உலகின் சிறந்த நிர்வாகிகள் : முகேஷுக்கு 5ம் இடம்  

Posted by அபுல் பசர் in , ,


இந்திய பங்கு சந்தைகளில் அதிக மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் தலைவர் முகேஷ் அம்பானி, உலகின் தலைசிறந்த நிர்வாகிகள் பட்டியலில் 5ம் இடம் பிடித்துள்ளார்.
 

உலகின் தலைசிறந்த 5 நிர்வாகிகளின் பட்டியலை ஹார்வர்டு பல்கலைகழகத்தின் ஹார்வர்டு பிசினஸ் ரிவ்யூ இதழ் தயாரித்துள்ளது. பங்குச் சந்தையில் பதிவு பெற்றுள்ள 2000 கம்பெனிகளின் தலைமை நிர்வாகிகள் இந்தப் பட்டியலுக்காக ஆய்வு செய்யப்பட்டனர். 

1995 ஜனவரிக்கு பின் 2007 டிசம்பர் வரை பணியில் சேர்ந்தவர்கள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். இவர்கள் 33 நாடுகளைச் சேர்ந்தவர்கள். 48 தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களின் சராசரி வயது 52. இவர்களில் 1.5 சதவீதம் பேர் பெண்கள். 15 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் சொந்த நாடு அல்லாத பிற நாடுகளில் பணி புரிகிறார்கள்.
 

உலக அளவில் தலை சிறந்த 5 நிர்வாகிகளின் பெயரைக் கொண்ட பட்டியலுடன் தயாரித்து ஹார்வர்டு பிசினஸ் ரிவ்யூ இதழ் வெளியிட்டுள்ளது. முதல் நான்கு இடங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ், யுன் ஜோங்& யோங்& சம்சங் எலெக்ட்ரானிக்ஸ், அலெக்ஸி மில்லர்&கேஸ்புரோம் நிறுவனம்&ரஷ்யா, ஜான் சேம்பர்ஸ்&சிஸ்கோ சிஸ்டம்ஸ் ஆகியோர் உள்ளனர்.

டாப் 50 பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்தியர் முகேஷ் அம்பானி.


தோல்வியை நோக்கி கோபென் கேஹன் மாநாடு  

Posted by அபுல் பசர் in , ,


வளர்ந்த நாடுகள் நச்சுப் புகையை குறைப்பது, வளரும் நாடுகளுக்கு நிதியுதவி கொடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை கண்டித்து, கோபன்ஹேகன் பருவநிலை மாற்ற மாநாட்டில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங்கும், சீன பிரதமர் வென் ஜியாபோவும் தங்கள் குழுவுடன் வெளிநடப்பு செய்தனர். இதனால், மாநாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

தொழிற்சாலைகள், வாகனங்கள் வெளியிடும் புகையால் புவி வெப்பமடைந்து பருவ நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. அதை தடுப்பது பற்றி முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் ஐ.நா. சார்பில் 15 வது பருவநிலை மாநாடு நடந்தது.  7ம் தேதி தொடங்கிய இந்த மாநாட்டில் 192 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 
 

பருவநிலை மாற்றம் விவகாரத்தில் வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. கியாட்டோ மாநாட்டு தீர்மானத்தின்படி, நச்சுப் புகையை கட்டுப்படுத்த வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் நிதி உதவி செய்ய வேண்டும் என்று வளரும் நாடுகள் கோரிக்கை வைத்தன. இதை வளர்ந்த நாடுகள் ஏற்க மறுத்துவிட்டன. இந்த 10 நாள் விவாதத்தில் இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகள் ஒரே நிலையை எடுத்து ஓரணியாக நின்றன.
 

தலைவர்கள் பங்கேற்கும் கடைசி நாள் மாநாடு நேற்று நடந்தது. பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன பிரதமர் வென் ஜியாபோ, பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன், ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான்&கி&மூன் உட்பட தலைவர்கள் பங்கேற்றனர்.
 

சீன பிரதமர் வென் ஜியாபோ பேசுகையில், “வளரும் நாடுகளுக்கும் வளர்ந்த நாடுகளுக்கும் வித்தியாசமான பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும். நச்சுப்புகை வெளியிடுவது தொடர்பாக வளர்ந்த நாடுகள் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். பருவநிலை மாற்றம் பற்றிய பிரச்னையை சீனா மிக கடுமையாக எடுத்துக் கொண்டுள்ளது. நச்சுப் புகை வெளியேற்றத்தில் நாங்கள் நிர்ணயித்த இலக்கை தாண்டிக் காட்டுவோம்’’ என்றார்.
 

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பேசுகையில், “பருவநிலை மாற்றம் பற்றி உலக அளவில் உடன்பாட்டுக்கு வருவது நமது அனைவரின் கடமை. இதில் காலதாமதம் செய்ய நேரம் இல்லை. நாம் உடனடியாக செயல்பட்டாக வேண்டும். நச்சுப்புகை வெளியேற்றத்தை குறைப்பதை கண்காணிக்க உலகளவிலான அமைப்பை ஏற்படுத்த வேண்டும் அதே நேரம், அது மற்ற நாடுகளின் இறையாண்மையில் தலையிடுவதாக இருக்கக் கூடாது. 

நச்சுப் புகையை குறைப்பதற்காக வளரும் நாடுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் கோடி நிதி தர தயார். அதற்கு நச்சுப் புகை குறைப்பில் ஒளிவு மறைவு இல்லாமை தொடர்பாக விரிவான ஒப்பந்தம் போட வேண்டும்’’ என்றார்
 

பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், ‘‘கியாட்டோ மாநாட்டு தீர்மானங்களை ஏற்றுக் கொண்ட நாடுகள் நச்சுப் புகை அளவை குறைக்க வேண்டும். பருவநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா என்பதால் இங்கு நடைபெறும் பேச்சுவார்த்தை வெற்றி பெற வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறோம்.

இந்தியா தானாக முன்வந்து அறிவித்தபடி 2005ம் ஆண்டு இருந்ததை விட 2020ம் ஆண்டு நச்சுப்புகை வெளியேற்றத்தை 20 சதவீதம் அளவுக்கு குறைத்துவிடும். சிக்கலான பணி நம்மை எதிர்நோக்கி காத்து இருக்கிறது. நாம் கருத்து வேறுபாடுகளை மறந்து நடுநிலையான தீர்வு காண ஆக்க பூர்வமாக பணியாற்ற வேண்டும்’’ என்றார்.
கியோட்ட மாநாட்டு தீர்மானத்தை ஏற்கவேண்டும் என்ற வளரும் நாடுகளின் கோரிக்கையை வளர்ந்த நாடுகள் ஏற்கவில்லை. இதனால்,  முடிவு எதுவும் ஏற்படாமல் பேச்சு வார்த்தை இழுபறியானது. 


இதனால், பிரதமர் மன்மோகன் சிங்கும், சீன பிரதமர் வென் ஜியாபோவும் மாநாட்டில் இருந்து தங்கள் நாட்டு பிரதிநிதிகளுடன் வெளிநடப்பு செய்தனர். இதனால், கடந்த 12 நாட்களாக நடந்த மாநாடு எந்த முடிவும் எடுக்காமல் தோல்வியில் முடிவடைந்தது.
முக்கிய இரண்டு நாடுகளின் தலைவர்கள் வெளிநடப்பு செய்ததால் மாநாட்டில் பரபரப்பு ஏற்பட்டது.


வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா  

Posted by அபுல் பசர் in ,



மண்டேலாவின் முழுப்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். 1918 ம் ஆண்டு ஜுலை மாதம் 18 ந்தேதி தென்ஆப்பிரிக் காவில் உள்ள குலு கிராமத்தில் ஒரு மண் குடிசையில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி மக்கள் தலைவர்.

மண்டேலா இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். 1941 ம் ஆண்டு ஜோகன்ஸ்பர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரி யாகவும், எஸ்டேட் ஏஜெண்டாகவும் வேலை பார்த்தார்.

அப்போது நோமதாம் சங்கர் என்ற நர்சை திருமணம் செய்து கொண்டார். மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் தென் ஆப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை தடை செய்தது. மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது.

5 ஆண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது 1958.ம் ஆண்டு வின்னி மடிகி லேனா என்பவரை மணந்தார். வின்னி தலைவரின் கொள்கைகளுக்காக போராடி வந்தார். மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகள்; 2 வது மனைவி மூலம் 2 குழந்தைகள்.
தென்ஆப்பிரிக்க (கறுப்பர் இன) தலைவர் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருந்தபின் விடுதலை செய்யப்பட்டார். தென்ஆப்பிரிக்க நாட்டில் கறுப்பர்கள் (நீக்ரோக்கள்) பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அங்கு வெள்ளையர்கள் சிறுபான்மையினர். ஆனாலும் ஆட்சி பீடத்தில் வெள்ளையர்களே அமர்ந்தார்கள்.

கறுப்பர்களின் நலனை பாதுகாப்பதற்காக "ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்" என்ற கட்சி உருவானது. அதன் தலைவரான நெல்சன் மண்டேலா, இன வெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து போராடினார்.

அரசாங்கம் கடுமையாக கெடுபிடி செய்ததால் 1961 ம் ஆண்டில் மண்டேலா தலைமறைவானார். அவரை பிடிக்க வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. 1962 ம் ஆண்டு மண்டேலா கைது செய்யப்பட்டார்.

தென்ஆப்பிரிக்க அரசை கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மண்டேலாவுக்கு 1964 ம் ஆண்டு ஜுன் 12 ந்தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது.

பல ஆண்டுகள் அவரை தனிமைச்சிறையில் அடைத்து கொடுமை செய்தது தென்ஆப்பிரிக்க அரசாங்கம். மனைவியை சந்திப்பதற்குகூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988 ம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றார். அதனால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.

மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால் தென்ஆப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார்.

மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் மனைவி தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.

"மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்" என்று தென்ஆப்பிரிக்க அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். தென்ஆப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக டெக்ளார்க் பதவிக்கு வந்தார். அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார்.

இதனால் மண்டேலாவின் விடுதலை நாளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது. மண்டேலா 11.2.1990 அன்று விடுதலை செய்யப்படுவார் என்று ஜனாதிபதி டெக்ளார்க் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

மண்டேலா 1962.ல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது. விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 71.

மண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. இந்தியா சார்பாக பிரதமர் வி.பி.சிங் தலைமையில் வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. தென்ஆப்பிரிக்க அரசாங்கம் அறிவித்தபடியே 11.2.1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.

மண்டேலாவுடன் அவர் மனைவி வின்னி கை கோர்த்தபடி சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில் ஆப்பிரிக்க நாட்டு தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர்.

ஏராளமான தொண்டர்கள் ஆப்பிரிக்க கொடியை அசைத்த படி வரவேற்றனர். சிலர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மண்டேலாவும், அவரது மனைவியும் கூடியிருந்தவர்களை நோக்கி கையை உயர்த்தி வரவேற்பை ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் மண்டேலாவை போலீசார் பாதுகாப்பாக கேப்டவுன் நகருக்கு அழைத்துச்சென்றனர். சிறைச்சாலையின் வாசலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த டெலிவிஷன் மற்றும் புகைப்பட நிபுணர்கள் அவரை படம் எடுத்தனர். மண்டேலா விடுதலையான நிகழ்ச்சி தென்ஆப்பிரிக்க நாடு முழுவதும் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

மண்டேலா விடுதலையானதும், பிரதமர் வி.பி.சிங் அவருக்கு பாராட்டு தெரிவித்தார். மண்டேலா விடுதலையான சிறிது நேரத்தில் அவரிடம் பிரதமர் வி.பி.சிங் எழுதிய பாராட்டுக் கடிதம் கொடுக்கப் பட்டது. "உங்களது சுதந்திர போராட்டத்துக்கு இந்தியா என்றும் உறுதுணையாக இருக்கும் என்று வி.பி.சிங் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

மண்டேலா விடுதலை செய்யப்பட்டதை உலக தலைவர்கள் பலர் வரவேற்றார்கள். கேப்டவுன் நகருக்கு திரும்பிய மண்டேலா அங்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:-

"இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வ தேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது.

நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயக ரீதியில் தேர்ந்து எடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம்.

உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளை பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு "நேரு சமாதான விருது" வழங்கியது. கணவர் சார்பில் வின்னி டெல்லிக்கு வந்து அந்த விருதை பெற்றார்.மண்டேலாவின் தியாகம் வீண் போகவில்லை.1994 மே 10 ந் தேதி அவர் தென்ஆப்பிரிக்காவின் அதிபர் ஆனார்.

அவர் அதிபர் ஆனபின், 1998 ம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்க பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத், உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.


காத்திருக்கும் புதைகுழிக்குள் வீழ்ந்து விடுமோ இந்தியா?  

Posted by அபுல் பசர் in , ,



வர​லாறு என்​பது திட்​ட​மிட்டு நிக​ழக்​கூ​டி​ய​தல்ல.​ சொல்​லப்​போ​னால்,​​ மிகச் சாதா​ர​ண​ மான அபத்​த​மான முடி​வு​கள்​தான் பெரும்​பா​லான சரித்​திர நிகழ்​வு​களை உரு​வாக்கி இருக்​கின்​றன.​ சமீ​பத்​தில் நடந்த இப்​ப​டிப்​பட்ட ஒரு நிகழ்வு இந்​தியா சம்​பந்​தப்​பட்​டது.​ கார​ணம்,​​ அமெ​ரிக்க வர​லாற்​றில் வியூக முக்​கி​யத்​து​வம் வாய்ந்த ஒரு முடிவை அறி​விக்​கும் முன் இந்​தி​யப் பிர​த​ம​ரு​டன் அந்​நாட்டு அதி​பர் உரை​யா​டி​யி​ருப்​ப​தைச் சாதா​ரண நிகழ்​வாக நம்மால்  எடுத்​துக்​கொள்ள முடி​ய​வில்லை.​

ஆப்​கன் போரில் ஈடு​பட்​டி​ருக்​கும் அமெ​ரிக்​கத் துருப்​பு​க​ளின் எண்​ணிக்​கையை அதி​க​ரிப்​பது(அதா​வது)​போரை மேலும் தீவி​ரப்​ப​டுத்​து​வது என்று வெள்ளை மாளிகை எடுத்​தி​ருக்​கும் முடிவை இப்​போது மதிப்​பி​டு​வது கடி​ன​மா​னது.​ இதைத் தவிர்த்து,​​ இப்​போ​தைக்கு அமெ​ரிக்​கா​வுக்கு வேறு நல்ல தெரி​வு​கள் ஏதும் இருப்​ப​தா​கத் தெரி​ய​வில்லை.

அதே​ச ​ம​யம்,​​ இந்​தப் போரில் அல்-​காயிதா மற்​றும் தாலி​பன்​க​ளின் வலைப் பின்​னல்​களை அறுக்க நேசப் படை​கள் பாகிஸ்​தா​னு​டன் கூட்​டணி அமைத்​தால் போதாது என்​கிற முடி​வுக்கு அமெ​ரிக்கா வந்​தி​ருக்​கி​றது.​ ராணுவ நட​வ​டிக்​கை​க​ளில்,​​ ஆளில்லா "காம்​பட் ட்ரோன்' தாக்​கு​தல் விமா​னங்​க​ளைப்​போல இந்​தி​யா​வும் கை கோர்க்க வேண்​டும் என்று அமெ​ரிக்க வியூ​க​வா​தி​கள் நினைக்​கி​றார்​கள்.​ இந்​தப் பின்​ன​ணி​யி​லேயே மன்​மோ​கன் சிங்-​ஒபாமா இடை​யே​யான உரை​யா​டல் நடந்​தேறி இருக்​கி​றது.​

உரை ​யா​ட​லைத் தொடர்ந்து,​​ அமெ​ரிக்க அறி​விப்​புக்கு இந்​திய வெளி​யு​ற​வுத் துறை அமைச்​ச​கம் வெளி​யிட்​டி​ருக்​கும் வர​வேற்​பைப் பார்க்​கும்​போது அமெ​ரிக்​கா​வின் வியூ​கத்தை நோக்கி இந்​தியா நக​ரத் தொடங்​கி​விட்​ட​தா​கவே தோன்​று​கி​றது.​ ஒரு​வேளை ஆப்​க​னுக்கு இந்​தி​யப் படை​களை அனுப்ப நம் அரசு முடி​வெ​டுத்​தால்,​​ ராணுவ ரீதி​யா​க​வும் ராஜ​தந்​திர ரீதி​யா​க​வும் இந்​தியா எடுக்​கப்​போ​கும் மிக மோச​மான முடி​வு​க​ளில் ஒன்​றாக அது அமை​யு​யும்.​ சோவி​யத் ஒன்​றி​ய​மும் அமெ​ரிக்​கா​வும் கற்ற பாடங்​க​ளை​வி​ட​வும் மோச​மான பாடங்​களை இந்​தியா எதிர்​கொள்ள நேர்ந்​தால் ஆச்​ச​ரி​யப்​ப​டு​வ​தற்​கில்லை.​

ஆப்​கன் மீது 1979-ல் சோவி​யத் ஒன்​றி​யம் போர் தொடுத்​தது.​ ஏறத்​தாழ 10 ஆண்​டு​கள் நீடித்த அந்​தப் போரின் இறு​தி​யில் வலு​வான சோவி​யத் படை​கள் தோல்​வி​யைத் தழு​வின.​ அப்​பு​றம் 12 ஆண்​டு​கள் உள்​நாட்​டுப் போர்.​ பிறகு,​​ 2001 முதல் அமெ​ரிக்கா அங்கு போரிட்​டுக்​கொண்​டி​ருக்​கி​றது.​ ரஷி​யா​வும் சரி,​​ அமெ​ரிக்​கா​வும் சரி;​ ஆப்​க​னைப் பற்றி நினைத்​தது வேறு;​ நடந்​தது வேறு

முன்​ன​தாக,​​ ஆங்​கி​லேயே,​ஆப்​கா​னி​யப் போர்​க​ளில் ஆங்​கி​லே​யர்​க​ளுக்​கும் இப்​ப​டித்​தான் நேர்ந்​தது.​ புவி​யி​ய​லைப்​போ​லவே சிக்​க​லான சமூக இயக்​க​வி​ய​லைக் கொண்ட ஆப்​கன் ""ஏன் இந்த நாட்​டுக்​குள் காலடி எடுத்​து​வைத்​தோம்'' என்ற மோச​மான அனு​ப​வத்​தையே படை​யெ​டுத்த நாடு​க​ளுக்​கெல்​லாம் அளித்​தி​ருக்​கி​றது என்​பது சரித்​தி​ரம் புகட்​டும் பாடம்.​

ஆங்​கி​லே​யர்​க​ ளும் ரஷி​யர்​க​ளும் தோல்​வியை ஒப்​புக்​கொண்​டார்​கள்.​ அமெ​ரிக்​கர்​கள் முடிந்த வரை மோதிப் பார்க்க முடி​வெ​டுத்​தி​ருக்​கி​றார்​கள்.​ அவ்​வ​ளவே.​இந்​நி​லை​யில்,​​ இந்​தி​யப் படை​கள் ஆப்​க​னுக்​குள் நுழை​வது இந்​தி​யா​வுக்​குத் தேவை​யற்ற தலைவ​லியை உரு​வாக்​கும்.​ 

ஏதோ ஒரு காலை வேளை​யில் அமெ​ரிக்க விமா​னங்​கள் தன் துருப்​பு​க​ளைச் சுமந்து பல்​லா​யி​ரம் கி.மீ.​ தொலை​வுக்கு அப்​பால் பறந்த பின்​னர் இந்த வலி​யின் தீவி​ரத்தை இந்​தியா உணர வேண்​டி​யி​ருக்​கும்.​கடந்த சில மாதங்​க​ளா​கவே இந்​திய எல்​லை​க​ளில் அதி​க​ரித்​து​வ​ரும் சீன அத்​து​மீ​றல்​கள்,​​ இந்​தி​யா​வின் அண்டை நாடு​க​ளில் நிறு​வப்​ப​டும் ராணுவ முக்​கி​யத்​து​வம் மிக்க சீனக் கட்​ட​மைப்​பு​கள் குறித்த செய்​தி​கள் ஒரு​வி​த​மான அச்​சத்தை உரு​வாக்கி வரு​கி​றது.​ இதை எதிர்​கொள்ள ""இந்​தியா ராணுவ ரீதி​யி​லான பலத்​தைப் பெருக்க வேண்​டும்.

சீனா​வுக்​குப் பாடம் புகட்ட வேண்​டும்'' என்ற குரல்​கள் எழு​வ​தை​யும் பார்க்​கி​றோம்.​ஆனால்,​​ இந்​தியா எங்கு தன் பலத்​தைப் பெருக்க வேண்​டும் என்​றால்,​​ முத​லில் ராஜ​தந்​திர வட்​டா​ரத்​தில்​தான்.​ கடந்த கால் நூற்​றாண்டு கால​மா​கத் தொடர்ச்​சி​யாக மிக மோச​மான முடி​வு​கள் எடுக்​கப்​பட்ட துறை நமது வெளி​யு​ற​வுத் துறை​யா​கவே இருக்​கும்.​ ஆகை​யால்,​​ இந்​தி​யர்​கள் முத​லில் தம் குரலை நம்​மு​டைய வெளி​யு​ற​வுக் கொள்​கைக்​காக எழுப்​பு​வதே பொருத்​த​மாக இருக்​கும்.​ தற்​போ​தைய தேவை​யும் அதுவே.​அர​சனை நம்​பிப் புரு​ஷ​னைக் கைவிட்ட கதை​யாக,​​ 

அமெ​ரிக்​காவை நம்பி நாம் நமது தன்​னம்​பிக்​கை​யை​யும்,​​ தனித்​தன்​மை​யை​யும் கைவி​டு​கி​றோம் என்று அர​சை​யும்,​​ குறிப்​பாக,​​ வெளி​யு​ற​வுத் துறை​யை​யும் எச்​ச​ரிக்க விரும்​பு​கி​றோம்!


செயற்கை கலப்பில்லாத இயற்கை ஆதரவு திருமணம்  

Posted by அபுல் பசர் in ,


மின்னொளி விளக்குகள் இல்லை, எங்கும் பிளாஸ்டிக் டம்ளர்கள் இல்லை, தாம்பூல கவரில்லை... விருந்தில் இடம்பெற்ற காய்கறியில் ரசாயன கலப்பில்லை. இப்படி முற்றிலும் இயற்கை ஆதரவு திருமணம் அகமதாபாத்தில் நடந்துள்ளது. 

குஜராத்தைச் சேர்ந்த அருஷி ஷா (22), தீபன் ஷா (24) ஜோடிக்கு கடந்த ஞாயிறன்று திருமணம் நடந்தது. மணமகன்  பருத்தி வேட்டி அணிந்திருக்க, மணமகள் காதி பட்டு சேலையில் இருந்தார். விருந்து நடைபெறும் இடத்தில் பன்னீர் டிக்கா, ஸ்பிரிங் ரோல் இல்லை. மாறாக, வேக வைத்த கடலை, பழங்கள் இருந்தன.

திருமண சீதனமாக அருஷி கொண்டு வந்தது ஒரு பசுவும் கன்றும். திருமணத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அறவே தடை. பரிசுப் பொருட்களிலும் பிளாஸ்டிக் தவிர்க்க, பத்திரிகையில் வேண்டுகோள் இருந்தது. மாறாக, உபயோகத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் செப்பு, வெள்ளி, பித்தளையில் இருந்தன.

மணமகள் குடும்பத்தினர் பணக்காரர்கள் என்ற போதிலும், திருமணம் வீட்டில் எளிமையாக நடந்தது. முதல்நாள் வரவேற்பில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு முற்றிலும் ரசாயனக் கலப்பின்றி விளைவிக்கப்பட்ட காய்கறிகளால், தூய நல்லெண்ணையில் தயாரான புலாவ் பரிமாறப்பட்டது.
இயற்கைக்கு மாறான பொருட்களால் சுற்றுச்சூழல் சீர்கெட்டு  பூமி சூடாகும் பிரச்னையைத் தடுப்பது பற்றி டென்மார்க் நாட்டின் கோபன்ஹெகனில் சர்வதேச மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. அதுபோன்ற பெரிய ஏற்பாடுகள் ஏதும் தேவையில்லை. அருஷி, தீபன் போன்ற ஜோடிகள் செய்த முயற்சியே போதுமானது.