக்கு உகந்​த​தல்ல என மத்​திய அரசு கருதி,​ அது​போன்ற செல்​போன்​க​ளுக்கு உட​ன​டி​யாக சேவையை நிறுத்​து​மாறு அறி​வு​றுத்​தி​யது.

மாத்தி யோசி : சாதிக்க வேண்டும் என்ற வேகம் வேண்டும்


சமீபத்தில் நோபல் பரிசு பெற்றிருக்கும் வெளிநாடு வாழ் இந்திய விஞ்ஞானி முனைவர் ராமகிருஷ்ணன் கூறியிருக்கும் சில கருத்துகள் சிந்தனைக்குரியவை மட்டுமல்ல, பாராட்டுக்கும் உரியவை.
லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் எம்.ஆர்.சி. பரிசோதனைச் சாலையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் முனைவர் வெ. ராமகிருஷ்ணன் இன்னும் தனது இந்தியத் தொடர்புகளைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதுடன் இந்தியாவின் வருங்காலம் பற்றிய சிந்தனைகளையும் சுமந்து கொண்டிருப்பது என்பதே நெகிழ வைக்கும் விஷயங்கள்தான். வெளிநாட்டில் வாழ்வாதாரங்களைத் தேடிக் கொண்டு விட்டாலே, தனது வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணமே இந்தியாவிலிருந்து வெளியேறி விட்டதுதான் என்பது, வாழ்வில் வெற்றி பெற்றுவிட்ட வெளிநாடுவாழ் இந்தியர்கள் பலரும் கூறும் குற்றச்சாட்டு.
இந்தியாவின் அரசியல் மற்றும் நிர்வாக அமைப்புகள் திறமைக்கு முன்னுரிமை அளிப்பதில்லை என்றும், லஞ்சமும், ஊழலும், சிபாரிசும்தான் வளர்ச்சிக்கு அளவுகோலே தவிர திறமைக்கு இந்தியாவில் இடமில்லை என்றும் பல வெளிநாடுவாழ் இந்தியர்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால், அவர்களில் இருந்து மாறுபட்டு விஞ்ஞானி ராமகிருஷ்ணன் இந்தியாவின் வருங்காலம் பற்றி வெளிப்படுத்தி இருக்கும் நம்பிக்கையூட்டும் தகவல்கள் நமக்கே வியப்பாக இருக்கிறது. சுதந்திரத்துக்கு முன்பு உலக அரங்கில் புகழ்பெற்ற கணிதமேதை ராமானுஜம், விஞ்ஞானி சி.வி. ராமன் போன்றவர்களைப்போல தற்போது பல மேதைகள் உருவாகாததன் காரணம் பற்றிக் கேட்டபோது, அதற்கு விஞ்ஞானி ராமகிருஷ்ணன் கூறியிருக்கும் பதில் நம்மைச் சிந்திக்க வைக்கிறது.
""கடின உழைப்பும் லட்சிய வெறியும் இருந்தால் உலகம் போற்றும் மேதைகளாகவும், தலைசிறந்த விஞ்ஞானிகளாகவும் உருவாகக்கூடிய திறமைசாலிகள் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது இருந்தாலும், அவர்கள் கணினி, பொறியியல், நிதி நிர்வாகம் போன்ற படிப்புகளுடன் பன்னாட்டு நிறுவனங்களில் சில லட்ச ரூபாய் அல்லது டாலர்கள் சம்பாதிப்பதுடன் திருப்தி அடைந்து விடுவதுதான் இந்தியாவின் துரதிர்ஷ்டம்'' என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் அவர். மேலும் கூறுகையில், முந்தைய நாள்களைப்போல அல்லாமல் உலக ஆராய்ச்சிகள் அனைத்துமே இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளும் வசதிகள் இருப்பதால், வெளிநாடுகளுக்குச் செல்லாமல் இந்தியாவில் இருந்தபடியே ஆராய்ச்சிகளைத் தொடர முடியும் என்றும் அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

தன்னுடைய துறையிலேயேகூட பிரகாசமான எதிர்காலமுள்ள இளம் இந்திய விஞ்ஞானிகள் பலரின் ஆராய்ச்சிக் கட்டுரைகளை இணைய தளங்களிலும், பல ஆய்வரங்கங்களிலும்தான் பார்த்து வியப்பதாகவும் கூறியிருக்கிறார் விஞ்ஞானி ராமகிருஷ்ணன். இந்தியாவின் மிகப்பெரிய குறைபாடு, போதிய ஆராய்ச்சி நிறுவனங்கள் இல்லாமை என்பதை ஒத்துக் கொள்ளும் அவர், எல்லா பல்கலைக்கழகங்களிலும் ஆராய்ச்சி சாலைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி இருக்கிறார். கடந்த முப்பது ஆண்டுகளாக, மருத்துவம், பொறியியல், நிர்வாக இயல், நிதி நிர்வாகம், தகவல் தொழில் நுட்பம் போன்ற படிப்புகளுக்குப் பெற்றோரும், மாணவர்களும் அரசும் முன்னுரிமை கொடுத்து வருவதன் விளைவு, அடிப்படை விஞ்ஞானப் பிரிவுகளான ரசாயனம், பௌதீகம், விலங்கியல், தாவர இயல் போன்றவைகளும், அவற்றின் சிறப்பு இயல்களும் போதிய வரவேற்பு இல்லாமல் இருக்கின்றன. இதன் தொடர்விளைவாக, பெரிய ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் இந்தியாவில் உருவாவது கணிசமாகக் குறைந்துவிட்டிருக்கிறது.
அரசும் சரி, விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்காகத் தரப்படும் முக்கியத்துவத்தையும், நிதி ஒதுக்கீடையும் படிப்படியாகக் குறைத்து வருகிறது. மேலைநாடுகளின் ஆராய்ச்சிகளை நாம் பயன்படுத்திக் கொண்டால் போதுமானது என்றும், உயர்மட்ட அடிப்படை விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்காக அரசு நிதியாதாரம் அளிப்பது தேவை இல்லாதது என்றும் ஆட்சியாளர்கள் மத்தியில் ஒரு சிந்தனை ஏற்பட்டிருக்கிறது.
ஒருசில தனியார் நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும்தான் இன்னும் முனைப்பாக அடிப்படை விஞ்ஞான ஆராய்ச்சிக்கான நிதி உதவிகளை வழங்கி வருகின்றன. படிப்பு முடிவதற்குள், கல்லூரி வளாகத்திலேயே நேர்முகத் தேர்வு நடந்து வேலை கிடைத்தால் போதும் என்று மாணவர்களும் நினைக்கிறார்கள். பல லட்சம் ரூபாய் கட்டணம் செலவழித்துப் படிக்க வைக்கும் பெற்றோரும் நினைக்கிறார்கள். தங்கள் குழந்தைகள் வசதியாக வாழ்ந்தால் போதும் என்று நினைக்கும் பெற்றோர்கள் அவர்கள் சாதனையாளர்களாக உலக அரங்கில் புகழ் பெற வேண்டும் என்று விரும்புவதாகத் தெரியவில்லை. இதன் விளைவு, முன் எப்போதையும்விடப் புத்திசாலிகளாகவும், திறமைசாலிகளாகவும் நமது இளைஞர்கள் இருந்தும் நாம் சாதனையாளர்களை உருவாக்காமல் இருக்கும் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது. அப்துல் கலாம், அமர்த்தியா சென், முனைவர் "வெங்கி' ராமகிருஷ்ணன் போன்ற பல உலக சாதனையாளர்களும் பௌதீகமும், பொருளாதாரமும், ரசாயனமும் படித்தவர்கள்தான் என்பதையும், பணம் சம்பாதிப்பதைவிடக் காலாகாலம் நிலைத்து நிற்கும் சாதனை படைப்பது முக்கியம் என்பதையும் நமது பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் உணர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு அரசு பெரிய அளவில் தொடர்ந்து நிதி உதவி அளித்து ஊக்கமும் ஆக்கமும் தந்தாக வேண்டும். அடிப்படை விஞ்ஞானத்துக்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில் கல்விக் கொள்கையை அமைத்து உயர் ஆராய்ச்சிகளுக்கு ஊக்கமளித்தால் மட்டுமே இது சாத்தியம். நோபல் விஞ்ஞானி ராமகிருஷ்ணன் கூறியிருப்பதைப் போல, உலக அரங்கில் தலைசிறந்த விஞ்ஞானிகளை உருவாக்கும் வாய்ப்பும் வசதியும் இந்தியாவுக்கு இருக்கிறது. அதை நாம் தெரிந்தே உதாசீனப்படுத்துகிறோமே, ஏன்?

ஞாயிறு, 29 நவம்பர், 2009

வீரம் விலை போகாது, விவேகம் துணைக்கு வராவிட்டால்!


இலங்கை நிகழ்வுகள் குறித்து தான் எழுதாத கருத்துகளுக்கு வைகோ பதில் அளித்திருப்பதை முதல்வர் கருணாநிதி கண்டித்துள்ளார்.
விவேகம் இல்லாவிட்டால் வீரத்தால் பலன் ஏற்படாது என்ற கருத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு நாடகத்தில் தான் எழுதியிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். முதல்வர் நேற்று வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கை வருமாறு:

வார இதழ் ஒன்றில் வந்துள்ள பேட்டியில், ‘இத்தனை ஆயிரம் பேர் ஈழத்தில் இறந்தது பிரபாகரனால் ஏற்பட்டது. நான் மௌனமாக அழுவது யாருக்கு தெரியும்?’ என்கிறாரே கருணாநிதி? என்ற கேள்வி கேட்கப்பட்டு பதில் சொல்லப்பட்டிருக்கிறதே? ‘இத்தனை ஆயிரம் பேர் இறந்தது பிரபாகரனால்’ என்று நான் எழுதவே இல்லை. நான் எழுதாததை எழுதியதாக ஒரு கேள்வியை கேட்க செய்து, அதற்கு என்னை தாக்கி பதில் கூறப்பட்டுள்ளது. நான் எழுதியதை மறைத்துவிட்டு கற்பனையாக அந்த இதழின் சிறப்பு செய்தியாளர் கேள்வி கேட்டு, அப்படி நான் எழுதினேனா என்பதை தெரிந்து கொள்ளாமல் ஒருவர் என்னை தாக்கி பதில் சொல்லியிருப்பது என் மீது வசை பாடுவதற்காக இருவரும் சேர்ந்து ஜோடித்த நாடகம்.

‘சகோதர யுத்தம் நடத்தியதால்தான் பிரபாகரன் தோல்வி அடைந்ததாக கருணாநிதி சொல்கிறாரே?’ என்றும் ஒரு கேள்வி கேட்கப்பட்டு அதற்கும் உங்களை தாக்கி பதில் கூறப்பட்டுள்ளதே? பிரபாகரன் தோல்வி அடைந்ததாக நான் சொல்லவில்லை. சகோதர யுத்தம் காரணமாக நாம் பாதிக்கப்பட்டோம் என்று சொல்லியிருக்கிறேன். அதில் என்ன தவறு என்று தெரியவில்லை. ‘மாவீரன் மாத்தையா’ என்று ஒரு துரோகியை நீங்கள் அழைத்து விட்டதாக அந்த இதழுக்கு பேட்டி அளித்தவர் சொல்கிறாரே? மாத்தையாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவரே அவர்தான். ‘மாவீரன் மாத்தையா’ என்றுதான் அறிமுகம் செய்துவைத்தார்.

‘வீரத்தை பயன்படுத்திய அளவுக்கு விவேகத்தை பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் சொன்னதெல்லாம் அலட்சியப் படுத்தப்பட்டது என்று வேதனைப் படுகிறாரே கருணாநிதி?’ என்ற கேள்விக்கும் பதில் அளித்தவர் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு உங்களை தாக்கி இருக்கிறாரே? அது நான் எழுதிய கருத்துதான். அதில் என்ன தவறு? வீரத்தை பயன்படுத்திய அளவுக்கு என்று நான் கூறியிருப்பதில் இருந்தே, அவர்களின் வீரத்தைப் பாராட்டியிருக்கிறேன் என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால், கண்ணை மூடிக்கொண்டு நம்மை தாக்க வேண்டும் என்ற வெறி கொண்டவர்களுக்கு அப்படித்தான் பதிலளிக்க தோன்றும். வீரம் விவேகம் பற்றி நான் இப்போது கூறவில்லை. பல ஆண்டுகளுக்கு முன் ‘சாக்ரடீஸ்’ ஓரங்க நாடகத்திலேயே ‘வீரம் விலை போகாது, விவேகம் துணைக்கு வராவிட்டால்! தீட்டிய வாளும் தினவெடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டியும் மாத்திரம் போதாது தீரர்களே! இதோ நான் தரும் ஆயுதத்தை எடுத்துக்கொள்ளுங்கள்! அறிவாயுதம்! அறிவாயுதம்!’ என எழுதியிருக்கிறேன்.

அந்த வசனத்தை பல மேடைகளில் பேசிக் காட்டியவர் இப்போது இழித்துரைக்கிறார். எனக்கு இன்னும் அந்த பேச்சுதான் நினைவில் நிற்கிறது.
ஒரே நிகழ்ச்சியில் பேசியதற்காக இரண்டு பேரை கைது செய்து, ஒருவரை விடுதலை செய்து விட்டு, தன் மீது மட்டும் வழக்கு போட்டிருப்பதாக உங்கள் மீது குற்றம் சொல்கிறாரே? ஒரே நிகழ்ச்சியில் பேசியதற்காக கைது செய்யப்பட்டாலும், இருவரும் என்னென்ன பேசினார்கள் என்ற விவரத்தை அறிந்து, தவறாக பேசாதவரை வழக்கிலிருந்து விடுவித்து விட்டு, தவறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுப்பது முறைதானே? இதில் சட்டத்தை வளைப்பதற்கு என்ன இருக்கிறது? சண்டித்தனமாக பேசி விட்டு, பிறகு எதற்காக புலம்ப வேண்டும்? ‘பிரபாகரனால்தான் இவ்வளவு கஷ்டங்கள் வந்தது என்று கருணாநிதி சொல்கிறார் என்றால், அவர் சிங்கள அரசாங்கத்தின் கொள்கை பரப்பு செயலாளராக மாறிவிட்டதையே காட்டுகிறது’ என்று பேட்டியாளர் சாடியிருக்கிறாரே? அப்படி நான் கூறவில்லை.

24ம் தேதி எழுதிய ஒரு பதிலில்கூட ‘விடுதலைப் போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள் நீரை பொழிகின்றன. அதே நேரம் இளந்தலைவர் ராஜீவ் காந்தியும், அமிர்தலிங்கமும், யோகேஸ்வரனும், முகுந்தனும், சிறீ சபாரத்னமும், பத்மநாபாவும் கொல்லப்பட்டபோது அவர்களை இழந்த மனைவி மக்களும், உற்றார் உறவினரும், நண்பர்களும் கண்ணீர் பெருக்கியபோது அவர்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்துவதற்கு எனக்கு உரிமை இல்லையா?’ என்று எழுதினேன். இலங்கைத் தமிழர்களுக்காகத்தான் நான் கண்ணீர் வடிக்கிறேன். அதில் புலிகளும் இருக்கிறார்கள், அவர்களின் ஆதரவாளர்களும் இருக்கிறார்கள், எந்த போராளிக் குழுவிலும் சேராத அப்பாவிகளும் இருக்கிறார்கள் என்பதுதானே உண்மை.
புலிகளுக்கு தோல்வி ஏற்பட்டதை நினைத்து மௌனமாக குதூகலித்தவர் நீங்கள் என்று சொல்லியிருக்கிறாரே?

மனசாட்சியை விற்று விட்டவர்கள் அப்படித்தான் கூறுவார்கள். ஈழ தமிழருக்காக 1956 முதல் குரல் கொடுத்தவன் நான். அவர்களுக்காக சிறை சென்றவன். நான் சிறைபட்டதற்காக பல இளைஞர்கள் தீ வைத்துக் கொண்டு தங்கள் இன்னுயிரை போக்கிக் கொண்டார்கள். சட்டமன்ற உறுப்பினர் பதவியை நானும் பேராசிரியரும் இலங்கை தமிழருக்காக ராஜினாமா செய்தோம். புலிகளுக்கு உதவியதாக காரணம் கூறப்பட்டு எனது ஆட்சியே கலைக்கப்பட்டது & ஒருமுறை அல்ல, இரண்டு முறை. விடுதலை புலிகளுக்கும் நிதி வசூலித்து கொடுக்க முன்வந்தேன். ஆனால் அவர்கள் வாங்கிக் கொள்ளவில்லை. இன்னும் பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். ஆனால் புலிகளின் தலைவரை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வர சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவை இவர் நேற்றுகூட சந்தித் திருக்கிறார். புலிகளை பற்றி ஜெயலலிதா பேசாத பேச்சா? அவரின் இனிய சகோதரர் இவர். இவர் கூறுகிறார், புலிகளுக்கு தோல்வி ஏற்பட்டதை கண்டு நான் குதூகலித்ததாக!

தமிழ்ச் செல்வன் மறைந்தபோது நான் கண்ணீர் கவிதை எழுதினேன். அதனை கண்டித்து அறிக்கை விட்டவர் ஜெயலலிதா. சந்திரஹாசனையும், பாலசிங்கத்தையும், சத்யேந்திராவையும் தமிழக காவல்துறை கைது செய்து நாடு கடத்தியபோது, அதை நிறுத்தாவிட்டால் பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும் என்று தி.மு.க. அறிவித்து போராட்டம் நடத்தியது. அதன் காரணமாக நாடு கடத்தும் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. அப்படிப்பட்ட என்னைப் பார்த்து நான் புலிகள் படுகின்ற துன்பத்தை கண்டு மகிழ்ச்சி அடைவதாக பேட்டி கொடுக்கிறார்.

அந்த வார இதழும் அதை வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறது. ஒரு வகையில் எனக்கோர் மகிழ்ச்சி. நாம் பிரிவினை கேட்டு ‘தமிழ்நாடு தமிழருக்கே & திராவிட நாடு திராவிடருக்கே!’ என முழங்கியபோது, ‘எலி வளை எலிகளுக்கே’ என்று கேலிச் சித்திரம் வரைந்து நம்மை கேலி செய்த ஏடு அது. அந்த காலம் மாறி, இன்று எலிகள் அல்ல புலிகள் என்று ஏற்றுக்கொண்டிருப்பது & அதுவும் தமிழ் ஈழம் கேட்கிற அளவுக்கு மாறியிருப்பது மகத்தான மாறுதல். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

சனி, 28 நவம்பர், 2009

வெளிநாடுகளில் அரசியல் கட்டமைப்பு ஏற்படுத்தி பிரபாகரன் வழிகாட்டலில் தொடர்ந்து போராடுவோம்: விடுதலைப்புலிகள் மாவீரர் தின அறிவிப்பு


உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் நேற்று மாவீரர் தினத்தை எழுச்சியுடன் கடைபிடித்தனர். இங்கிலாந்தில் நடந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கனடா, ஆஸ்திரேலியா, டென் மார்க், பிரான்ஸ், அமெரிக் காவிலும் மாவீரர் தின நிகழ்ச்சிகள் எழுச்சியாக நடந்தன.
ஒவ்வொரு ஆண்டும் மாவீரர்தின உரையை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வன்னிப் பிரதேசத்தில் நிகழ்த்துவர். கடந்த ஆண்டு வான்புலிகளின் ஹெலி காப்டர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்திய பிறகு பிரபாகரன் வீரஉரையாற்றினார். ஆனால் இந்த ஆண்டு விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் சார்பில் மாவீரர் தின உரை நேற்று வெளியிடப்பட்டது.
ஈழத்தமிழ் இனம் வரலாற்று ரீதியாக எவ்வாறு முடக்கப்பட்டது என்பது அந்த உரையில் தெளிவாக கூறப்பட்டிருந்தது. தமிழர்களின் நிலப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்ட விதமும் கூறப்பட்டிருந்தது.
சிங்களர்களின் சூழ்ச்சிக்கு உலக நாடுகள் அமைதியாகி விட்ட நிலையில் அடுத்து செய்யப்போகும் நடவடிக்கைகள் குறித்து இந்த உரையில் விடுதலைப்புலிகள் தெளிவுப்படுத்தி உள்ளனர்.

அந்த மாவீரர் தின உரையின் ஒரு பகுதி வருமாறு:-
எமது பாசமிகு தமிழ் மக்களே, வன்னியில் நிகழ்ந்து முடிந்த மனிதப் பேரழிவைத் தொடர்ந்து எமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் தொடர்ந்து கொண்டிருக்கும் மக்களின் பேரவலத்தை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாகவும் எமது அரசியல் ராஜதந்திர நகர்வுகளை சர்வதேசத்தில் விரிவாக்கிக் கொண்டிருக்கிறோம். எமது அமைப்பின் அரசியற்கட்டமைப்பை வெளி நாடுகளில் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
இந்தச் செயற்பாடுகளையும் வழிமுறைகளையும் கூட குழப்புவதற்கும் ஒடுக்குவதற்கும் இலங்கை அரசுதரப்பு மிகக் கடுமையான முயற்சியில் ஈடுபடுகின்றது. மக்கள் ஜனநாயக வழியில் தமது எண்ணங்களை வெளிப்படுத்தவும் செயற்படுத்தவும் முயற்சிப்பதைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையிலேயே சிங்களப் பேரினவாதம் இன்றுள்ளது.
இலங்கை சுதந்திரமடைந்ததாகச் சொல்லப்படும் நாளிலிருந்து, மாறி மாறி பதவிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் அடையாளத்தை அழித்து தமிழினத்தை இல்லாது ஒழிக்க வேண்டுமென கங்கணம் கட்டி நிற்கின்றார்கள். எமது தாயக மக்களின் குரல்வளை நசுக்கப்பட்டு அவர்கள் தமது உணர்வுகளைச் சொல்ல முடியாதவாறு சிங்களப் பேரினவாத அரசு தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறது. எமது மக்களுக்கு நீதியான, நியாயமான, கவுரவ தீர்வைத் தருவதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் எப்போதுமே தயாராக இருந்ததில்லை.
நீண்டகால அடிப்படையில் எமது தாயக விடுதலைக்கான போரினை பல்வேறு வடிவங்களில் உள்ளக வெளியக சூழல்களை கருத்தில் கொண்டு முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு.
அதே நேரம் தாயகத்திலுள்ள அனைத்து தமிழ் முஸ்லிம் கட்சிகளும் எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக கடந்த காலத்தில் செயற் பட்டது போன்று இனிவரும் காலங்களிலும் ஒற்றுமையோடும் தன்னல மற்றும் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

எமது லட்சியப்பாதை அனைவரையும் அரவணைத்து புதிய சூழல்கள், புதிய நட்புகளை தேடி உலக தமிழர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு எமது விடுதலையினை வென்றெடுக்க முன்வருமாறு இந்த புனித நாளில் கேட்டுக்கொள்கின்றோம்.
புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ உறவுகளே, தமிழ் நாட்டு உடன் பிறப்புக்களே, உலகெலாம் பரந்து வாழும் தமிழ்மக்களே, மாவீரர்களின் லட்சியக்கனவு நிறைவேறும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம். சிங்களத்துடன் இனிமேலும் சேர்ந்து வாழ முடியாது. சிங்களம் நீதி வழங்கும் என்று நினைப்பது பேதைமை.

சிங்கள தேசத்தை நம்பி ஏமாறுவதற்கு உலகத் தமிழினம் தொடர்ந்தும் தயாராக இல்லை.
தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த முப்பதினா யிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகங்களும் இப்போராட்ட காலத்தில் கொல்லப்பட்ட ஓர் லட்சத்திற்கும் மேற்பட்ட எமது மக்களின் இழப் புகளும் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் விடுதலைத் தீயை மூட்டி யுள்ளது. காலம் காலமாக சிங்களப் பேரினவாதி களால் ஏமாற்றப்பட்ட கசப்பான வரலாறுகளை நினைவிற்கொண்ட எமது விடுதலைப் பயணத்தைத் தொடர்வோம்.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் வழிகாட்டலில், எந்தத் தடைகள் வந்தபோதும் எமது உரிமைகளுக்காக இறு திவரை போராடிய மாவீரர்கள் காட்டிய பாதையில் தொடர்ந்தும் போராடி தமிழீழத் தனியரசைக் கட்டியமைப்போம் என இந்நாளில் நாம் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோம்.
இவ்வாறு அந்த உரையில் கூறப்பட்டுள்ளது.

தியாக திருநாள் வாழ்த்துக்கள்

என் மதிப்பிற்குரிய,
அன்பு வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும்
என் இனிய " தியாக திருநாள் (ஹஜ்ஜு பெருநாள் )
வாழ்த்துக்கள்.

என் இடுகைகள் வெளி வர காரணமா இருந்த இருக்கின்ற
தமிழ்மணம், தமிலிஷ், திரட்டி, தமிழ்வெளி, போன்ற
இணைய தளத்திற்கும் என்னுடைய நெஞ்சர்ந்த்த
நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

அனைவருக்கும் " இனிய தியாக திருநாள் "
வாழ்த்துக்கள்.
அன்புடன்
அபுல்பசர்

வெள்ளி, 27 நவம்பர், 2009

இயற்கையை நேசிப்போம்:பாதுகாப்போம்


அமெரிக்கர்களைப்போல உலகில் உள்ள அனைவரும் வாழ வேண்டும் என்றால் தற்போது உள்ளதைப் போன்று 5 பூமிகள் இருக்க வேண்டும் என அமெரிக்காவில் வாஷிங்டனை மையமாகக் கொண்டு செயல்படும் "குளோபல் ஃபுட்பிரிண்ட் நெட்வொர்க்' என்ற அமைப்பு ஆய்வு மேற்கொண்டு கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஆவணத்தில் தெரிவித்துள்ளது.நாம் வெளியிடும் கரியமில வாயுவை பூமி மறுசுழற்சி செய்து வெளியிடும் வேகத்தைவிட 44 சதவீதம் வேகமாக இயற்கை வளங்களை நாம் பயன்படுத்துகிறோம். அதாவது ஓராண்டில் நாம் பயன்படுத்திய இயற்கை வளங்களை மறு சுழற்சி செய்து மறுபடியும் நமக்கு அளிக்க இயற்கைக்கு ஒன்றரை ஆண்டுகள் தேவைப்படுகிறதாம்.இதேரீதியில் நாம் செயல்பட்டால், 2030 வாக்கில் தற்போது உள்ளதைப் போன்று இயற்கை வளங்களுடன் கூடிய இன்னும் ஒரு பூமி தேவை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.1961-ல் உலக இயற்கை வளத்தில் பாதி அளவுக்குத்தான் பயன்படுத்தியுள்ளோம். சராசரி அமெரிக்கர் 23 ஏக்கர் பரப்பளவில் உள்ள இயற்கை வளங்களை அனுபவிக்கிறார். சராசரி ஐரோப்பியர் அதில் பாதி அளவு பரப்பளவில் உள்ள இயற்கை வளங்களை அனுபவிக்கிறார்.ஆனால், மலாவி, ஹைதி, நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளில் உள்ளவர்கள் 1.25 ஏக்கர் பரப்பளவில் உள்ள இயற்கை வளங்களையே அனுபவிக்கின்றனர். இதனால், அந்த நாடுகளில் அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியவில்லை என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.உலக மக்கள்தொகையில் 4 சதவீதம் மட்டுமே உள்ள அமெரிக்கர்கள், 25 சதவீதம் கரியமில வாயுவை வெளியேற்றுகிறார்கள் என மற்றோர் ஆய்வு தெரிவிக்கிறது. இயற்கையை மனிதன் இப்படிச் சுரண்டுவதால் ஓசோன் படலம் சிதைவு, புவி வெப்பமடைதல், போதிய மழையின்மை, பனிக்கட்டி உருகுதல் போன்றவை நிகழ்கின்றன.பனிக்கட்டி உருகுவதால் கடல் நீர்மட்டம் 0.2 மீ. முதல் 1.5 மீ. வரை உயரக் கூடும் என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் மாலத்தீவு போன்ற நாடுகள் கடலில் மூழ்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சம் ஏற்பட்டுள்ளது.இயற்கையைச் சுரண்டியதால் ஏற்பட்ட விளைவுகளை நமது தமிழகத்தில் ஊட்டி, குன்னூர் பகுதிகளில் அண்மையில் கண்டோம். மழை நீர்ப் பாதையை அடைத்தது, வனங்களை அழித்து கான்கிரீட் காடுகளாக மாற்றியது, மரங்களை வெட்டி தேயிலைத் தோட்டங்களாக்கியது, சட்டவிரோதமாக கல்குவாரிகளை நடத்துவது போன்றவற்றால் சமீபத்தில் பெய்த பேய் மழைக்கு நிலச்சரிவு, பூமி பிளவு போன்றவை ஏற்பட்டு 40-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் வீடு,வாசல்களை இழந்து தவித்து வருகின்றனர்.நமது நாட்டிலும் 33 சதவீதம் வனப் பகுதி இருக்க வேண்டிய இடத்தில் 20 சதவீதத்துக்கும் குறைவான வனப் பகுதியே உள்ளது.இப் பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன? "இயற்கை அன்னை நமது தேவைகளைப் பூர்த்தி செய்வாள். ஆனால், நமது பேராசைகளைப் பூர்த்தி செய்ய மாட்டாள்' என்றார் மகாத்மா காந்தி."போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' போன்றவற்றை நமது முன்னோர் சிறுவயதிலேயே மனங்களில் விதைத்தனர்.இயற்கையை வழிபடுவதை நமது முன்னோர்கள் நமக்குச் சொல்லிக் கொடுத்துள்ளனர். நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களை வழிபட வழிவழியாக நமது மூதாதையர்கள் கற்பித்து வந்துள்ளனர். தமிழ்நாட்டில் பஞ்சபூதத் தலங்கள் உள்ளதே இதற்கு சாட்சி.பூமியைத் தாயாகக் கருதி பூஜை செய்வது, இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்வது போன்றவை அதன் ஓர் அங்கம்தான். ஆனால், குறுகிய காலத்தில் அதிகப் பணம்சம்பாதிக்க ரசாயன உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்தி உணவு அளித்த தாயையே மலடாக்க இன்று நாம் துணிந்துவிட்டோம்.கங்கா மாதா, காவிரித் தாய் என நதிகளைத் தாயாகக் கருதும் வழக்கம் நம் நாட்டில்தான் உண்டு. குளத்திலோ, ஆற்றிலோ எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது, மலஜலம் கழிப்பது போன்றவை பாவம் என கற்பித்தனர். ஆனால், பாவங்களைப் போக்குவாள் என்று கருதப்படும் கங்கையைத் தூய்மைப்படுத்த பல்லாயிரம் கோடி ரூபாய் வேண்டும் என மத்திய அரசு இப்போது திட்டம் தீட்டி வருகிறது.மரங்களையும் தெய்வமாகக் கருதிய மக்களைக் கொண்ட நாடு இது. ஆனால், இன்று சகட்டுமேனிக்கு மரங்கள் வெட்டப்படுகின்றன. இந்த நிலை நீடித்தால், வாழ்வதற்கே தகுதியில்லாத பூமியைத்தான் நமது சந்ததிக்கு விட்டுச் செல்ல வேண்டியிருக்கும். நாம் இஷ்டப்படி வாழ்ந்துவிட்டு இயற்கைக்கு லஞ்சம் கொடுத்துத் தப்பிக்க முடியாது.இப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண அரசுகளிடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. ஆனால், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் பொறுப்பை வளரும் நாடுகள் மேல் சுமத்தப் பார்க்கின்றன. அரசாங்கம் ஒருபக்கம் முயற்சிகளை மேற்கொண்டாலும், நாமும் நம் பங்குக்கு சில விஷயங்களைச் செய்ய முடியும்."அறத்தை நாம் காத்தால் அறம் நம்மைக் காக்கும்' என்ற சொற்றொடர் ஒன்று உண்டு. அதுபோல, "இயற்கையை நாம் காத்தால் இயற்கை நம்மைக் காக்கும்'.அமெரிக்க பாணி வாழ்க்கை முறையைப் பின்பற்றி நுகர்வோர் கலாசாரத்தில் மூழ்காமல், நமது தேவைகளைக் குறைத்துக் கொள்ளலாம்; நீர் நிலைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தலாம். பிளாஸ்டிக் பயன்பாடு சமூகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. பிளாஸ்டிக்கைப் பயன்படுத்த மாட்டேன் என உறுதி ஏற்கலாம்.மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தலாம். பெட்ரோல் பயன்பாட்டால் மாசு கடுமையாக அதிகரித்து வருகிறது. தவிர்க்கமுடியாத நேரம் தவிர மற்ற நேரங்களில் பொது வாகனப் போக்குவரத்தைப் பயன்படுத்தலாம். வாய்ப்புள்ள இடங்களில் மரங்களை நட்டுப் பராமரிக்கலாம்.இப்படி அனைவரும் செயல்படத் தொடங்கினால், சுற்றுச்சூழல் மாசுபடாத உலகை விட்டுச் சென்றோம் என நமது அடுத்த தலைமுறை நம்மை வாழ்த்தும்.

துபாய் ரியல் எஸ்டேட் சந்தையில் வீசியது புயல்.., இந்திய பங்குச் சந்தையில் பாதிப்பு


துபாய் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏற்பட்ட நிதி பாதிப்பு உலக அளவில் பெரும் பாதிப்பை சந்தையில் ஏற்படுத்தியது. இந்திய பங்குச் சந்தையில் அதன் எதிரொலியாக 600 புள்ளிகள் இன்று மதியம் சரிந்தன. "துபாய் வேர்ல்ட்' என்ற அமைப்பு ஐக்கிய அரபு அரசு ஆதரவு பெற்றது. பெரிய நிதிச்சந்தை நிறுவனம். துபாய் ஷேக் முகமது பின் அல் மக்தூம் சொத்தை நிர்வகிக்கும் நிறுவனம் .மாபெரும் இந்த நிறுவனத்தின் துணை நிறுவனம் "நக்ஹீல்' என்பதாகும். பிரமாண்ட அடுக்குமாடிக் கட்டடங்கள், மற்றும் பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் தொடர்புடைய இந்த நிறுவனம் பொருளாதார சிரமத்தில் சிக்கியது. அதை அறிந்த ஷேக் உடனடியாக அந்த நிறுவனத்தை சிக்கனப்படுத்த நிர்வாகத்தை மாற்றினர். அதற்குள் 5900 கோடி டாலர் ( 2.70 லட்சம் கோடி ரூபாய்) நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் திணறுகிறது என்ற தகவல் கசிந்தது. உரிய அளவு வர்த்தகத்திற்கு பணம் இல்லை.

துபாய் அரசிடம் பணத்திற்கு பஞ்சம் இல்லை, சமாளித்து விடலாம் என்று அறிவித்த போதும் உலக அளவில் ரியல் எஸ்டேட் , மற்றும் வங்கிகள் சந்தையை வெகுவாகப் பாதித்தது. அது பாரீசில் எதிரொலித்தது, ஓரளவு ஜப்பான் சந்தை தப்பியது. ஐரோப்பிய சந்தைகள் அடி வாங்கின. அமெரிக்க வங்கிகள் பாதிப்படைந்திருக்கிறதா என்பது தெரியவில்லை. என்றுமே "துபாய் வேர்ல்டு' அமைப்பில் சூரியன் அஸ்தமிக்காது என்ற கோஷம் இப்போது அர்த்தமற்றதாக மாறிவிட்டது. இந்த நிலையை உணர்ந்து சவுதி வங்கிகள் தங்கள் வங்கிப் பணப் பரிவர்த்தனையை இவர்களுடன் நிறுத்திக் கொண்டன, இந்தோனேஷியாவில் இருந்து இங்கே வந்த "இஸ்லாமிய நிதி' கதி என்ன ஆகும் என்று தெரியவில்லை. இதன் பாதிப்பால் அபாரமாக ஏறிய தங்கத்தின் விலையும் சற்று சரிந்தது.

பங்குச் சந்தை : மும்பையில் பங்குச் சந்தை துபாய் புயலில் சிக்கி அதிக அளவு இழப்பைச் சந்தித்தது. திடீரென வர்த்தகத்தில் 590 புள்ளிகள் சரிந்தன. அப்போது, குறியீட்டெண் 16,264.86 ஆக இருந்தது. "நிப்டி'யும் 176 புள்ளிகள் இழந்தது. துபாய் கட்டுமானத்துடன் தொடர்பு கொண்ட எல் அண்ட் டி பங்குகள் 4.89 சதவீதம் சரிந்தது. ஐ.சி.ஐ.சி.ஐ., பங்கு மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சரிந்தன.

இன்னும் நான்கு அல்லது ஐந்து நாளில் ஐக்கிய அரபு எமிரேட் அரசு எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்து இதன் பாதிப்பு குறித்த மற்ற தகவல்கள் வெளிவரும்.

பாதிப்பு நமக்கு வருமா? "துபாய் ரியல் எஸ்டேட்டில் ஏற்பட்ட பாதிப்பு அங்கு வாழும் வெளிநாட்டு இந்தியர் தங்கள் பணத்தை இங்கு அனுப்பும் அளவு குறையாது, ஏனெனில், பெரிய பாதிப்பு ஏற்பட்டிருந்த போது அங்கிருந்து வரும் பண அளவு குறையவில்லை' என்று நிதித்துறைச் செயலர் அசோக் சாவ்லா தெரிவித்தார். அதே சமயம் எந்த அளவு இந்த பாதிப்பு அங்கே ஏற்பட்டிருக்கிறது என்பதை நிதித்துறை முழுவதும் ஆராயும் என்று கூறினார். ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரெட்டி கூறுகையில் , "மத்திய கிழக்கில் இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்னையால் நமக்கு பாதிப்பு பெரிய அளவில் வராது ' என்றார்.

தோண்ட,தோண்ட, ஊழல் புதையல்

சென்னை விமான நிலைய கார்கோ (சரக்கு) பிரிவில் சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய சோதனையில், கடந்த ஆண்டில் அரசுக்கு சேர வேண்டிய பல கோடி ரூபாய் கஸ்டம்ஸ் வரி தொகையை, அதிகாரிகள் மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ., அதிகாரிகள், கார்கோ பிரிவில் தங்கள் சோதனையை நேற்றும் தொடர்ந்தனர்.



சென்னை விமான நிலையத்தில் நடந்த சி.பி.ஐ., சோதனையில் கைது செய்யப்பட்ட அதிகாரிகளிடம் நடத் திய விசாரணையின் அடிப்படையில் ஏர் கார்கோ காம்ப்ளக்சில் சி.பி.ஐ., அதிகாரிகள் தொடர்ந்து சோதனையிட்டு வருகின்றனர். இந்த வழக்கில், மேலும் நான்கு கஸ்டம்ஸ் அதிகாரிகளும், நான்கு ஏஜன்டுகளும் கைதாவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சி.பி.ஐ., அதிகாரிகளால் முடக்கி வைக்கப்பட்டுள்ள பார்சல்கள் குறித்த விசாரணை நேற்று துவங்கியது. அந்த பார்சல்கள் எந்த நிறுவனங்களுக்கு சொந்தமானவை; அவற்றின் ஏற்றுமதி, இறக்குமதியில் என்னென்ன முறைகேடுகள் நடந்துள் ளன; யார், யார் சம்பந்தப்பட்டுள்ளனர்; எவ்வளவு லஞ்ச தொகை பேரம் பேசப்பட்டது என்பது குறித்து விசாரணை தீவிரமாகி உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் சென்னை விமான நிலைய கார்கோ மூலம், 22 ஆயிரத்து 560 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கையாளப்பட் டுள்ளன. இந்த பொருட்களுக்கு உண்மையான வரி விதிப்பு விதிக்கப்பட்டிருந்தால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும். ஆனால், பத்தில் ஒரு பங்கு கூட வரியாக வசூலிக்கப்படவில்லை. இது தான் தற்போதைய விசாரணை தீவிரத்திற்கு காரணம்.



வழக்கமாக, ஏர் கார்கோவில் இருந்து பொருட்களை டெலிவரி எடுப்பது, இரவு 7 மணிக்கு துவங்கி நள்ளிரவு 1 மணி வரை நடக்கும். வெளியாட்கள் தங்களை கண்காணிக்கக் கூடாது என்பதற்காக கஸ்டம்ஸ் அதிகாரிகள் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்துள்ளனர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 23ம் தேதி மாலை சரியாக 6 மணிக்கு ஏர் கார்கோ பிரிவிற்குள் சோதனை தொடங்கிய போது, 30 பார்சல்கள் டெலிவரி செய்யப்படாமல் கிடந்தன. அதில், உபயோகப்படுத்தப்பட்ட பழைய துணி என்று குறிப்பிடப்பட்டிருந்த பார்சல் ஒன்றில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், தங்க கட்டிகள் இருந்தன. மேலும், சில பார்சல்களில் விலை உயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள் காணப்பட்டன. இந்த வகையில், பெரும்பாலான பார்சல்கள் உரிய மதிப்பு குறிப்பிடாமல், குறைந்த மதிப்பிட்டு, கேட்பாஸ் தயார் செய்யப்பட்டுள்ளதையும், இதன் மூலம் அரசுக்கு சேர வேண்டிய பல லட்சம் ரூபாய் கஸ்டம்ஸ் வரி மோசடி செய்யப்பட்டிருப்பதையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்த பார்சல்கள் அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டன.



இந்நிலையில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்றும் தங்கள் சோதனையை தொடர்ந்தனர். அப்போது, முடக்கி வைக்கப்பட்ட பார்சல்களின் உரிமையாளர்களை போன் மூலம் தொடர்பு கொண்டு, உரிய வரியைச் செலுத்திவிட்டு டெலிவரி எடுக்கும்படி உத்தரவிட்டனர். முதற்கட்டமாக, மூன்று பார்சலுக்கு சொந்தமான நிறுவனங்கள் நேரடியாக வந்து, உண்மையான மதிப்பிற்கு வரி கட்டிவிட்டு பார்சல்களை டெலிவரி எடுத்துச் சென்றன. இதேபோல், மற்ற பார்சல் உரிமையாளர்களையும் வரவழைத்து, முடக்கப்பட்டுள்ள பார்சல்கள் குறித்த விசாரணையில் சி.பி.ஐ., அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சி.பி.ஐ., சோதனையைத் தொடர்ந்து சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் பிரிவில் நடந்து வரும் லஞ்ச, லாவண் யம் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. பல புகார் மனுக்கள் பிரதமருக்கும், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இதனால், கஸ்டம்ஸ் பிரிவில் சி.பி.ஐ., தொடர்ந்து சோதனை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



தலைக்கு இரண்டு "புல்' லஞ்சம்: சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து சென்னைக்கு பொருட்களை கடத்தும் ஏராளமான, "குருவி'கள் உள்ளனர். இவர்கள், பெரிய வியாபாரிகளின் கண்காணிப்பில் உள்ளனர். தினசரி 100 பேர், "குருவி'களாக சென்னை விமான நிலையத்திற்கு வருகின்றனர். இவர்களிடம் சில கஸ்டம்ஸ் அதிகாரிகள் லஞ்சமாக பணத்தை பெறுவதில்லை. மாறாக, ஒவ்வொரு, "குருவி'யும் தலா இரண்டு "ஜானிவாக்கர்' பிராண்டு மது பாட்டில்களை கொடுத்துவிட வேண்டும். ஒவ்வொரு பாட்டிலும் 1,200 ரூபாய் மதிப்புடையது. இவ்வாறு தினசரி சேகரிக்கப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட பாட்டில்களை விற்பதன் மூலம் பல ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்கிறது. இந்த பாட்டில்களை வாங்குவதற்காகவே சென்னை நகரில் பல ஏஜன்டுகள் செயல்பட்டு வருவதாகவும், அவர்களும் சி.பி.ஐ.,யின் பார்வையில் சிக்கியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.



கோடிகளில் புரண்டனர்: சென்னை விமான நிலைய கார்கோவில், முறைகேடாக வரும் சரக்குகளை வெளியே எடுத்துச் செல்ல கஸ்டம்ஸ் அதிகாரிகள் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்று வந்தனர். இது குறித்து சி.பி.ஐ., நடத்திய சோதனையில், ஒன்பது கஸ்டம்ஸ் அதிகாரிகள், இரண்டு ஏஜன்டுகள் உட்பட 11 பேர் கைது செய்யப் பட்டனர். அவர்களிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தினர். இதில், மற்ற அதிகாரிகளின் முறைகேடுகள் குறித்து அவர்கள் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. சி.பி.ஐ., பார்வையில் விழுந்துள்ள அந்த நான்கு அதிகாரிகளில், இரண்டு அதிகாரிகளுக்கு சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்பில் வீடுகளும், வெவ்வேறு மாவட்டங்களில் விவசாய நிலங்களும் இருப்பது தெரியவந்துள்ளது.

வியாழன், 26 நவம்பர், 2009

வரலாற்று சம்பவம்: பூட்டோ தூக்கில் போடப்பட்டார்; கருணை காட்ட ஜியா மறுப்பு


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பூட்டோ, தூக்கில் போடப்பட்டார். அவரிடம் கருணை காட்டும்படி உலகத் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை, அதிபர் ஜியா நிராகரித்தார்.
தன் அரசியல் எதிரியை கொலை செய்ய உத்தரவிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், பூட்டோவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
7 அடி அகலமும், 10 அடி நீளமும் உள்ள சிறையில் பூட்டோவை அடைத்து வைத்து இருந்தார்கள். இந்த அறைக்குள் சூரிய வெளிச்சமே தெரியாது. இதை பூட்டோவின் நெருங்கிய நண்பரான பிர்ஓடா என்பவர் பூட்டோவை சிறையில் சந்தித்துவிட்டு திரும்பிய பிறகு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "பூட்டோ உணவு எதையும் சாப்பிடவில்லை. தேன் மட்டும் சாப்பிடுகிறார். சில நேரம் காபி குடிக்கிறார். இதனால் பூட்டோ உடல் எலும்பு கூடு போல இருக்கிறது. முகச்சவரம் செய்யாததால் தாடி வளர்ந்து இருக்கிறது" என்று தெரிவித்தார். விசாரணைக்காக ஒருமுறை பூட்டோ கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டபோது கண் கலங்கியபடி காட்சி அளித்தார்.
"இந்த நாட்டுக்கு நான் எந்த தீமையும் செய்யவில்லை. என்னை சிறையில் சித்ரவதை செய்கிறார்கள்" என்று அவர் முறையிட்டார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அதை ரத்து செய்யும்படி அதிபருக்கு கருணை மனு போட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதை பூட்டோ ஏற்கவில்லை.
கருணை மனு தாக்கல் செய்தால், குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ஆகிவிடும். ஆகவே கருணை மனு தாக்கல் செய்யமாட்டேன்" என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். அதோடு தனது உறவினர்களும், நண்பர்களும் தனக்காக கருணை மனு கொடுக்கக்கூடாது என்றும் தடுத்துவிட்டார்.
ஆனால் பூட்டோவின் அக்காள் முனுவார் பூஸ்லாம் என்பவர் ஜியாவுக்கு கருணை மனு அனுப்பினார். அதனை கேள்விப்பட்ட பூட்டோ மிகவும் கோபம் அடைந்தார். சாகும் வரை அவர் தனது உறுதியில் இருந்து மாறவில்லை. தூக்கு மேடை ஏற அவர் அஞ்சவில்லை.
பூட்டோவுக்கு 2 மனைவிகள். முதல் மனைவி பெயர் அமீர் பேகம். 2_வது மனைவி பெயர் நசரத் இக்பாகனி. ஈரான் நாட்டைச் சேர்ந்தவர். பூட்டோவுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் இருந்தனர். மகன்கள் லண்டனில் தங்கி படித்து வந்தனர்.
பூட்டோ சிறையில் அடைக்கப்பட்டதும் மனைவி நசரத்தும், மகள் பெனாசிரும் தீவிர அரசியலில் ஈடுபட்டார்கள். இதனால் இந்த 2 பேரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
தூக்கில் போடப்படுவதற்கு முன்தினம் பூட்டோவை கடைசி முறையாக வந்து பார்க்குமாறு பூட்டோவின் மனைவி நசரத், மகள் பெனாசிர் ஆகியோருக்கு பாகிஸ்தான் அரசாங்கம் கடிதம் அனுப்பியது.
அதன்படி அவர்கள் 3_4_1979 அன்று சந்தித்தனர். இதற்காக இருவரும் போலீஸ் வேன் மூலம் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வழக்கமாக பூட்டோவை சந்திக்க 1 மணி நேரம் தான் கொடுக்கப்படும்.
ஆனால் இது கடைசி சந்திப்பு என்பதால் 3 மணி நேரம் ஒதுக்கப்பட்டது. பூட்டோவுடன் நசரத்தும், பெனாசிரும் 3 மணி நேரம் தங்கி இருந்தனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த இருவரையும் சந்திப்பதற்கு யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. போலீஸ் வேனுக்குள் இருந்த நசரத், பெனாசிர் இருவரும் கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருந்தனர். பூட்டோவை பார்க்கச்சென்ற குடும்பத்தினர் கதறி அழுதபோது, "எனக்காக யாரும் வருத்தப்படவேண்டாம். தூக்கு மேடை ஏற நான் பயப்படவில்லை" என்று பூட்டோ கூறினார்.
பூட்டோவுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டதுமே அவர் உயிரைக் காப்பாற்ற உலக நாடுகள் பலவற்றின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அவர்கள் அனுப்பிய கடிதங்களை அதிபர் ஜியா பார்க்கவே இல்லை. பாகிஸ்தானின் வெளிநாட்டு இலாகா அலுவலகத்திலேயே அந்த கடிதங்கள் வைக்கப்பட்டு இருந்தன.
பூட்டோவுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதில் ஜியா குறியாக இருந்தார். பூட்டோ தூக்கிலிடப்படுவது உறுதி செய்யப்பட்டபின், செவ்வாய்க்கிழமை இரவும் சில வெளிநாட்டு தலைவர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.
ரஷியா, சுவீடன், சீனா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாட்டுத் தலைவர்கள் கடைசி நிமிடத்தில் தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்த அவசர செய்திகளை அனுப்பி வைத்தனர். பிரான்சு ஜனாதிபதி அவசர தந்தி அனுப்பினார். ஆனால் அவைகள் எல்லாவற்றையுமே அதிபர் ஜியா அடியோடு புறக்கணித்துவிட்டு பூட்டோவை தூக்கில் போட்டார்.
தூக்கில் போடப்பட்டபோது பூட்டோவுக்கு 51 வயது தான். பூட்டோவை தூக்கில் போடப்பட்ட செய்தியையும் பாகிஸ்தான் உடனடியாக அறிவிக்கவில்லை. உடலை அடக்கம் செய்தபின்பு 30 நிமிடம் கழித்து பகல் 11_30 மணிக்கே ரேடியோ மூலம் அறிவித்தது.
பொதுவாக, சூரியன் உதிக்கும் நேரத்தில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுவது வழக்கம். ஆனால் பூட்டோவை இரவோடு இரவாக தூக்கில் போட்டு உடலை விடிவதற்கு முன்பே சொந்த ஊருக்கு கொண்டுபோய் விட்டனர். உடல் கொண்டுபோகப்பட்ட விமானத்தில் ராணுவத்தின் காவல் பலமாக இருந்தது.
தூக்கில் போடப்படுவதற்கு முன்னால் பூட்டோ குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டார். கடந்த சில வாரங்களாக அவர் சவரம் செய்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அதனால் தாடி வளர்ந்து இருந்தது. சவரம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயிலில் கையெழுத்து போடும்படி அதிகாரிகள் கூறினார்கள். அதன்படி அவர் கையெழுத்துப் போட்டார்.
பிறகு, பூட்டோவின் கைகளை பின்புறமாக கட்டினார்கள். அதன் பின் பூட்டோ தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறை அதிகாரிகள், ஒரு ராணுவ அதிகாரி, ஒரு மாஜிஸ்திரேட்டு ஆகியோர் உடன் சென்றனர். இந்திய நேரப்படி அதிகாலை 2_30 மணிக்கு பூட்டோ தூக்கில் போடப்பட்டார்.
பூட்டோவை தூக்கில் போட்டவரின் பெயர் _ தாரா மஷியா. இவர் பாகிஸ்தானில் வசிக்கும் கிறிஸ்தவர். தூக்குப்போடுவதையே பரம்பரை தொழிலாக செய்து வந்தவர். அவருக்கு கூலியாக 25 ரூபாய் கொடுக்கப்பட்டது.
அதிகாலை 4 மணிக்கு ஒரு ராணுவ லாரி சிறைச்சாலைக்குள் சென்றது. உடனடியாக பூட்டோ உடலை ஏற்றிக்கொண்டு விமான நிலையத்துக்கு சென்றது. பூட்டோ உடல், சிந்து மாநிலத்தில் உள்ள சுக்கூர் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து தனி விமானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட இருந்த இடத்துக்கு கொண்டு போகப்பட்டது.
பூட்டோ உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம், சிந்து நதிக்கரையில் உள்ளது. பூட்டோவின் தந்தை ஷாநவாஸ் உடல் இங்கு தான் அடக்கம் செய்யப்பட்டது. அதற்கு பக்கத்திலேயே பூட்டோவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
உடல் அடக்கம் நடந்த இடத்துக்கு முதல் மனைவி அமீர் பேகம் வந்திருந்தார். அவர் முஸ்லிம் சம்பிரதாயப்படி முகம் முழுவதையும் மூடி `பர்தா' அணிந்திருந்தார். உடல் அடக்கம் முடிந்ததும் உறவினர்கள் பிரார்த்தனை செய்தார்கள். பூட்டோவை தூக்கில் போட்டதற்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இங்கிலாந்து பிரதமர் கல்லகன் இதுபற்றி கூறியதாவது:-
"பூட்டோவை தூக்கில் போட்டது குறித்து மிகவும் வருத்தப்படுகிறேன். பூட்டோவுக்கு மன்னிப்பு வழங்கும்படி 3 முறை வேண்டுகோள் விடுத்தேன். அதை அலட்சியம் செய்துவிட்டனர்."
இவ்வாறு கல்லகன் கூறினார்.
இந்திரா காந்தி கூறியதாவது:-
"இந்த செய்தி எனக்கு அதிர்ச்சியை தருகிறது. பூட்டோவை கொல்ல வேண்டாம் என்று உலக தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். அதை ஜியா மதிக்காமல் நடந்து கொண்டார். பூட்டோவை தீர்த்துக்கட்டும் இந்த முடிவுக்கு சில வெளிநாட்டு சக்திகளும் காரணமாகும்.
பூட்டோவின் மனைவி நசரத்துக்கும், மகள் பெனாசிருக்கும் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1972_ல் சிம்லாவில் பெனாசிர் என்னை சந்தித்து உரையாடியதை நினைத்து கண் கலங்குகிறேன். பாகிஸ்தான் மக்களுக்கும் என் துயரத்தை தெரிவித்துக்கொள்கிறேன்."
இவ்வாறு இந்திரா காந்தி கூறியிருந்தார்.
ஆனால் மலேசிய முன்னாள் பிரதமரான துங்கு அப்துல் ரகுமான், ஜியாவுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார். "அரசியல் குற்றத்துக்காக தண்டிக்கப்பட்ட முதல் முன்னாள் பிரதமர் பூட்டோ. தேசத்துக்கு தலைமை பொறுப்பு ஏற்பவர்களுக்கு இது ஒரு பாடம்" என்று அவர் தெரிவித்து இருந்தார்.
பூட்டோ சிறையில் இருந்தபோது தன் வாழ்க்கை குறிப்பை எழுதினார். அது பூட்டோவின் மரண சாசனம் போல் அமைந்துள்ளது. அதில் பூட்டோ கூறியிருந்ததாவது:-
"என் எதிரியை கொலை செய்ய உத்தரவிட்டதாக என் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இது அபாண்டமான குற்றச்சாட்டு. சிறையில் வாடி வதங்கி தூக்கு மேடையை சந்திப்பதற்காக நான் பிறந்தவன் அல்ல. ஆயினும் ஒரு நன்றி கெட்ட துரோகியினால் (ஜியா) நான் இன்று தூக்கு மேடையை சந்திக்க இருக்கிறேன்.
நான் அரசியல்வாதி என்பதைத்தவிர, கவிஞன், புரட்சிக்காரன். இப்படியே இவ்வளவு நாட்களும் வாழ்ந்தேன். இனி என் உடலில் இருந்து கடைசி மூச்சு பிரியும்வரை அப்படியே வாழ்வேன்."
இவ்வாறு பூட்டோ குறிப்பிட்டு இருந்தார்.
ராவல்பிண்டியில் பூட்டோ ஆத்மா சாந்தியடைய ஒரு பெரிய பிரார்த்தனைக்கூட்டம் நடந்தது. "லியாகத்பாக்" பூந்தோட்டத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கூடியிருந்தனர். குறிப்பாக பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டத்தை கலைக்க போலீசார் முயன்றபோது, அவர்கள் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. அந்த வழியாகப் போன 3 பஸ்கள் உடைத்து நொறுக்கப்பட்டன.
பூட்டோ தூக்கிலிடப்பட்ட ராவல்பிண்டி சிறைச்சாலை அருகேயும் பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆண்களும், பெண்களும் மாரடித்து அழுதபடி சிறைச்சாலையை நோக்கி சென்றனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பஸ்களையும், லாரிகளையும் தீ வைத்துக் கொளுத்தினார்கள். 6 பஸ்கள் அடியோடு எரிந்து சாம்பலாயின. பாகிஸ்தானின் முக்கிய நகரமான கராச்சியிலும் கலவரம் நடந்தது. கராச்சி நகர எல்லையில் உள்ள "இப்ராகிம் ஹைதிர்" என்ற இடத்தில் பூட்டோ ஆதரவாளர்கள் கூடினார்கள்.
தூக்கிலிடப்பட்ட பூட்டோவுக்காக தொழுகை நடத்தி இறைவனைப் பிரார்த்தனை செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் பாகிஸ்தான் அதிபர் ஜியா_வுல்_ஹக்குக்கு எதிராகவும், ராணுவ அரசாங்கத்துக்கு எதிராகவும் குரல் எழுப்பிக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். போலீஸ் நிலையத்தை தீ வைத்து கொளுத்தினார்கள்.
பூட்டோ தூக்கிலிடப்பட்டபோது நடந்த சம்பவங்கள் பற்றி பாகிஸ்தான் பத்திரிகைகள் பலவித தகவல்களை வெளியிட்டன. அதில் ஒரு தகவல் வருமாறு:-
பூட்டோ தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டவுடன் மஷியா அவரது இரு கால்களையும் கட்டி கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டினான். பூட்டோ கடைசியாகப் பேசினார். "இறைவா! எனக்கு உதவி செய்! நான் நிரபராதி!"
பூட்டோ கடைசியாக இந்த வார்த்தைகளை உச்சரித்தவுடன் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு "சிக்னல்" கொடுக்கப்பட்டது. உடனே பூட்டோவின் காலடியில் இருந்த பகுதி விலகி கீழே சென்றது. அவர் பிணமாக தொங்கினார்.
மொத்தம் 35 நிமிட நேரம் அவர் தூக்கில் தொங்க விடப்பட்டதாக அந்த பத்திரிகை கூறியது.

முடிந்த தொடர்... முடியாத வரலாறு: யாருக்கு ?


இலங்கை வன்னிப் பகுதியில் வாழ்ந்த பண்டாரக வன்னியன் என்ற தமிழ் மன்னரின் கதை முடியாத வரலாறாக வாழும் என்று முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். இன்று விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த தினம். அதை நினைவில் கொண்டு முதல்வர் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறாரா என்று தெரியவில்லை. இதுதொடர்பாக, அவர் புதன்கிழமை எழுதியுள்ள கடித விவரம்: "முரசொலி'யில் இரண்டாவது முறையாக வெளிவந்துகொண்டிருந்த "பாயும்புலி பண்டாரக வன்னியன்' என்ற வரலாற்று காவியம் முடிவடைந்துவிட்டது. ஆனால், அந்த வீர காவியம் வாழ்ந்து கொண்டே இருக்கும். இந்த நாவலில், வஞ்சிக்கப்பட்ட நல்ல நாச்சியார், "நானும் தமிழன் தானே' என்று கூறுகிற காக்கை வன்னியனை நோக்கி, "நீ தமிழன் தான்! இனத்தால், மொழியால், உன் உடலில் ஓடும் ரத்தத்தால் நீ தமிழன் தான்! ஆனால் சூடு, சொரணை இல்லாத தமிழன்! பணத்துக்காகப் பாத பூஜை செய்யும் தமிழன்! பதவிக்காக மானத்தை அடகு வைக்கும் தமிழன்!' என்று சினந்து கூறுவதாக அமையும். இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய நிதியமைச்சர் க. அன்பழகன், ""இது இன்றைய தமிழ் மண்ணில் எவ்வளவு பேருக்கு ஏற்புடையதாக அமையும் என எண்ணத் தோன்றுகிறது'' என்று குறிப்பிட்டுள்ள்ர். மற்றொரு இடத்தில் வெள்ளைக்கார மேஜர், "எதிரிகள் கஷ்டப்பட்டுப் பிரித்து வைக்கத் தேவை இல்லாமலே, தாங்களாகவே பிரிந்து நிற்கும் இனமும் தமிழ் இனம்தான்!' என்று கூறுவதாக அமையும். ""இந்தக் கூற்று எவ்வளவு வேதனையோடு நம் நெஞ்சில் அதிர்கிறது'' என்று தான் கொண்ட அதிர்வை அன்பழகன் அணிந்துரையில் எடுத்துக்காட்டுகிறார். இந்த வீரனது சிலை திறப்பு விழா 1982-ம் ஆண்டு நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி வித்யானந்தன், ""வன்னிப் பிரதேச மக்களுக்கு மட்டுமின்றி, நம்பிக்கை தளர்ந்து போயிருக்கும் ஈழத் தமிழர் யாவருக்கும் நம்பிக்கையும், தேசப்பற்றும், உரிமைக் குரலும் அதிகரிக்க இச்சிலை உதவும். நல்ல தலைவர்களை மக்கள் விரும்பவும், இனம் கண்டு கொள்ளவும், புதிய தலைவர்கள் தோன்றவும் இந்த சிலை வழிவகுக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார். உண்மையிலேயே அந்த சுதந்திரப் போர் வீரன் தோற்கடிக்கப்பட்டானா? அத்துடன் அவனது போர் முழக்கம் முற்றுப்பெற்றுவிட்டதா? அல்லது மீண்டும் ஆர்ப்பரித்துக் கிளம்பியதா அந்த அரிமா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் "பாயும் புலி பண்டாரக வன்னியன்' தொடர் சித்திரம், பதில் அளிக்கத்தான் செய்கிறது! விளக்கமான பதில்! வீரம் கொப்பளிக்கும் பதில்! அந்த நாவலின் முடிவில், குருவிச்சியின் மூச்சு நின்று போனது தெரியாமலே குதிரை மீது அவளை அணைத்தவாறு பண்டாரக வன்னியன், ஆங்கிலேயரிடமிருந்து தப்பிவிட்டதாக வரும். மணக்கோலம் பூண்டு வாழ்வின் சுவை அறியத் துடித்தவள், இலட்சியத் திருவிளக்காய், பிணக்கோலம் பூண்டு பண்டாரகனின் குதிரையில் வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தாள்; அவள் உயிருடன் இருப்பதாகவே கருதிக்கொண்டு அவனும், அவனைப் பின்தொடர்ந்த தமிழ் வீரர்களும் காட்டுப் பாதையில் நெடுந்தூரம் சென்றுகொண்டிருந்தனர் என்று முடியும். காட்டுப்பாதையில் சென்று அவர்கள் அன்று காட்டிய பாதை வீரமறவர்களின் பாதை! பண்டாரக வன்னியன் ஒருவனல்ல; அவனைப் போல பலர்; உறுதியும் வாய்மை ஒளியும் உணர்வும் கொண்டவர்கள் தோன்றிட, அந்த மாவீரனின் வரலாறு பயன்படத் தவறவில்லை. எனவே, அது வாழும் வரலாறு என்று முதல்வர் கருணாநிதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மும்பை சம்பவம்:முதலாம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிப்பு


மும்பை: மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 195 பேரைகொன்று குவித்த சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, மும்பையில் அசம்பாவிதங்கள் நடப்பதை தடுக்க 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த 1993ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி தாவூத் இப்ராகிம் கோஷ்டி நடத்திய தொடர்வெடிகுண்டு தாக்குதலுக்கு பிறகு மும்பை பல தீவிரவாத தாக்குதல்களைசந்தித்துள்ளது.

இதற்கு நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகி இருக்கின்றனர். இவைஎல்லாவற்றையும் விட கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி, பாகிஸ்தான்தீவிரவாதிகள் கடல் வழியாக ஊருடுவி வந்து மும்பையில் நடத்திய தாக்குதல்உச்சக்கட்ட கொடூரமாக அமைந்தது. சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ்மஹால் ஒட்டல், ட்ரைடன்ட் ஓட்டல், நாரிமன் ஹவுஸ், காமா மருத்துவமனைஉள்ளிட்ட இடங்களில் கண்ணில் பட்டவர்களை எல்லாம் நவீன துப்பாக்கிகளால்சரமாரியாக சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தீவிரவாதிகள் கொன்றுகுவித்தனர்.

அதில் பலியான உயிர்களின் எண்ணிக்கை 195. இந்த பயங்கர சம்பவத்தின்முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தாக்குதலில்கொல்லப்பட்டவர்கள், தீவிரவாதிகளை ஒழிக்க உயிரை தியாகம் செய்தவர்களைநினைவு கூறும் வகையில் மும்பையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்குஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. நினைவு சின்னம்: இந்த தாக்குதலுக்கு பிறகுமும்பை காவல் துறையை பலப்படுத்துவதற்காக வாங்கப்பட்ட நவீனஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களுடன் கேட்வேஆப் இந்தியாவில் இருந்து மெரைன் டிரைவ் வரை போலீசார் நடத்தும்அணிவகுப்பு இன்று காலை நடக்கிறது.

முன்னதாக, கேட்வே ஆப் இந்தியாவில் சர்வமத அமைதி பிரார்த்தனை கூட்டம்நடக்கிறது. மாலை 6 மணிக்கு மெரைன் டிரைவ் போலீஸ் ஜிம்கானாவில் அரபிக்கடலை நோக்கி அமைக்கப்பட்டுள்ள தியாகிகள் நினைவு சின்னத்தை மத்தியஉள்துறை அமைச்சர் .சிதம்பரம் திறந்து வைக்கிறார். கூட்டு பிரார்த்தனை: தீவிரவாதிகளின் தாக்குதலில் அதிகப்பட்சமாக சத்ரபதி சிவாஜி ரயில்நிலையத்தில் 57 பேர் கொல்லப்பட்டனர். அங்கு இன்று பல நிகழ்ச்சிகள்நடக்கின்றன.

கொல்லப்பட்டவர்களின் நினைவாக காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரைமலரஞ்சலி செலுத்தப்பட்டு, கூட்டு பிரார்த்தனை கூட்டம், ரத்த தான முகாம், பாதுகாப்பு முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு முகாம் ஆகியவைநடத்தப்படுகின்றன. ரயில்வே பாதுகாப்பு படையின் பேண்டு வாத்திய குழுவும்அஞ்சலி கீதம் இசைக்கிறது. இந்த நினைவு தினத்தின்போது அசம்பாவிதங்கள்நடப்பதை தடுக்க நகரம் முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் இரவு முதலே முக்கிய சாலைகளில் போலீசார் சோதனைசாவடிகளை அமைத்து, வாகனங்களை சோதனை செய்த பிறகே நகருக்குள்அனுமதிக்கின்றனர். கடலோர பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில்வைக்கப்பட்டுள்ளனர்.

புதன், 25 நவம்பர், 2009

கல்வியின் வெற்றியை தாய்மொழியே சாதிக்கும்!

ஆங்கிலேயர் ஆட்சியில் நாடு முழுவதும் பிராந்திய மொழிகள் அதாவது அவரவர் தாய்மொழிகளையே பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளிகள் திறக்கப் பெற்றன. ஆங்கிலம், மொழிப் பாடமாக மட்டுமே கற்பிக்கப்பட்டது. ஆங்காங்கே ஆங்கிலேய குழந்தைகளுக்காக ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளும் இயங்கி வந்தன. தமிழகத்தில் வழக்கமான ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் மட்டுமன்றி மாநிலம் முழுவதும், மாநிலப் பாடத்திட்டப்படியே, தனியார் ஆங்கில நர்சரிகளில் 5-ம் வகுப்பை நிறைவு செய்தவர்கள் படிப்பைத் தொடர்வதற்கு ஏதுவாக உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கில போதனாமுறை அறிமுகம் செய்யப்பட்டது. பின்னாளில் மாநிலம் முழுவதும் 30 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒரு வகுப்புக்கு ஒரு பிரிவு மட்டும் ஆங்கில வழி போதனை என்று மாநிலக் கல்வித்துறையால் தொடங்கப்பட்டது. 1980-ல் 72 பள்ளிகளும், 1987-ல் 200 பள்ளிகளும், 1992-ல் 1000 பள்ளிகளும், இன்றோ 4000 பள்ளிகளுக்கு மேலாக அவை எண்ணிக்கையில் பெருகிவிட்டன. தமிழகத்தில் மலையாளம், உருது, தெலுங்கு, கன்னடம் ஆகியவற்றைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களும், அவரவர் தாய்மொழியில் கல்வி கற்க ஏதுவாகக் கல்விக்கூடங்கள் தனித்தனியே முறைப்படுத்தப்பட்டன. ஆனால் அவர்கள் பெரிதும் அந்தப் பகுதி வட்டார மொழியும் பேச்சு மொழியுமான தமிழ் மொழியிலேயே கல்வி பயில விரும்பி, தமிழ் வழி பள்ளிகளிலேயே படிப்பைத் தொடர்ந்தனர். ஒருமுறை ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பில் (ஆங்கில வழி போதனை) காலாண்டுத்தேர்வில் மதிப்பெண் அட்டைகளை ஆசிரியர் வழங்கினார். வகுப்பில் மதிப்பெண்கள் 65-க்கு மேல் வாங்கிய 15 மாணவர்கள் முதல் தரத்திலும், 40 - 65-ல் சரிபாதிப்பேர் 25 மாணவர்கள் இரண்டாம் தரத்திலும், 40-க்குள் எஞ்சிய 8 அல்லது 10 பேர் மூன்றாம் தரத்திலும் இருந்தனர். மிகவும் குறைவாக மார்க் எடுத்தது பற்றி மாணவர்களிடம் ஆசிரியர் கேட்டபோது ""நல்லாதான் மனப்பாடம் செய்திருந்தேன் சார் தேர்வு எழுதும்போது மறந்துபோச்சு''. ""நல்லாதான் படிச்சேன் சார். பரீட்சையில் எழுத வர மாட்டேங்குது'' என்று ஒரே மாதிரி பதில்கள் தான் வந்தன. மார்க்குகள் மிகவும் குறைவாக எடுத்த ஒரு மாணவன் ஆங்கில வழியில் தொடர்ந்தால் 9-ம் வகுப்பில் தேறுவது கடினம் என்று எண்ணிய ஆசிரியர் அவனை தமிழ் வழி போதனை வகுப்புக்கு மாற்றம் செய்ய விரும்பினார். மாணவனின் தகப்பனார் இதற்கு மறுப்புச் சொல்ல மாட்டார் என்ற நம்பிக்கையில் தலைமை ஆசிரியரின் அனுமதியை நாடினார் ஆசிரியர். தலைமை ஆசிரியரும் இந்த மாற்றத்துக்கு அனுமதித்தார். ஒன்றாம் வகுப்பு முதலே ஆங்கில போதனா மொழியில் படித்து வந்த அம் மாணவன் இடையில் 9-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வுக்கு முன்னதாக தமிழ்வழி வகுப்புக்கு மாற்றம் செய்யப்பட்டான். 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்து பிளஸ் டூவிலும் கணிதப் பிரிவில் அதே பள்ளியில் தமிழ் மீடியத்தில் சேர்ந்து படித்தான். பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண் பெற்றுத் தகுதி அடிப்படையில் பி.இ. படிக்க இடம் கிடைத்து சென்னையில் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்தார். அம் மாணவனை முன்மாதிரியாகக் கொண்டு குறைவாக மார்க் பெற்றுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் ஒருசிலரிடம் தமிழ் வழிப் பிரிவுக்கு மாற்றிக் கொள்வது பையனின் படிப்பை எளிதாக்கும் என்ற யோசனையை ஆசிரியர் தெரிவித்து வந்தார். அவர்கள் ""தம் பிள்ளையும் மற்றவர்களின் பிள்ளைகளைப்போல உய்ஞ்ப்ண்ள்ட் ஙங்க்ண்ன்ம்-த்தில் படிக்கிறான்'' என்று சொல்வதையே கௌரவமாக நினைத்தார்கள். ஆசிரியரின் யோசனையை ஏற்கவில்லை. ஆங்கிலக் கல்வியாளர் ஏ.எஸ். நீல்ஸ் என்பவர் ""பிரச்னைக்குரிய நடத்தையுடைய குழந்தைகள் எவரும் இலர், இருப்பவர்கள் முரண்பாடுடைய பெற்றோர்கள் தாம்'' என்று கூறிய கூற்று மெய்யானதாக ஆசிரியருக்குத் தோன்றியது. இந்நிலையில் 35-க்கும் குறைவான மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் பட்டியலில் ஒரு மாணவனின் தகப்பனார், முன்னேற்ற அட்டையில் கையொப்பமிட வந்தார். அவர் ஆசிரியரிடம் ""தான் ஒரு ஒப்பந்தக்காரரிடம் கூலி வேலை பார்த்து வருவதாகவும், ஆரம்பத்திலிருந்தே இவன் படிப்புச் செலவுக்கு என் சம்பளம் முழுவதையும் செலவழித்தேன் சார்'' என்றும் கூறினார். ""இப்ப பையனுக்கு நீண்ட நாள் வயிற்றுக் கோளாறு, சாப்பிட்ட உடன் மோஷன் போகிறான். மருத்துவம் பார்க்க வசதியில்லை. அதனால்தான் மார்க் குறைந்துவிட்டான்'' என்று தன் கவலையை ஆசிரியரிடம் வெளிப்படுத்தினார். பள்ளிக்கு எதிரில் ங.ஈ. படித்த டாக்டர் மருத்துவமனை நடத்தி வருகிறார். அந்த டாக்டர் இந்த ஆசிரியரின் முன்னாள் மாணவர். இந்நாள் மாணவருக்கு முன்னாள் மாணவர் செலவில்லாமல் சிறந்த மருத்துவ உதவி செய்தார். சிறுவன் நலம் பெற்றான். சிறுவனின் தகப்பனாரின் கவலை தீர்ந்தது. தாம்பெற்ற பிள்ளைகள் மறந்தாலும் தம்மிடம் படித்த பிள்ளைகள் மறவார் என்ற ஆசிரியரின் கருத்து சரியே. சிறுவனின் தந்தையிடம் ஆசிரியர், ""பையனை தமிழ் மீடியத்தில் படிக்கச் செய்தால் நன்கு படிப்பான்'' என்று ஆலோசனை கூறினார். ""இடையில் 9-ம் வகுப்பில் தமிழ் மீடியத்திற்கு மாற்றம் செய்தால் பிக்கப் பண்ண முடியுமா?' என்று தந்தை கேட்டார். ""நன்கு சுலபமாகப் படிக்க முடியும்'' என்று ஆசிரியர் உறுதியளிக்கவே தந்தையும் சம்மதம் தெரிவித்தார். அந்த மாணவனின் தமிழ் வழி வகுப்புக்கு மாற்றம் செய்யப்பட்டான். படிப்படியாக அவனும் நல்ல மார்க்குகள் பெற்று பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்விலும் நல்ல மார்க்குகளைப் பெற்றுவிட்டான். அதே பள்ளியில் பிளஸ் டூவில் தமிழ் மீடியத்திலேயே நல்ல மதிப்பெண்களைப் பெற்றான். கற்றலுக்கு வேண்டிய அடிப்படைச் சிந்தனைத் திறனில் தாய்மொழியில் படிப்போர் பின்தங்கியவர்கள் அல்ல. அதனால்தான் பொருள் புரிந்து தமிழ் மீடியத்தில் படிக்கும்போது மதிப்பெண்களை அவர்களால் அள்ள முடிந்தது. இதனை பெற்றோர்களும், ஆசிரியர்களும் கவனத்தில் கொள்வது அவசியம். ""தம் பிள்ளைகள் சாதாரண பள்ளியில் அல்ல, மெட்ரிகுலேஷன் பள்ளியில் இங்கிலீஷ் மீடியத்தில் படிக்கிறார்கள்'' என்று சொல்வதை கௌரவம் தரும் சொல்லாக எண்ணிச் செலவழிக்கிறார்கள். பிள்ளைகளின் இயற்கை சுபாவங்களைக் கவனியாது, அவர்கள் வளர்ச்சிக்கு பெற்றோர்களே தடைகளை ஏற்படுத்தி விடுகிறார்கள். கல்வி என்பது ஓர் அனுபவமே. இந்த அனுபவம் சிந்தனையின் அடிப்படையில் எழுவதே ஆகும். குழந்தை சிந்திப்பதில் உள்ள வலு, ஆழம், உண்மை, தீவிரம் இவற்றைப் பொருத்து அமைவதே கற்றல் எனப்படும். குழந்தை சுயமாகச் சிந்தித்தல் தாய்மொழியில்தான் சாத்தியப்படும். அது அல்லாமல் ஆங்கில வழியில் மேற்கொள்ளப்படும் மனப்பாட முறையின் வழியாகப் பெறப்படும் மதிப்பெண்கள் முறைதான் உயர்வழிக் கல்வி, அதுவே கல்வி கற்றல் அல்லது கல்வி அடைவின் அளவுகோல் என்பது ஏற்புடையதாகாது. எனவே கற்பனைத்திறன், படைப்பாற்றல், புதியவை காணும் ஆற்றல், ஊக்கமுடைமை இவையாவும் தாய்மொழிக் கற்றல் மூலமே சாத்தியமும், வலிமையும் பெறும். ஆங்கில வழிக்கற்றலில் மதிப்பெண் குறைவாகப் பெறும் மாணவர்கள் படிக்கத் தகுதியற்றவர்கள், மந்த புத்தியுடையவர்கள், கல்வியில் பின்தங்கியவர்கள் என்று ஆசிரியர்கள் தவறான முத்திரையிட்டு அவர்களுடைய தன்னம்பிக்கையைக் குலைத்து விடுகின்றனர். பெற்றோர்களும் அன்றாடம் மனப்பாட சக்தி வழியே அதிக மதிப்பெண் வாங்கியவர்களோடு ஒப்பிட்டுப் பிள்ளைகளை வசைபாடுகின்றனர். ஆசிரியர்களும் பெற்றோர்களும் பின்பற்றும் இவை இரண்டும் கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டியவையாகும். ஏனெனில் மனப்பாடத்திறனே படிப்பு அல்லது அறிவு வளர்ச்சி என்பது தவறான அளவுகோலாகும். நம் முன்னாள் குடியரசுத் தலைவரும் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியுமான ஏபி.ஜெ. அப்துல் கலாம், ""தாம் 8-ம் வகுப்புவரை ராமேசுவரம் மீனவப் பள்ளியில் தமிழ்வழியிலேயே பாடங்களைப் பயின்றதால்தான் சுயமாகச் சிந்திக்க முடிந்தது. விஞ்ஞானி ஆவதும் சாத்தியப்பட்டது'' என்கிறார். கல்வியாளர் வா.செ. குழந்தைசாமி ""அறிவியலும் தொழில்நுட்பமும் மற்ற துறை அறிவும் தாய்மொழி மூலம் கற்றால்தான் அதன் பயனைப் பெற முடியும். 50 ஆண்டுகளுக்கு முன்னதாக பொருளாதார வளர்ச்சியில் நம்மை ஒத்த நிலையிலிருந்த அண்டைய நாடுகள் இன்று நம்மைவிட சற்று மேலாக வளர்ந்திருப்பதற்கு அவர்கள் தாய்மொழி வழியே கல்வி பயின்ற வலிமை ஒன்றுதான் அடிப்படைக் காரணம் '' என்று குறிப்பிடுகிறார். உலகில் முன்னேறிய நாடுகளான அமெரிக்க ஐக்கிய நாடுகள், ரஷியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் மட்டுமன்றி உலகின் எல்லா நாடுகளிலுமே பள்ளிகள் அளவில் அவரவர் தாய்மொழிகள் தான் பயிற்றுமொழியாக உள்ளன. ஆங்கிலம் அல்ல. எங்கும் ஆங்கிலம் நூலக மொழியாகவே உள்ளது. ஆங்கிலம் ஆங்கிலேயர் நாட்டில் மட்டுமே பள்ளிகளில் பயிற்றுமொழியாக உள்ளது. நம் இந்திய நாட்டிலும் தமிழகம் நீங்கலாக மற்ற மாநிலங்களில் எல்லாம் அவரவர் தாய்மொழிகள்தாம் பள்ளியில் பயிற்றுமொழியாக உள்ளன. இவ்வாறு நம் நாட்டில் பள்ளிக்கல்வியில் 67 பயிற்றுமொழிகள் (அவரவரது தாய்மொழிகள்) பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நம் தமிழகத்தில் மட்டுமே தாய்மொழியாகிய தமிழை பள்ளிகளிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு ஆங்கில மொழிவழியே பாடங்களைக் கற்பிக்கிற அவலநிலை உருவாகியுள்ளது. இது எந்த ஒரு மனிதகுலமும் எங்குமே கண்டிராத விநோதம் ஆகும். இந்த உலகமகா விநோதம் சிறார்களுக்கு ஆங்கில வழியே கற்பித்தல் என்ற பெயரில் சிறார் கல்வியை வணிகமாக்கிப் பணம் சேர்க்கும் நோக்குடைய ஒருசிலரால் தோற்றுவிக்கப்பட்டது ஆகும். இந்தப் பயிற்றுமொழி சிக்கலால் பாதிக்கப்படுவது குழந்தைகளும், மாணவர்களுமே. மேற்படி வணிகமயமாக்கலுக்கு எதிராக சமச்சீர் கல்வியின் ஓர் அம்சமான அண்மைபள்ளி (அ) அருகாமைப்பள்ளி முறை, முறையாகச் செயல்படுத்தப்பட்டால் அன்றாடம் படும் அவஸ்தையிலிருந்து சிறார்களும், வேன், ஆட்டோ, பேருந்துக் கட்டணம் மற்றும் தனியார் பள்ளிகளில் விதிக்கப்படும் ரசீது இல்லாத கட்டணங்களிலிருந்து பெற்றோர்களும் விடுவிக்கப்படுகின்றனர். எனவே இந்த அண்மைப்பள்ளி முறை பெற்றோர்களால் பெரிதும் விரும்பி ஏற்கப்படும். இந்த சமச்சீர் கல்வி நடைமுறைக்கு சகல வல்லமையும் சாதுர்யமும் மிக்க மெட்ரிக் பள்ளியினுடைய தாளாளர்களும், முதல்வர்களும் இளைய தலைமுறையினரின் நலனைக் கருத்தில் கொண்டு முழு ஒத்துழைப்பு நல்கி அவர்களுடைய கல்விப் பணியைத் தொடர வேண்டுமென்று தமிழகம் எதிர்பார்க்கிறது.

லிபரான் கமிஷன் அறிக்கை:வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட 68 பேர் மீது குற்றச்சாட்டு


புது தில்லி, நவ. 24: பாபர் மசூதி இடிப்பை நடத்தி முடித்து வகுப்பு கலவர நிலைக்கு நாட்டை கொண்டுசென்றதில் பாஜக மூத்த தலைவர்கள் வாஜ்பாய், எல்.கே.அத்வானி, சங்க பரிவாரங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட 68 பேருக்கு பங்கு உள்ளது என்று லிபரான் கமிஷன் குற்றம்சாட்டியுள்ளது.அயோத்தியில் பாபர் மசூதியானது 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி கரசேவகர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. இதற்கு பாஜக, விஎச்பி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்டவை காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இதை மறுத்த பாஜக, சங்கபரிவாரங்கள் இந்துக்களின் மனக் குமுறலே மசூதி இடிப்பில் முடிந்தது என்று குறிப்பிட்டு வருகின்றனர். பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரித்த லிபரான் கமிஷன், தனது அறிக்கையை கடந்த ஜூன் 30ம் தேதி அரசிடம் ஒப்படைத்தது. இந்நிலையில் அந்த அறிக்கையின் சில பகுதி ஆங்கில நாளேடு ஒன்றுக்கு ரகசியமாக கசிந்து புயலை கிளப்பிவிட்ட நிலையில் மறுநாள் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது. வகுப்பு நல்லிணக்கத்தை சீர்குலைக்கச் செய்யும் அளவுக்கு பூதாகர பிரச்னையாகிப்போன பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்துக்கு சங்கபரிவார அமைப்புகள், அதிகாரிகள் உள்ளிட்ட 68 பேர் மீது கடுமையாக குற்றம் சுமத்தியுள்ளது லிபரான் கமிஷன். 4 தொகுப்புகளில் 1000 பக்கம் கொண்டுள்ளது லிபரான் அறிக்கை. இந்த அறிக்கை குற்றம்சுமத்தியுள்ள 68 பேரில் முதலில் இடம்பெறுபவர்களாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோர் உள்ளனர். பாஜக தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, அப்போதைய உத்தரப்பிரதேச முதல்வர் கல்யாண் சிங், விஎச்பி அமைப்பைச் சேர்ந்த கிரிராஜ் கிஷோர், அசோக் சிங்கால் உள்ளிட்டோரையும் இந்த கமிஷன் பாபர் மசூதி இடிப்பில் குற்றம்சாட்டியுள்ளது. 16ம் நூற்றாண்டு வரலாற்றுச்சின்னமாக திகழ்ந்த பாபர் மசூதியை தகர்க்க சங்கபரிவாரங்கள் முடிவெடுத்தாலும் அதில் பாஜகவின் மிதவாதத் தலைவர்கள் எனக் கூறிக்கொள்ளும் வாஜ்பாய், அத்வானி ஆகியோருக்கும் பங்கு உள்ளது என லிபரான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த தலைவர்களுக்கு சந்தேகத்தின் பலனைக் கொடுத்து பாபர் மசூதி இடிப்புக் குற்றத்திலிருந்து விடுவிக்கக்கூடாது என்றும் லிபரான் தெரிவித்துள்ளார். மக்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு மாறாக இவர்கள் நடந்துள்ளனர். செய்யக்கூடாத குற்றச்செயலை செய்துள்ளனர் இந்த போலி மிதவாதிகள். இதைவிட பெரிய துரோகமோ குற்றமோ ஜனநாயகத்தில் நடந்து இருக்க முடியாது. மசூதி இடிப்பில் பிரதான பொறுப்பு ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங் தளம், சிவசேனை, பாஜக ஆகியவற்றின் மேல்சுற்று தலைவர்களுக்கு உள்ளது. இந்துக்களின் மனக்குமுறலால் தன்னிச்சையாக வெளிப்பட்ட ஆவேசம் மசூதி இடிப்பு என்றும், முன்கூட்டியே திட்டமிட்டு இது நடத்தப்பட்டதல்ல என்றும், வெளிநாட்டு சக்திகள் அரங்கேற்றிய சதி என்றும் தமது கற்பனைக்கேற்ப பலர் பலவிதமாக கூறினர். ஆனால் இவையெல்லாம் பொய்யென லிபரான் கமிஷன் மேலும் தெரிவித்துள்ளது.நரசிம்மராவ் மீது குறையில்லை: அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவை பாபர் மசூதி இடிப்பை தடுக்கத் தவறியதாக குறை சொல்ல இயலாது. அயோத்தியில் என்ன நடக்கிறது என்பதை படம்பிடித்துக் காட்டமுடியாதபடி உளவு அமைப்புகள் செயலிழந்து கிடந்தன. அப்போதைய கல்யாண் சிங் அரசு கோரியபடி மத்திய படைகள் அனுப்பப்பட்டபோதும் அந்த படைகளை சம்பவ இடத்தில் நிறுத்தாமல் அப்பால் நிறுத்தியது மாநில அரசு. மேலும் மாநில உயர்நீதிமன்றம் நியமித்த உச்சநீதிமன்ற பார்வையாளரும் நடுநிலைமையாக செயல்படவில்லை. மசூதி கூரைமுகடுகள் இடிக்கப்பட்டபோது அவர் சம்பவ இடத்திலேயே இல்லை என்று கமிஷன் மேலும் குறிப்பிட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்புக்குப்பிறகு 10 நாள் கழித்து அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் 48 முறை நீட்டிப்புப் பெற்றது. கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்தது.

செவ்வாய், 24 நவம்பர், 2009

வரலாற்று சம்பவம்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பூட்டோவுக்கு மரண தண்டனை


பாகிஸ்தான் பிரதமராக இருந்த பூட்டோ மீது கொலை வழக்குத் தொடரப்பட்டது. அதில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பாகிஸ்தான் அரசியலில் முக்கிய இடம் பெற்றவர் பூட்டோ. ஜின்னாவுக்கு அடுத்த படியாக பெரிய தலைவராக கருதப்பட்டவர்.
பூட்டோவின் இளமை பருவம், அரசியல் வாழ்க்கை பெரும் திருப்புமுனைகளை கொண்டது. அவருடைய இறுதிகால வாழ்க்கை சோதனை மிகுந்த கண்ணீர் காவியமாக அமைந்தது. பூட்டோவின் தந்தை ஷா நவாஸ். பெரிய பணக்காரர். திவானாக இருந்தார். தாயார் ஜக்கிபாய். இந்தியப்பெண்.
பூட்டோவின் முழுப்பெயர் ஜூல் பிகார் அலி பூட்டோ. 1928_ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள `லர்கானா' என்ற ஊரில் பிறந்தார். ஆனால் வளர்ந்தது எல்லாம் பம்பாயில் தான். பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றபோது பூட்டோவுக்கு வயது 19. பூட்டோ அமெரிக்காவில் கலிபோர்னியாவிலும், இங்கிலாந்து நாட்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் படித்து வக்கீல் (பாரிஸ்டர்) பட்டம் பெற்றார்.
தொடக்கத்தில் வக்கீல் தொழில் செய்த பூட்டோ அரசியலிலும் ஆர்வமாக ஈடுபட தொடங்கினார். 1958_க்கு பிறகு அவரது அரசியல் செல்வாக்கு ஓங்க தொடங்கியது. இஸ்கந்தர் மந்திரிசபையில் இடம் பெற்றார். பாகிஸ்தானில் அயூப்கான் அதிபராக இருந்தபோது, அவரிடம் பூட்டோ வர்த்தக மந்திரியாக இருந்தார். பிறகு 1963_ல் வெளிவிவகார மந்திரியானார்.
1967_ம் ஆண்டு மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு `மக்கள் கட்சி' என்ற புதிய கட்சியை தொடங்கினார். அயூப்கானுக்கு எதிராக செயல்பட்டதால் பூட்டோ 1968_ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பல மாதங்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார். உடனே பூட்டோ அமெரிக்காவுக்கு சென்று வசித்து வந்தார்.
இந்த நிலையில், யாகியாகான் பாகிஸ்தான் அதிபர் ஆனார். அவரது ஆட்சி காலத்தில் 1971_ல் இந்தியாவுடன் நடந்த போரில் பாகிஸ்தான் தோற்றது. கிழக்கு பாகிஸ்தான் "வங்காளதேசம்" என்ற பெயரில் சுதந்திர நாடாகியது. இதனால், யாகியாகான் பதவி இழந்தார். அதன்பின் பூட்டோ பாகிஸ்தான் அதிபரானார். அதுவரையில் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி முறையே இருந்து வந்தது. அதிபர் ஆன 2 ஆண்டுகளுக்குப்பிறகு, பூட்டோ ராணுவ ஆட்சி முறையை ரத்து செய்தார். பாகிஸ்தானின் பிரதமராக பூட்டோ பதவி ஏற்றார்.
1977_ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பூட்டோவின் "மக்கள் கட்சி" 216 இடங்களில் 155 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் தேர்தலில் தில்லு முல்லு நடந்ததாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி கிளர்ச்சி நடத்தினார்கள். இந்த கலவரத்தில் 250 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து 5_7_1977_ல் பூட்டோவுக்கு எதிராக ராணுவ புரட்சி நடந்தது. பூட்டோவினால் ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட ஜியா_வுல்_ ஹக் இந்த புரட்சியை நடத்தி ஆட்சியை கைப்பற்றிக்கொண்டார்.
பூட்டோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாகிஸ்தானில் தேர்தல் நடத்த ஜியா தீர்மானித்ததைத் தொடர்ந்து பூட்டோ விடுதலை செய்யப்பட்டார். தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கி இருந்த பூட்டோவை, ராணுவ அரசாங்கம் மீண்டும் கைது செய்தது. ராவல்பிண்டி சிறையில் அடைத்தது.
தன்னுடைய அரசியல் எதிரியான அகமது கசூரி என்ற பாராளுமன்ற உறுப்பினரின் தந்தையை கொலை செய்ய உத்தரவிட்டதாக பூட்டோ மீது குற்றம் சாட்டப்பட்டது. பூட்டோவின் "மக்கள் கட்சி" தொடங்குவதற்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர் கசூரி. முதலில் பூட்டோவின் நண்பராக இருந்த அவர், பிறகு பூட்டோவின் ஆட்சியை கடுமையாக தாக்கி பிரசாரம் செய்தார்.
இதனால் கசூரியை தீர்த்துக்கட்ட பூட்டோ திட்டம் தீட்டினார் என்றும், 4 அதிகாரிகளிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்தார் என்றும் கூறப்பட்டது.1974_ல் கசூரியும், அவர் தந்தையும் ஒரு திருமணத்துக்கு சென்றுவிட்டு, காரில் திரும்பிக் கொண்டு இருந்தார்கள். அப்போது அந்த காரை நோக்கி இயந்திரத் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. குறி தவறியதால் கசூரி உயிர் தப்பினார். அருகில் இருந்த அவர் தந்தை குண்டு பாய்ந்து இறந்தார்.
இதையொட்டி, பூட்டோ மீதும் மற்றும் ராணுவ அதிகாரிகள் முகமது அப்பாஸ், குலாம் முஸ்தபா, அரத் ஊக்பால், ராணா இஸ்திகார் ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை பாகிஸ்தானில் உள்ள லாகூர் ஐகோர்ட்டு விசாரித்து பூட்டோவுக்கும், மற்ற 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து 18.03.1978_ல் தீர்ப்பு கூறியது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பூட்டோ அப்பீல் செய்தார். அப்பீலை 7 நீதிபதிகள் விசாரித்து பிப்ரவரி 6_ந்தேதி தீர்ப்பு கூறினார்கள். தூக்கு தண்டனையை 4 நீதிபதிகள் உறுதி செய்தார்கள். 3 நீதிபதிகள் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். "மெஜாரிட்டி" தீர்ப்பின்படி தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டது.
நீதிபதிகள் கருத்து பிளவுபட்டு இருப்பதால், தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று பூட்டோ சார்பில் மீண்டும் அப்பீல் செய்யப்பட்டது. அந்த அப்பீல் மார்ச் மாதம் 24_ந்தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆயினும் தூக்குத்தண்டனையை குறைக்கலாம் என்று அதிபர் ஜியாவுக்கு நீதிபதிகள் சிபாரிசு செய்திருந்தனர். ஆனால் இரும்பு மனம் கொண்ட அதிபர் ஜியா அதை ஏற்கவே இல்லை.
இறுதியில் பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.

எதிரிக்கு எதிரி நண்பனா?

எதிரிக்கு எதிரி நண்பன். அந்த நண்பனே எதிரியாக மாறிவிட்டால், அவனோட எதிரி நண்பன். அவனும் எதிரியா மாறிட்டா... அவனோட எதிரி நண்பன். இதுதான் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் இருந்தபோது, அங்கிருந்த பழங்குடி மக்களுக்கு ஆயுதம் கொடுத்து, பயிற்சி கொடுத்து தீவிரவாதிகளாக மாற்றியது அமெரிக்கா. துப்பாக்கியையே பார்த்திராத அந்த மக்களுக்கு ஏவுகணைகளையும் ஏ.கே. 47களையும் அறிமுகம் செய்து வைத்தது. அப்பாவிக் கூட்டம் அராஜக கூட்டமாக மாறியது.

ரஷ்ய படைகளை ஆப்கனில் இருந்து வெளியேற்றியதில் இந்தக் கூட்டத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. அதுதான் இப்போது தலிபான் அமைப்பாக மாறி, வளர்த்து விட்ட அமெரிக்காவுக்கே குடைச்சல் கொடுத்து வருகிறது. இப்போது அந்த தலிபானை ஒழிக்க, அந்த அமைப்புக்கு எதிரான பழங்குடி மக்களுக்கு ஆயுதம் கொடுக்க முடிவு செய்துள்ளது அமெரிக்கா.

ஆப்கனில் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற கதைதான் நடக்கிறது. கடைநிலை ஊழியரில் தொடங்கி அதிபர் கர்ஸாய் வரை ஊழல் கொடி கட்டிப் பறக்கிறது. அமெரிக்கா கொட்டிக் கொடுக்கும் டாலர்கள் அரசியல்வாதிகளின் பையை நிரப்பி வருகிறது. இவ்வளவு கொடுத்தும் பயனில்லை. அங்கு நேட்டோ படைகளுக்கு தலிபான் தீவிரவாதிகள் தண்ணி காட்டி வருகிறார்கள். அவர்களை அடக்க ஆப்கன் ராணுவமும், போலீசும் பத்தவில்லை. அவர்கள் தயாராகும் வரை, அவர்களுக்குப் பதிலாக இப்போதைக்கு, தலிபானுக்கு எதிரானவர்களை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது அமெரிக்கா.

மீண்டும் ஒரு அப்பாவி கூட்டத்தை, தீவிரவாதக் கூட்டமாக மாற்றத் தயாராகி விட்டது.
தீவிரவாத அமைப்புகளை அழிக்க ராணுவம், அதிரடிப்படை என முறையான அமைப்புகளை உருவாக்கி தாக்குவதுதான் பலன் தரும். அப்படி இல்லாமல், ஏறக்குறைய கூலிப் படை போல் செயல்படும் கூட்டங்களுக்கு ஆயுதமும், டாலரும் அள்ளிக் கொடுத்தால், இன்று ஆதரவாக இருக்கும் கூட்டம், எப்போது வேண்டுமானாலும் எதிராகத் திரும்பும். உலக வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்கள் திரும்பத் திரும்ப நடந்திருக்கின்றன. இருந்தாலும் அதிலிருந்து யாரும் பாடம் கற்பதில்லை. அமெரிக்காவும் விதி விலக்கல்ல.

அமெரிக்காவிலும் பட்டினி கிடக்கறாங்க மக்கள்


வாஷிங்டன் : அமெரிக்காவில், ஏழில் ஒரு குடும்பம் வீதம் போதுமான உணவின்றி பட்டினியில் வாடுகின்றனர் என்றால் நம்ப முடிகிறதா? உண்மை தான். போதுமான உணவின்றி அமெரிக்க மக்கள் தவிப்பதற்கு, பொருளாதார நெருக்கடியும், வேலையின்மையும் தான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



அமெரிக்காவில், அரசின் உணவுப்பாதுகாப்பு அமைப்பு , பதினான்கு ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்டது. விவசாய அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட இந்த அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்கர்களின் உணவுப்பாதுகாப்பு பற்றி சர்வே எடுத்து வருகிறது. சமீப காலமாக எடுக்கப்பட்ட சர்வேக்களில், அமெரிக்காவில், போதுமான உணவு இல்லாமல், பற்றாக்குறையுடன் காலம் தள்ளும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. கடந்தாண்டு அமெரிக்காவில், 4.90 கோடி பேர் போதிய உணவின்றி தவித்துள்ளனர். அதாவது, ஏழு குடும்பங்களில் ஒன்று வீதம் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது . இவர்களில், மூன்றில் ஒரு பங்கினர் மிக மோசமான நிலையில் உணவின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.



இதனால், சில வேளை உணவு சாப்பிடாமல் பட்டினியாக இருக்க வேண்டிய நிலை உள்ளது.எஞ்சியுள்ள மூன்றில் இரண்டு பங்கினருக்கு, சாப்பிட போதுமான உணவு கிடைத்தாலும், மிக விலை குறைந்த, உணவுகளே சாப்பிடுகின்றனர்.அமெரிக்காவில், இந்தாண்டு 5.60 லட்சம் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் பசியால் வாடுகின்றனர். முந்தைய ஆண்டு, 3.23 லட்சம் குழந்தைகள் மட்டுமே பசியால் வாடினர். இந்தாண்டு உணவின்றி இருப்போரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, நாட்டின் உணவு பாதுகாப்பின்மையே காட்டுகிறது.ஆனால், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வரும் 2015ம் ஆண்டிற்குள் குழந்தைகள் பட்டினிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து, ஆய்வாளர்கள் கூறுகையில்,"பசியால் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு, வேலையின்மை வீதம் கடந்தாண்டு இறுதியில், 4.9 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாக அதிகரித்ததே காரணம். தற்போது அந்த வீதம், 10.2 சதவீதமாக உள்ளது. மேலும், உணவுப் பொருட்களின் விலையேற்றமும், இதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது'என்றனர்.

வேலை வாய்ப்புக்கு உறுதி அளிக்கும் கல்வி முறை

ஒவ்வோர் ஆண்டும் உயர்கல்வியைக் கல்லூரிகளில் நிறைவு செய்த பின்பு சில ஆயிரம் இளைஞர்கள் அரசுத் துறைகளிலும், தனியார்துறைகளிலும், சிலர் வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர். அதேவேளையில் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடி அலையும் நிலையும் உள்ளது. ஒவ்வொரு கல்வி ஆண்டின் இறுதியிலும் தமிழகப் பல்கலைக்கழகங்களிலிருந்து குறைந்தது 10 லட்சம் இளைஞர்கள் உயர்கல்வியை முடித்து வேலை தேடும் படலத்துக்குத் தயாராகவுள்ளனர். இதில் 10 சதவீத இளைஞர்களே வேலை வாய்ப்பைப் பெற முடிகிறது. ஆள்பலம், பணபலம் மற்றும் பின்புலம் உள்ளவர்களே இத்தகைய பணியைப் பெற முடிகிறது. வேலை வாய்ப்பைத் தேடி அலையும் இளைஞர் பட்டாளத்தின் தொகை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் உள்ள, 36 வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏறத்தாழ 50 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காகத் தங்களின் பெயரைப் பதிவு செய்துள்ளனர் என அண்மைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வேலை வாய்ப்பைப் பெற முடியாதவர்கள் வேலை வேட்டையை மிகுந்த வேட்கையுடன் நடத்தி ஓய்ந்து விடுவதையும், சிலர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் காண முடிகிறது. இதற்கு அரசே முழுப்பொறுப்பு என்று, அரசியல் கட்சிகள் போன்றே அரசின் மீது பழியைச் சுமத்திவிட்டுத் தப்பிக்காமல், சமூக அக்கறையுள்ள சமூகவியலாளர்கள் இப்பிரச்னையின்பால், தங்கள் கவனத்தைத் திருப்பினால் ஓரளவுக்கு இப்பிரச்னைக்கு விடியலை ஏற்படுத்த முடியும். பல துறைகளில் வளர்ந்து விட்ட சூழலிலும் நாம் இன்னும் எதற்கெடுத்தாலும் ஜப்பானையும், ரஷியாவையும் மேற்கோளாகக் காட்டிக் கொண்டு நம்மிடம் இருக்கும் அடையாளங்களைக் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறோம். அவ்விதம் நம்மிடம் உள்ள அடையாளங்கள் என்ன? வாய்ப்புகள் என்ன? என்பதை அறிந்தாக வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. அவ்வாறு அடையாளம் கண்ட பின்பு அதை நடைமுறை சாத்தியமாக்கி நம் இளைஞர்கள் வாழ்வில் ஏற்றம் கொள்ளச் செய்தல் வேண்டும். வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் வேண்டும் என்ற கோஷம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் காணவும், கேட்கவும் இயலுகிறது. குறிப்பாக நாடு முழுவதும் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்ட பிறகு, தங்கள் நிறுவனங்களில் பயிலும் மாணவர்க்கு, வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் பணியைச் சில தனியார் கல்லூரி நிறுவனங்கள் மேற்கொண்டு வேலை வாய்ப்புப் பிரிவை ஏற்படுத்தின. அதன் உள்நோக்கம் புதிதாகக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களைத் தங்கள் நிறுவனங்களில் சேருவதற்கான ஓர் ஈர்ப்பு முறையாக எண்ணியதே ஆகும். இதனால் தனியார் கல்வி நிலையங்களில் பயின்ற மாணவர்களில் சிலர் தனியார் ஐ.டி. தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பைப் பெற்று வருகின்றனர் என்பதும் உண்மை. ஆனால் இம் முறையினால் உயர்கல்வி பெறும் அனைவரும் வேலை வாய்ப்பைப் பெற முடிகிறதா என்றால் இல்லை என்ற விடையே நமக்குக் கிடைக்கும். ஆனால் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் கல்வியை முடித்தவுடன் தங்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் அல்லது வேலை கிடைத்துவிடும் என்ற மேலோங்கிய உணர்வோடுதான் உள்ளனர். இது தவறு என்று கொள்ள முடியாது. காரணம் இதுதான் இன்றைய சமூகத் தேவை. அதற்குண்டான முதல் பணி நம் கல்வி முறையில் சிலமாற்றங்களைக் கொண்டு வருவது அவசியத் தேவையாகும். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, பாலிடெக்னிக் கல்லூரிகள் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய ஓராண்டு சான்றிதழ் படிப்புகளை வழங்கத் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை வாயிலாகத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 62 கலை அறிவியல் கல்லூரிகள், 53 பாலிடெக்னிக் கல்லூரிகளுடன் இணைக்கப்பட்டு, அலுவலக மின்னாட்சி (ஆபீஸ் ஆட்டோமேஷன்) மற்றும் வலைத்தள வடிவமைப்பு (வெப்டிசைன்) உள்ளிட்ட துறைகளில் பயிற்சி அளிக்கப்படும் கல்வி முறை உருவாக்கப்படும் என்ற அறிவிப்பும், கல்லூரிகளில் வழங்கப்படும் மூன்று ஆண்டு பட்டப்படிப்புகள் காலத்தேவை மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்படுவது அவசியம் என சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி. திருவாசகம் வெளியிட்டுள்ள கருத்தும், மாணவர்கள் தாங்கள் உயர்கல்வி பயிலுகின்ற போதே வேலைவாய்ப்புக் கல்வியையும் கற்று, கல்லூரியை விட்டு வெளியே வருகின்ற சூழ்நிலையை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கும் அறிவிப்புகளாகும். இத்தகைய அறிவிப்புகளின் தொடர்ச்சியாக ஒரு கருத்தை இங்கே பதிவு செய்வது அவசியமாகிறது. உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பட்டப்படிப்பில் இறுதி ஆண்டு பயிலுகின்ற போதே தொழில் முனைவோர் என்ற பாடத்திட்டத்தை அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இடம்பெறச் செய்து இறுதி ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயப் பாடமாக்கி, மாணவர்கள் அவர்கள் விரும்பும் தொழில் குறித்த தொழிற் பாடங்களைக் கற்கும் வகையில் பாடத்திட்டங்களும், அதற்குரிய வசதியும், வாய்ப்பும் உருவாக்கப்பட வேண்டும். இத்தகைய பாடத்திட்டங்களை உருவாக்குவதால் மட்டும் வேலை வாய்ப்புக் கிடைத்துவிடுமா என்ற கேள்வி எழக் கூடும். தொழில் முனைவோர் பயிற்சியின் வாயிலாக ஒரு மாணவர் உற்பத்திப் பொருள், உற்பத்தித்திறன், வணிகம், வணிகம் செய்வதற்கான களம், சந்தைப் பொருளாதாரம், திட்டம் உருவாக்கல், திட்டஅறிக்கை உருவாக்குதல், பொருள்களைத் தேர்வுசெய்தல், புதிய பொருள்களின் தேவையும் அதன் உற்பத்தியும், தொழில் நுட்பத் திறனைத் தேர்வு செய்வது, தொழிற்சாலை வசதிகள், தொழில் முனைவதற்கான நிதி ஆதாரம் வங்கிகள் மூலமும், வர்த்தக நிறுவனங்கள் மூலமும் கடன் பெறுவதற்கான வழிவகைகளை அறிவது, பெற்ற நிதி ஒழுங்காகச் செலவிடப்படுகிறதா என்பதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளுதல், நிதி அளவீடுகள், லாபத்தை அறிதல், வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தும் முறை, தொழிலாளர் நிர்வாகம், தரநிர்ணயம், விற்பனை நிர்வாகம், இடைத்தரகர்களின் சூழ்ச்சியை எதிர்கொள்ளுதல், சந்தை வணிக யுக்திகள், விலையை நிர்ணயிக்கும் திறன், விற்பனை வரி, சுங்கவரி, மன அழுத்தம், ஆளுமைத்திறன் ஆகியவை குறித்து தெளிவான முறையிலும், விரிவான வகையிலும் பாடத்திட்டங்களை உருவாக்கி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு அளிக்கப்படும் பயிற்சிகள் நேர்முறைப்பாடமாகவும், செயல்முறை விளக்கமாகவும், கருத்தரங்குகளாகவும் வரையறுக்கப்படவேண்டும். செயல்முறை விளக்கமும், கருத்தரங்குகளும் மாணவர், தான் என்ன தொழில் குறித்து தொழில் முனைவோர் பயிற்சியைப் பெற விரும்புகிறாரோ அது பற்றி விரிவான வகையில் அறிந்து கொள்ளப் பெரிதும் உதவும். அவர் சுய தொழிலைத் தொடங்குவதற்கான அடிப்படையான பொருள் குறித்தும், அதன் உற்பத்தி பற்றியும், பொருள் ஈட்டும் வழிவகைகள் குறித்தும் அறிந்து கொள்ள இத்தகைய செயல்முறைப் பயிற்சிகள் துணைநிற்கும். பயிற்சி முடியும் தருவாயில் பயிற்சியாளர்கள் நன்கு பயிற்சி பெற்ற தொழில் முனைவோர்களாகவும், விற்பனை உத்தி, விற்பனைத் தந்திரங்களை அறிந்து தங்களை ஒரு தொழில் முனைவோராய் உருவாக்கிக் கொள்ளவும் முடியும். மேலும் அவர்கள் வேலைத் தேடி அலையும் அவலத்திலிருந்து விடுபட்டு ஒரு சிறந்த தொழில் முனைவோராய் தன் உயர்கல்வியை முடித்து வெளியேறும் வாய்ப்பைப் பெறுவர். விரும்பி ஏற்கும் தொழிற்கல்வியின் மூலம், தாங்கள் ஏற்கப்போகும் தொழில் குறித்தும், அதன் மூலம் பொருள் வரும் வழிகளைப் பெருகச் செய்து, அதில் வரும் இடையூறுகளை ஆராய்ந்து, நீக்கவல்ல திறன் கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்கும் பயிற்சி, அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். இந்த வகையில் மாணவர்களைத் தயார்படுத்த சிறந்த ஆசிரியர்களும், பயிற்சியாளர்களும் இனம் காணப்படவேண்டும். அவர்கள் சிறந்த முறையில் பாடத் திட்டங்களையும், பயிற்சி முறைகளையும் உருவாக்கித் தரவேண்டும். சிந்தனையின் வெளிப்பாடுதான் செயல்திட்டங்கள் என்ற வகையில் சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், அனுபவமிக்க தொழில் முனைவோர், சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடம் இது குறித்த சிந்தனைகளையும், கருத்துகளையும் கேட்டறிந்து அவர்களது பரிந்துரையின்படி பாடத்திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். பட்டப்படிப்பின் இறுதி ஆண்டின் முடிவில் பட்டத்துடன் வெளியே வருவதுடன் ஒரு தொழில் முனைவோராகவும், கல்லூரியை விட்டு வெளியே வரும் போது தன் வாழ்வில் தன்னம்பிக்கை கொண்ட மனிதனாய் வெளியேறுகிறோம் என்ற உணர்வையும், நிலையையும் உண்டாக்க வேண்டும். இந்த உணர்வே அவரை ஒரு தொழில் முனைவோராய் நிலைநிறுத்தும். புதிய தொழில் முனைவோரால் தொழில்கள் தொடங்கப்பட்டால் அந்தந்தப் பகுதிகளில் பிரசித்தி பெற்ற தொழில்கள் மேலும் நன்கு செழித்து வளர்கின்ற நிலை ஏற்படும். இதன் மூலம் வேலை தேடுவோரின் எண்ணிக்கை ஓரளவுக்குக் குறைவதற்கான வழிவகைகள் உண்டாகும் என்று நம்பலாம். எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், அனைவருக்கும் வேலை உண்டென்று சொல்லும் நிலை வரவேண்டும் என்ற சூழலை வளர்ந்து வரும் சமுதாயத்துக்கு உருவாக்கித் தரவேண்டியது இன்றைய அவசியத் தேவை. சமுதாயத்தின் இன்றைய இன்றியமையாத் தேவையை அறிந்து அதைப் பூர்த்தி செய்யும் வகையில் கல்வி முறையில் உரிய மாற்றங்களைக் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது மட்டுமன்று, அது காலத்தின் கட்டாயம். அதுவே சமூகத் தேடலை நிறைவு செய்யும் உண்மையான கல்வி முறையின் அடையாளம்.
நன்றி:
தினமணி

திங்கள், 23 நவம்பர், 2009

ஆக்ஸ்போர்ட் : தமிழருக்கு பெருமை


ஐரோப்பாவின் ஆக்ஸ்போர்டில் உள்ள தமிழ் மற்றும் நுண்கலைகளுக்கான மையம், தமிழகத்தின் புதுக்கோட்டையில் ஞானாயலா நூலகத்தை நிறுவி, நடத்தி வரும் பா.கிருஷ்ணமூர்த்திக்கு மிக உயரிய விருதான ஆன்றவிந்த சான்றோர் விருதினை அளித்து கவுரவித்துள்ளது. மையத்தின் நிறுவனரும், மூத்த தமிழாசிரியையும், ஊடகவியலாளருமான ரீட்டா பற்றிமாகரனின் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.

முதுகலைப்பட்டதாரியும், மேல்நிலைப்பள்ளியின் தலையாசிரியருமான பா.கிருஷ்ணமூர்த்தியும், அவரது மனைவியும் தாவரவியல் பேராசிரியையுமான ‌டோரதி கிருஷ்ணமூர்த்தியும் கடந்த 50 ஆண்டுகளாக நூலகப்பணியில் தம்மை அர்ப்பணித்து, அரிய தமிழ் நூல்கள் பலவற்றைத் தம் சொந்த பணத்தில் வாங்கி, பாதுகாத்து, ஞானலயா என்னும் நூலகத்தை உலகில் தமிழ் வளர்வதற்காக நடத்தி வருகின்றனர். இந்த தமிழ்ப்பணிக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த ஆன்றவிந்த சான்றோர் விருது வழங்கப்பட்டது. இவ்விருதினை ஐரோப்பாவில் புகழ்பெற்ற ஆய்வாளரும், பத்திரிகையாளரும், ஆசிரியருமான சூ.யோ.பற்றிமாகரன் அறிவிக்க, ஆக்ஸ்போர்டில் வாழும் மேல்நிலைப்பள்ளி தலையாசிரியரான ராமலிங்க தேவர் வழங்கியதுடன் பொன்னாடை‌ போர்த்தியும் கிருஷ்ணமூர்த்தியை கவுரவித்தார். இந்தியாவில் பல விருதுகளையும், மலேசியாவில் நூலக நுண்ணறிவாளர் விருதையும் பெற்ற பா.கிருஷணமூர்த்திக்கு, ஐரோப்பிய விருதாக ஆக்ஸ்போர்டில் வழங்கப்பட்ட ஆன்றவிந்த சான்றோர் விருது அமைந்தது. வாரியார் மீது பெருமதிப்புள்ள கிருஷ்ணமூர்த்தி, வாரியாரின் பெருமைகள் குறித்து விரிவுரை ஒன்றையும் நிகழ்த்தினார். ஆக்ஸ்போர்டு வாழ் தமிழ் விஞ்ஞானிகள், டாக்டர்கள், பெரியோர்கள், வர்த்தகர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.