ஞாயிறு, 31 ஜனவரி, 2010

பழங்களும் அதன் பலன்களும்



 

  
இன்றைக்கு நமக்கு வரும் பல நோய்களுக்கும் காரணம் நம்முடைய உணவுப்பழக்கங்களை நாம் மாற்றிக் கொண்டிருப்பதுதான்.  இயற்கை உணவுகளாகிய பழங்களையும் காய்கறிகளையும் அதிக அளவில் நாம்  நமது உணவில் சேர்த்துக்கொண்டால் நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளமுடியும். ஆரோக்கியமாக வாழமுடியும். 


மலையும் மலைசார்ந்த பகுதிகளில் வாழும் மக்கள்  பழங்களையும்,காய்கறிகளையும் அதிக அளவில் உணவாக கொள்வதால் ஆரோக்கியமாக வாழ்வதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.


ஏன் காடுகளில் வாழ்ந்த சித்தர்களும், ஞானிகளும் இயற்கை உணவாகிய பழங்களையும்  காய்கறிகளையும் சாப்பிட்டு நூறு வயதை கடந்தும் ஆரோக்கியமாக வாழ்ந்ததாக வரலாறு கூறுகின்றது.
அப்படிப்பட்ட இயற்கை உணவாகிய பழங்களும்,அதன் பலன்களும்.


ஆப்பிள் : இருதயநோய், இரத்தகொதிப்பு, மூட்டுவலி, தலைவலி போன்றவை வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.


திராட்சை : பசியின்மை, மலச்சிக்கல், சிறிநீரக கல், போன்ற நோய்களிலிருந்து உடலை பாது காக்கக்கூடியது.


ஆரஞ்சு : காய்ச்சல், எலும்பு நோய்கள், போன்ற வற்றிக்கு சிறந்த மருந்தாகும். முகப்பரு வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. வளரும் குழந்தைகளுக்கு ஆரஞ்சு பலத்தை அதிக அளவில் கொடுக்கலாம்.


மாதுளை : வயிற்றில் பூச்சி, அஜீரனகோளாறு, பித்தப்பை,சிறுநீரக கல், புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. மார்பக புற்று நோய் வரும் வாய்ப்பு குறைவு. இதில் உள்ள பைட்டோகெமிகல் என்னும் அமிலம் ஆன்றோஜான் என்ற ஹார்மோனை கட்டுப்படுத்தி மார்பக புற்றுநோய்க்கு காரணமான் செல்கள்,கட்டிகள் வளராமல் தடுக்கிறது.


வாழைப்பழம் : மூட்டுவலி, சிறுநீரக கோளாறு, மலசிக்கல், காசநோய், அலர்ஜி போன்ற நோய்கள் வராமல் தடுக்ககூடியது.


பப்பாளி : பசியின்மை, வயிற்றுபூசி, ஈரல், சம்பந்தமான நோய்களை தீர்க்கக்கூடியது. உடலை பளபளப்பாக்கும் தன்மை கொண்டது பப்பாளி.


நெல்லிக்கனி : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.  தூக்கமின்மை, உடல் கொழுப்பு குறைய, இளநரை, முடிஉதிர்வு போன்ற நோய்களிலிருந்தும் பாதுகாக்ககூடியது.


தர்ப்பூசணி :அதிக நீர்சத்து நிறைந்தது. வைட்டமின் "சி" ,பொட்டாசியம்,மற்றும் இரும்பு சாது கொண்டது. தாகத்தை தீர்க்க கூடியது.


சாத்துக்குடி : இரத்தத்தை விருத்தி அடைய செய்கிறது, உடல் அசதியை போக்ககூடியது, ஆரஞ்சு பழச்சாற்றை இரத்தம் உறிஞ்சி கொள்வதால் உடலுக்கு வெப்பமும்,சக்தியும் உடனடியாக கிடைத்துவிடுகிறது. எலும்புகள் வலுவடையும்.

பலாப்பழம் : கண்பார்வைக்கு உதவக்கூடிய விட்டமின் "  எ " சத்து அதிக அளவில் உள்ளது. நரம்புகளை உறுதியாக்கும்.


பேரிச்சை : இரும்பு சத்து, விட்டமின் "எ" மற்றும் சுண்ணாம்பு சத்து நிறைந்தது.  இதயம் வலுப்பெறும்.


இன்னும் வரும் ............................

சனி, 30 ஜனவரி, 2010

வீட்டின் உள் அலங்காரம் : அழகு படங்கள்

இங்கே நீங்கள் காணும் படங்கள் வீட்டின் உள் அலங்காரம் எப்படி அழகுற அமைக்கப்பட்டுள்ளது என்பதை எவ்வளவு அழகாக சொல்கிறது.
நம்மில் பலபேருக்கு கனவு இல்லம் ஒன்று கட்ட வேண்டும் என்ற ஆசை நிச்சயமாக இருக்கும்.அந்த ஆசைகள் நிறைவேறி கனவு இல்லம் கைக்கூடும்போது நீங்களும் உங்கள் கனவு இல்லத்தில் இப்படி பட்ட உள் அலங்காரம் செய்துகொள்ளுங்கள்.
காலங்கள் வரும் : கனவுகள் மெய்ப்படும்
 

வெள்ளி, 29 ஜனவரி, 2010

வரலாறு : ஆட்டோ சங்கர் (பகுதி - 4)









சங்கரின் முரட்டுத்தனம் தாங்காமல் லலிதா அவனை விட்டு ஓடுவதற்கு திட்டம் போட்டாள். இதற்கு அவள் சுடலையின் உதவியை நாடினாள். சுடலை லலிதாவை கடத்திக்கொண்டு பல்லாவரத்தில் உள்ள ஒரு வீட்டில் ரகசியமாக வைத்து இருந்தான்.


இதை சங்கர் தெரிந்து கொண்டு சுடலையிடம் சமாதானமாகப் பேசி, லலிதாவை மீண்டும் பெரியார் நகருக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தினான். சுடலையோடு ஓடியதற்காக லலிதாவையும் சங்கர் கொன்று தீர்த்தான். ஆட்டோ சங்கரின் அடாவடிதனத்துக்கு அவனுடைய தம்பி மோகனும், மைத்துனர் எல்டினும்தான் தளபதிகளாக இருந்து செயல்பட்டுள்ளனர். போலீஸ் விசாரணையின்போது மோகன் கூறியதாவது:-

சுடலையின் ஆலோசனையின் பேரில்தான் சங்கர் திருவான்மியூரில் விபசார விடுதி தொடங்கினான். சுடலை ஏராளமான அழகிகளை விபசார விடுதிக்கு அழைத்துக்கொண்டு வருவான். சில அழகிகளை பணத்துக்கு சங்கரிடம் விற்று விடுவான்.
சுடலை ஒரு பெண் ராசிக்காரன். அவனிடம் சிக்காத விபசார அழகிகளே கிடையாது என்று சங்கர் அடிக்கடி சொல்வான். எப்படியாவது ஒரு நாளைக்கு ஒரு அழகியை சங்கரிடம் சுடலை அறிமுகப்படுத்துவான்.


விபசார விடுதிக்கு வரும் நல்ல அழகிகளை சங்கர் அவன் கைவசப்படுத்திவிடுவான். அழகிகளிடம் சங்கரைத் தவிர வேறு யாரும் பேசக்கூடாது. அழகிகள் அவனுக்கு மட்டும்தான். அதன் பிறகு அவளுக்கு தனி வீடு. சில நாட்கள் கழித்து அவள் கழுத்தில் சங்கர் தாலி கட்டி மனைவியாக்கி விடுவான்.


ஜெகதீசுவரியை சங்கர் காதலித்தான். பெற்றோருக்கு தெரியாமல் அவளை வேலூரில் இருந்து சென்னைக்கு காரில் தூக்கிக்கொண்டு வந்து கல்யாணம் செய்து கொண்டான். வேறு வழி இல்லாமல் சங்கரிடம் ஜெகதீசுவரி மனைவியாக வாழ்க்கையை தொடங்கினாள். ஜெகதீசுவரியை சங்கர் குடும்பப் பெண் போல நடத்தினான்.


அதன்பிறகுதான் சங்கரின் விபசார விடுதிக்கு 1981-ம் வருடம் அக்டோபர் மாதம் கீதசுந்தரி வந்தாள். அவளை சுடலை அறிமுகம் செய்து வைத்தான். அவள் மிகவும் அழகாக இருந்தாள். கீதசுந்தரியை பார்த்தவுடன் அவளிடம் மனதை பறி கொடுத்து விட்டதாக எங்களிடம் சங்கர் கூறினான்.


கீதசுந்தரியுடன் சங்கர் குடிபோதையில் தாறுமாறாக நடந்து கொண்டான். இதனால் சங்கர் மீது கீதசுந்தரிக்கு வெறுப்பு ஏற்பட்டது. திருமணம் ஆன ஒரு வருடத்தில் சங்கருக்கும், கீதசுந்தரிக்கும் தகராறு முற்றியது. 1982-ம் வருடம் அக்டோபர் மாதம் 31-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை கீதசுந்தரி தீக்குளித்தாள். மாலை 4 மணி அளவில் அவள் பிணமானாள்.


கீதசுந்தரியின் மரணம் சங்கருக்கு பெரிய இழப்பாக இருந்தது. அவள் மீது சங்கர் வைத்திருந்த அன்பின் காரணமாக சங்கர், பெரியார் நகரில் கட்டிய பங்களாவுக்கு "கீதசுந்தரி" என்று பெயர் சூட்டினான். அதை கீதசுந்தரியின் நினைவு இல்லம் போல் வைத்து இருந்தான். அடுத்து சுமதி 3-வது மனைவியும், பெங்களூர் லலிதா 4-வது மனைவியும் ஆனார்கள். இவர்களையும் சுடலைதான் கடத்தி வந்தான்.


சங்கர் சாராயம் குடித்து வந்து கும்மாளம் போடுவது லலிதாவுக்கு பிடிக்கவில்லை. சங்கரின் முரட்டுத்தனத்துக்கு லலிதாவினால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால் அவள் சங்கரிடம் இருந்து தப்பித்துச் செல்ல திட்டம் தீட்டினாள். இதே நேரத்தில் லலிதா மீது சுடலைக்கு மோகம் ஏற்பட்டது. சங்கர் வெளியே போன நேரம் பார்த்து லலிதா சுடலையுடன் ஓடிவிட்டாள்.


இருவரும் பல்லாவரத்தில் தங்கி இருந்தார்கள். பிறகு நாங்கள் பல்லாவரம் சென்று சமாதானம் பேசி அவளை அழைத்து வந்தோம். 1987-ம் வருடம் அக்டோபர் மாதம் சுடலை சங்கர் வீட்டுக்கு வந்தான். அன்று அமாவாசை தினம். சுடலையை பார்த்ததும் சங்கருக்கு சரியான ஆத்திரம். அவனை தீர்த்துக்கட்டும்படி என்னிடமும், எல்டினிடமும் கூறினான். அவனுக்கு சாராயத்தை ஊற்றிக் கொடுத்து போதை ஏற்றி கழுத்தை நெரித்து கொலை செய்தோம். அவன் பிணத்தை சங்கர் வீட்டிலேயே எரித்தோம்.


இதைத்தொடர்ந்து  1988 வருடம் ஜனவரி மாதம் லலிதாவை பெரிய வீட்டுக்கு அழைத்து வந்தான். அன்று இரவு 11 மணிக்கு  அவளை கழுத்தை நெரித்து சங்கர் கொலை செய்தான். இதை அவள் எதிர்பார்க்கவில்லை. அவள் செத்து சுருண்டு விழுந்தாள். "நான் தொட்டவளை இனிமேல் எவனும் தொடக்கூடாது" என்று சங்கர் வெறியுடன் பேசினான்.


சங்கர், பெரியார் நகரில் அம்மன் கோவில் கட்டினான். இலவசமாக சிறுவர்களுக்கு இரவு பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்தான். இலவசமாக எல்லோருக்கும் சாராயம் குடிக்கக் கொடுப்பான். செலவுக்கு பணம் கொடுப்பான். சிறுவர்,சிறுமியர்களுக்கு பிஸ்கட், சாக்லெட்களை அள்ளி அள்ளி வீசுவான். எல்லா அரசியல் கட்சிகளுக்கும் கூட்டம் நடத்த நன்கொடை கொடுப்பான்.


திருவான்மியூரில் உள்ள பெரியார் நகர் மக்கள் மத்தியில் சங்கர் ஒரு பெரிய மனிதனாக நடமாடினான். அவனுடைய கொலை ரகசியங்கள் எல்லோருக்கும் தெரியாது. எங்களைச் சேர்ந்த ஒரு சிலருக்குத்தான் தெரியும்."


இவ்வாறு மோகன் கூறினான்.


ஆட்டோ சங்கரின் தந்தை பெயர் தங்கராஜ். தாய் ஜெயலட்சுமி. வேலூரைச் சேர்ந்தவர். இருவரும் கலப்பு திருமணம் செய்தார்கள். ஜெயலட்சுமி கணவரை விட்டு பிரிந்து சென்று வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டார்.


ஆட்டோ சங்கருக்கு சீதாலட்சுமி என்கிற கவிதா, ஹேமசுந்தரி என்ற 2 மகள்களும், சீனிவாசன், டெல்லி சுந்தர் என்ற 2 மகன்களும் இருந்தனர்.


இன்னும் வரும் ...................................

வியாழன், 28 ஜனவரி, 2010

பெற்ற பிள்ளைகளும் !முதியோர் இல்லங்களும்?




 

"தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை 
சொல் மிக்க மந்திரம் இல்லை"

எவ்வளவு அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் இவை.இன்றைக்கு இந்த வார்த்தைகளுக்கு உயிர் இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல தோன்றும்.காரணம் பெற்றவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுகின்ற கொடுமைதான். இந்த அவலம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டுதான் போகிறது.

சிந்தித்து பாருங்கள் அருமை சகோதர,சகோதிரிகளே 
உங்களை இந்த உலகிற்கு தந்தவர்கள் உங்கள் பெற்றோர்களே.உங்களுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர்களும் அவர்களே.
அவர்களுக்கு நீங்கள் செய்யும் கைமாறு இதுதானா?

உன்னை வயிற்றில் சுமக்க ஆரம்பித்த நாளிலிருந்து பெற்று எடுக்கின்ற வரை அந்த தாய்ப்படும் கஷ்டங்கள்தான் எத்தனை,எத்தனை. உன்னை நல்ல முறையில் பெற்றெடுக்க அந்த தாய் வேண்டாத தெய்வங்கள் உண்டா.போகாத புண்ணிய தளங்கள் உண்டா.


கருவுற்று இருக்கின்ற அந்த நேரத்தில் உணவு அருந்த மணம் இல்லை என்றாலும்கூட வயிற்றிலிருக்கும் உனக்கு ஊட்ட சத்து வேண்டும் என்பதற்காக  உணவு அருந்த்துவாள் உன் தாய்.

கண்ணின் மணியைப்போல் கருவுக்குள் 
உன்னை வைத்துக் காத்தவள் உன் தாய்.

நீ பிறந்ததும் உன்னை பார்த்து பரவசமடைந்து உன்னை வாரி அனைத்து,நெஞ்சில் வைத்து கொஞ்சி மகிழ்ந்த அந்த நெஞ்சை எட்டி உதைப்பது ஏன்?


நீ சிரித்தாள் அவளும் சிரித்து, நீ அழுதால் அவளும் அழுது,உனக்கு எது நல்லது,எது கெட்டது,என்று சொல்லி கொடுத்து,உன்னை சீராட்டி,பாராட்டி
வளர்த்த அந்த அன்னைக்கு நீ செய்யும் கைமாறு இதுதானா?


நீ பேச ஆரம்பித்து " அம்மா " என்று அழைக்கும் போது அதை கேட்ட மாத்திரத்தில் அந்த தாய் அடைகின்ற சந்தோசத்திற்கு அளவு உண்டா?
நீ தத்தி தத்தி நடை பயின்ற நாட்களில் சற்றே தடுமாறினாலும்,நெஞ்சம் பதறி உன்னை அந்த நெஞ்சோடு,வாஞ்சையுடன் அனைத்துகொள்ளும் அந்த பாசத்திற்கு ஈடு இணை உண்டா?




நீ நடை பயில ஆரம்பித்த அந்த நாட்களில் தந்தையின் கரம் பிடித்து நடந்த நாட்களை உன்னால் மறக்கமுடியுமா?

உன்னை தோளிலும்,முதுகிலும் தூக்கி சுமந்து தந்தை உன்னிடம் கொஞ்சி விளையாடிய அந்த நாட்களைத்தான் உன்னால் நினைக்காமல் இருக்க முடியுமா?


"தாயின் பாசம் தாய்ப்பாலுக்கு சமமானது.
களங்கமற்றது,கபடமற்றது,கலப்படமற்றது."

உங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் கொண்டு சேர்க்கும் முன் 
ஒருகணம் சிந்தித்து பாருங்கள்.

இன்று நீங்கள் எடுக்கின்ற இந்த முடிவை வரும் காலங்களில் உங்கள் பிள்ளைகள் உங்கள் மீது (முதியோர் இல்லத்தில் கொண்டு சேர்த்துவிடுவது )எடுக்க மாற்றார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்?


நீங்கள் எடுக்க நினைத்த இந்த முடிவைத்தானே உங்களின் பிள்ளைகளும் எடுப்பார்கள்.
தயவு செய்து பாசத்திற்கு,நேசத்திற்கும், உரிய அந்த பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் கொண்டு சேர்த்துவிடாதீர்கள்.

முதுமையை நேசியுங்கள், நமக்கும் முதுமை வரும் என்பதை எண்ணுங்கள்.
முதியோர்கள் நம் இல்லத்தில் (வீட்டில்)இருக்கவேண்டுமே தவிர 
" முதியோர் இல்லத்தில் " இருக்கக் கூடாது.


பகிர்ந்து கொள்ளுங்கள் : துன்பம் பாதியாகும்
புரிந்து கொள்ளுங்கள்   : இன்பம் இரட்டிப்பாகும்.


நம்பிக்கையுடன்
அபுல்பசர்.








புதன், 27 ஜனவரி, 2010

ஏலக்காய் : ஒரு பார்வை







ஏலக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண்பார்வை அதிகரிக்கும்.

ஏலப்பொடி, சீரகப்பொடி, சோம்புப் பொடி ஆகிய மூன்றையும் 5 கிராம் வீதம் எடுத்து கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் பசி கூடும், ஜீரணம் அதிகரிக்கும்.

ஏலத்தை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும்.

ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல், தொண்டை வலி ஆகியவைகள் தீரும்.

நான்கு ஏலத்தை கைப்பிடியளவு நாவல் இலைக் கொழுந்துடன் சேர்த்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிட்டால் செரியாமை, சீதக்காதி தீரும்.

ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்து போல் போட்டால் தலைவலி, சளி விலகும்.

புகைப்பதை நிறுத்த உதவும் ஏலக்காய்



ஏலக்காய் மணத்திற்கு மட்டுமல்ல மருந்துக்கும் உதவுகிறது. சிகரெட் எரியும்போது கசியும் "நிக்கோட்டின்" நஞ்சு, தொண்டை, ஈறு, நாக்குகளில் படியும்போது கறை உண்டாவதுடன், அங்கிருக்கும் பூந்தசைகளை அரித்துப் புண்களை உண்டாக்கும். "ஏலக்காய்" இந்தப் புண்களை ஆற்றுவிப்பதுடன், நிக்கோட்டின் கறைகளையும் படியாமல் அப்புறப்படுத்துகிறது.

இன்னொரு அரிய பயனும் உள்ளது. சிகரெட் பிடிக்கும் எண்ணம் வரும்போதெல்லாம், ஒரு ஏலக்காயினை வாயிலிட்டுச் சுவைக்க, புகைக்கும் எண்ணம் விலகும். இதனைப் பல அன்பர்கள் பின்பற்றி சிலர் புகைப்பதையே விட்டுவிட்டனர்.

வரலாறு : ஆட்டோ சங்கர் (பகுதி - 3)



 

ஆட்டோ சங்கர் தனது தொழிலுக்கு போட்டியாக இருந்தவர்களையும், தனக்கு வேண்டாதவர்களையும் கொலை செய்தது எப்படி என்பது பற்றி போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தான். சங்கரின் வாக்குமூலம் வருமாறு:-

"எனது பெயர் கவுரிசங்கர் என்ற சங்கர். நான் இளமையில் பெற்றோர்களுடன் கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்தேன். என் தந்தை சென்னையில் டீக்கடை நடத்தினார். என்னை கல்லூரியில் பி.யு.சி. வரை படிக்க வைத்தனர். அதன் பிறகு எனக்கு படிப்பு வரவில்லை. இதனால் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

படித்துக்கொண்டிருந்தபோது ஆட்டோ டிரைவர்கள் பலர் எனக்கு நண்பர்கள். அவர்கள்தான் எனக்கு ஆட்டோ ஓட்டுவதற்கு கற்றுத்தந்தனர். அதன் பிறகு நான் தனியாக ஒரு வருடம் ஆட்டோ வாடகைக்கு வாங்கி ஓட்டி வந்தேன். ஒரு நாளைக்கு சாப்பாடு போக எனக்கு 15 ரூபாய் கிடைக்கும்.

திருவான்மியூரில் இருந்து கோவளத்துக்கு வாடிக்கையாக கள்ளச்சாராயம் ஏற்றிக்கொண்டு போவதற்கு ஒரு சாராய வியாபாரி என்னை அழைத்தார். அதிக பணம் தருவதாகச் சொன்னார். இதனால் நான் ஆட்டோவில் கள்ளச்சாராயம் கடத்தினேன். எனக்கு அதிகப்பணம் கிடைத்தது.

இதனால் நான் தினமும் சாராயம் குடித்துவிட்டு விபசார விடுதிக்குச் செல்லும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு நானே சொந்தமாக கள்ளச்சாராய வியாபாரம் செய்தேன். அதில் எனக்கு பணம் அதிகம் கிடைத்தது. இதனால் நான் ஆட்டோ ஓட்டும் வேலையை விட்டுவிட்டு சாராய வியாபாரி ஆனேன்.

ஆட்டோவில் கள்ளச்சாராயம் கடத்திக்கொண்டு வருவதற்கு சுடலை என்ற ஆட்டோ டிரைவரை ரவி அறிமுகப்படுத்தினான். சுடலை மிகவும் தைரியமானவன். "நான் மதுரைக்காரன். எதையும் துணிந்து தைரியமாக செய்வேன். வேலைக்கு தகுந்தாற்போல் சம்பளம் கொடுத்துவிடு" என்று என்னிடம் அடிக்கடி சுடலை சொல்வான்.

சுடலையின் தைரியத்தில் நான் திருவான்மியூரில் குடிசை வீட்டில் அழகிகளை அழைத்து கொண்டுவந்து விபசார தொழில் நடத்தினேன். கோடம்பாக்கம் மற்றும் திருவான்மியூர் ஆகிய இடங்களில் இருந்து அழகிகளை விபசார விடுதிக்கு அழைத்து வருவதில் சுடலை கில்லாடி. அவனை வைத்துத்தான் எனது விபசார விடுதி ஓகோ என்று ஓடியது. இதனால் நான் சுடலையை நம்பினேன். எனது தொழில் ரகசியங்கள் அத்தனையும் அவனுக்கு தெரியும்.

நான் தாலி கட்டிய மனைவியின் பெயர் ஜெகதீசுவரி. அதன் பிறகு விபசார விடுதிக்கு வந்த அழகி சுந்தரி மீது எனக்கு ஆசை ஏற்பட்டது. இதனால் அவளை விபசார விடுதிக்கு அனுப்பாமல் தனியாக வீடு எடுத்து அவளை தங்கச் செய்தேன். அவளை தாலி கட்டி மனைவியாக்கினேன். அதன் பிறகு சுமதி என்ற அழகியையும் நான் மனைவியாக சேர்த்துக் கொண்டேன்.

என் காதலி என்னைத்தவிர வேறு யாருடனும் பேசக் கூடாது என்ற கொள்கையுடையவன் நான். யாராவது காதலியுடன் பேசினால் எனக்கு பொல்லாத கோபம் வரும். சுடலைதான் சுந்தரி, சுமதி ஆகியோரை விபசார விடுதிக்கு அழைத்து வந்து எனக்கு அறிமுகப்படுத்தியவன். இதனால் அவன் அவர்களிடம் கள்ளத்தனமாக பேசிக்கொண்டு வந்தான். இதை நான் பலமுறை கண்டித்து இருக்கிறேன். ஒருநாள் நான் வெளியே போய்விட்டு வீட்டுக்கு வந்தபோது சுந்தரியை சுடலை கட்டாயப்படுத்தி கற்பழித்ததை பார்த்துவிட்டேன். அன்று அமாவாசை தினம். நான் பார்த்தது அவனுக்குத் தெரியாது.

ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் எனக்கு அந்த சம்பவம் நினைவுக்கு வரும். அப்போது நான் அதிகமாக குடிப்பேன். ஒருநாள் அமாவாசை தினத்தில் சுடலை என்னை வந்து சந்தித்து, அழகிகளுக்கு சம்பளம் கொடுக்க பணம் கேட்டான். அவனுக்கு நான் பிராந்தி கொடுத்தேன். இஷ்டம் போல குடித்தான்.

போதையில் அவன் தரையில் சாய்ந்தபோது அவனை கழுத்தை நெரித்து கொன்றேன். அவன் மூச்சு நின்றது. நான் நினைத்தபடி அவனை வஞ்சம் தீர்த்தேன். எனக்கு எதிராக விபசார விடுதி நடத்தியவனும், எனது காதலியை கற்பழித்தவனும் தொலைந்தான் என்று பெருமூச்சு விட்டேன். பிணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தேன்.

அப்போது என்னுடன் இருந்த எனது தம்பி மோகன், மச்சான் எல்டின் ஆகியோர் சரியான `ஐடியா' கொடுத்தனர். "ஏன் தயக்கம்? காருக்கு வாங்கி வைத்துள்ள பெட்ரோல் கைவசம் இருக்கிறது. ஊற்றி எரித்து கணக்கை தீர்த்துவிடலாம்" என்று கூறினார்கள்.

அவர்கள் 2 பேரும் சுடலையின் உடலில் பெட்ரோலை ஊற்றினார்கள். நான் பாண்ட் பாக்கெட்டுக்குள் வைத்து இருந்த தீப்பெட்டியை எடுத்து `குச்சி'யை பொருத்திப்போட்டேன். சுடலையின் சடலத்தை எரித்து தீர்த்தோம். அதன் பிறகு சாம்பலை முட்டுக்காடு கோவளம் கடற்கரையில் கரைத்தேன். நிம்மதியோடு வீடு வந்து சேர்ந்தேன்.

ஒரு வாரம் கழித்து சுடலையை தேடி அவனது நண்பன் ஆட்டோ டிரைவர் ரவி வந்தான். அவனையும் கொலை செய்துவிட முடிவு செய்தோம். ரவியை மோகனும், எல்டினும் நைசாக குடிசை வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். வழக்கம்போல ரவிக்கு சாராயம் ஊற்றிக்கொடுத்து அவனை மயங்க வைத்தனர். அப்போது நான் வீட்டில் இருந்தேன். மோகனும், எல்டினும் என்னிடம் வந்து, "ரவி தம்பி பயணத்துக்கு ரெடியாக இருக்கிறான். காரியத்தை முடிச்சுட வேண்டியதுதான்" என்று சொன்னார்கள்.

உடனே நான், மோகன், எல்டின் ஆகியோருடன் சென்றேன். அப்போது இரவு 11 மணி இருக்கும். ரவி காக்கிப் பேண்ட், முழுக்கை சட்டை, சிகப்பு தொப்பியுடன் தரையில் குடிபோதையில் மயங்கிக் கிடந்தான். நாங்கள் 3 பேர்களும் சேர்ந்து ரவியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தோம். உடலை வீட்டிற்குள் புதைத்து விட்டோம்.

இதேபோல்தான் மைலாப்பூர் சம்பத், மோகன், கோவிந்தராஜா ஆகிய 3 பேர்களும் என்னிடம் வந்து "ஓசி"யில் அழகிகளை அனுபவித்துவிட்டு பணமும் தராமல் தொடர்ந்து தகராறு செய்து கொண்டிருந்தனர்.

அவர்கள் 3 பேர்களை "சிவப்பு ரோஜா" சினிமா பாணியில் கதையை முடித்தோம். ஒரே வீட்டில் 3 பேர்களையும் குழி தோண்டி புதைத்தோம். இதற்கு பாபு மிகவும் உதவியாக இருந்தான்."

இவ்வாறு சங்கர் போலீசாரிடம் வாக்குமூலம்  கொடுத்தான்.


இன்னும் வரும் .............................

செவ்வாய், 26 ஜனவரி, 2010

இந்தியாவின் 61 வது குடியரசு தின கோலாகலம்







  

டில்லியில் 61வது குடியரசு தின விழா கோலாகலாம் கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழா கொண்டாட்டங்களை காண பொதுமக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பெருந்திரளாக வந்திருந்தனர். வழக்கமாக கொடியேற்றம் நடந்த பிறகு ஹெலிகாப்டர் மூலம் பார்வையாளர்கள் மீது பூ தூவப்படும். ஆனால் கடும் பனிமூட்டம் காரணமாக இந்த ஆண்டு மலர் தூவும் முறை கடைபிடிக்கப்படவில்லை.


அமர்ஜவானில் அஞ்சலி : டில்லி இந்திய கேட் பகுதியில் இருக்கும் அமர் ஜவான் நினைவிடத்தில் பிரதமர் மன்மோகன்சிங், முப்படை தளதிகள் உள்ளிட்டோர் நாட்டைக் காக்கும் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. பிரதமர் அமர்ஜவான் இரங்கல் குறிப்பில் கையெழுத்திட்டார்.


சிறப்பு விருந்தினர் : இன்றைய குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக தென் கொரிய அதிபர் லி முய்ங் பாக் இந்தியா வந்திருந்தார். விழாவில் பங்கேற்க இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுடன் வந்த தென் கொரிய அதிபர் லீ முய்ங் பக்கை பிரதமர் மன்மோகன் சிங் கைகுலுக்கி வரவேற்றார்.


கொடியேற்றம் : குடியரசு தின விழா சிறப்பு விருந்தினரும், ஜனாதிபதியும் மேடைக்கு வந்ததும் தேசிய கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. 21 குண்டுகள் முழுங்க மிரயாதை செலுத்தப்பட்டது. பின்னர் வீரதீர செயல்க‌ள் புரிந்த வீரர்களுக்கு அசோக சக்ரா விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்.


ராணுவ தளவாடங்கள் அணிவகுப்பு : வீரர்களுக்கு விருது வழங்கப்பட்ட பிறகு ராணுவ தளவாடங்களின் அணிவகுப்பு நடந்தது. ராணுவ அணிவகுப்பை லெப்டினன்ட் ஜெனரல் கன்வால் ஜீத் சிங் ஓபராய் தொடங்கி வைத்தார்.விஜய் சவுக் பகுதியில் தொடங்கி 8 கி.மீ., தூரத்துக்கு முப்படையினரும் பிரமாண்டமாக அணிவகுத்து சென்றனர். அணிவகுப்பு மறியாதையை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். இந்திய ராணுவத்தின் படை பராக்கிரமாங்கள் அணிவகுப்புக்குப் பிறகு பல்வேறு படை பிரிவு வீரர்கள் அணிவகுத்து வந்தனர். அவர்கள் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்.


ஐ.என்.ஷிவாலிக் கம்பீர அணிவகுப்பு : இந்திய கடற்படை அணிவகுப்பில், ஐ.என்.ஷிவாலிக் போர் கப்பல் கம்பீரமாக அணிவகுத்து டப்தது. ஐ.என்.எஸ்., ஷிவாலிக் விரைவில் இந்திய கடற்படையில் இணைக்கப்படுகிறது.


கலாச்சார பாரம்பரிய நடனங்கள் : இந்தியாவின் ‌கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்திய மாநிலங்களின் சிறப்பு அம்சங்களை எடுத்துரைக்கும் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்தன. முதலில் வடகிழக்கு மாநிலங்களில் அலங்கார ஊர்திகள் வந்தன. அவற்றை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநில அலங்கார ஊர்தி வந்த போது, விழாவை காண வந்திருந்த அம்மாநில முன்னாள் மதல்வர் பரூக் அப்துல்லா அலங்கார ஊர்தியை நோக்கி கையசைத்து மகிழ்ச்சியை தெரிவித்தார். 21 மாநிலங்களின் கலாரச்சாரத்தை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. இது தவிர பள்ளி குழுந்தைகளின் கண்கவர் நடன நிகழ்ச்சிகளும் நடந்தது.

நன்றி:-
தினமலர் 

அனைவருக்கும் இனிய குடியரசுதின வாழ்த்துக்கள்

திங்கள், 25 ஜனவரி, 2010

இ-மெயில் பார்ப்பதால் ஏற்படும் விளைவு ?




 




அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், இ-மெயில் பார்க்கவும், அவற்றுக்கு  பதில் அனுப்பவும் தங்களது வாழ்நாளில் 10 ஆண்டுகள் வரை செலவிடுவதாக ஒரு ஆய்வு முடிவு  தெரிவிக்கிறது. இதை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இன்றைய அவசர தேவைக்கு ஏற்ப, கடிதப் போக்குவரத்து முறையும் எலக்ட்ரானிக் மயமாகி உள்ளது.

அதுதான் இ-மெயில். ஆனால், சிலர் இதற்கு அடிமையாகவே ஆகி உள்ளனர். கடும் வேலை நெருக்கடிக்கு இடையிலும், அலுவலக ஊழியர்கள் 5 நிமிடத்துக்கு ஒரு முறை  இ-மெயில் ஏதேனும் வந்துள்ளதா என பார்ப்பதாக ஸ்காட்லாந்தின் ஐ.டி. பயிற்சி நிறுவனமான இண்டிசியா டிரெய்னிங் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் இ-மெயிலுக்கு உடனே பதிலும் அனுப்புகின்றனர்.

இதனால் செய்யும் வேலை பாதிக்கப்படுகிறது. இ-மெயிலுக்காகவே ஒரு வாரத்துக்கு ஒரு ஊழியர்  8.5 மணி நேரம் செலவிடுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் வாழ்நாளில் 9.7 ஆண்டுகளை வீணடிக்கிறதாம் இ-மெயில். இந்த பழக்கம் நல்லதல்ல என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 


சிலர் நடு இரவில் யூரின் போவதற்காக எழுந்தால்கூட அந்த நேரத்தில் இ-மெயில் ஏதாவது வந்துள்ளதா என பார்க்கிறார்கள். பொதுவாக எதையோ எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் இதுபோல செய்கிறார்கள்.

புகை, மது, சூதாட்டம் போன்றதுதான் இந்த பழக்கமும். இதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்,என உளவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

தண்ணீரின் அவசியம்



 

மனித உடலில் தண்ணீர் என்பது ஜீரணம், வியர்வை வெளியேற்றம், உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கு போன்ற பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்வதற்கு தண்ணீர் அவசியமாகிறது.      
    

நம் உடலின் மொத்த எடையில் 60 சதவீதம் அளவிற்கு இருப்பது தண்ணீர் தான். 5 முதல் 10 சதவீதம் வரை உடலில் இருந்து தண்ணீர் இழப்பு ஏற்பட்டால் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில் 15 முதல் 20 சதவீதம் வரை தண்ணீர் இழப்பு ஏற்படும் பட்சத்தில் அது ஏறக்குறைய மரணத்தில் சென்று முடியலாம்.  


உடலில் உள்ள திசுக்களுக்கு ஒரு பாதுகாப்பு போர்வை அல்லது மெத்தை போன்று தண்ணீர் செயலாற்றுகிறது. உடலின் அனைத்து திசுக்களுக்கும், ரத்தத்தின் அடிப்படைக்கும், மூட்டு இணைப்புகளில் உள்ள திரவம், கண்ணீர், கோழை வடிதல் போன்றவற்றுக்கும் தண்ணீரே காரணமாகத் திகழ்கிறது. 


உடல் உறுப்புகள் முறைப்படி செயல்படுவதற்கு உராய்வு எண்ணெய் போன்று தண்ணீர் செயலாற்றுகிறது.  நம்முடைய தோலினை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்துக் கொள்வதற்கும் உடலில் உள்ள தண்ணீரே பங்காற்றுகிறது. வயது முதிர்வடையும் போது தோலில் ஏற்படும் சுருக்கங்களுக்கும் உடலில் உள்ள தண்ணீரின் அளவு குறைவதே காரணம். 


ஆகவேதான் பிறக்கும் குழந்தைகளின் உடல்களில் சுமார் 75 முதல் 80 சதவீதம் அளவிற்கு தண்ணீர் இருப்பதால் அவர்களின் தோல் மென்மையானதாகக் காணப்படுகிறது. அதுவே 65- 70 வயதான முதியோருக்கு உடலில் தண்ணீர் 50 சதவீதமாகக் குறைவதால் சுருக்கங்கள் காணப்படுகிறது. 


தண்ணீர் குறைவின் காரணமாகவே எலும்பு இணைப்புகளில் பாதிப்பு ஏற்படுவதும் முதுமையில் நிகழ்கிறது.  மனித உடலுக்கு அன்றாடம் சராசரியாக 6 முதல் 8 டம்ளர் வரையிலான தண்ணீர் தேவையாகிறது.   

சனி, 23 ஜனவரி, 2010

அதிர்ச்சியூட்டும் நிழற் படங்கள் ?

நாம் அன்றாடம் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களில் முக்கிய இடம் வகிப்பது விலங்குகளின் தோலினால் செய்யப்பட்ட, பெல்ட், கைப் பைகள் ,பர்ஸ் இன்னமும் எத்தனையோ பொருட்கள்.

அதிலும் குறிப்பாக பாம்பு தோலினால் செய்யப்பட்ட பொருள் என்றால் இன்னும் மவுசு கூட. காரணம் அவ்வளவு மெதுவாகவும்,இலகுவாகவும்
இருப்பதே.

இப்படிப்பட்ட அழகு சாதன பொருட்கள் செய்வதற்காக் பாம்பு,மற்றும் முதலை  ஆகிய விலங்குகளிலிருந்து அதன் தோல் எவ்வாறு எடுக்கப்படுகிறது என்பதை இங்கே பாருங்கள்.


 
 
 
 
 
 
 
 
 
 
இந்த படங்களைப் பார்த்தபிறகு விலங்குகளின் தோலினால் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்த விரும்புவோமா?

வரலாறு : ஆட்டோ சங்கர் (பகுதி - 2)

காணாமல் போன அந்த 3 பேரும் ஆட்டோ சங்கரின் விபசார விடுதிக்கு சென்றது தெரியவந்தது. இதனால் ஆட்டோ சங்கரையும், சில கூட்டாளிகளையும் பிடித்து வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். "இந்த 3 பேர்களை பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது" என்று பொய் சொல்லி போலீசாரின் பிடியில் இருந்து ஆட்டோ சங்கர் தப்பித்துக்கொண்டான்.
 
மற்றொருபுறம் சங்கரின் கூட்டாளிகளான ஆட்டோ மணி, பாபு, ஜெயவேல் ஆகியோரிடம் விசாரணை நடத்த பல்லாவரம் இன்ஸ்பெக்டர் தங்கமணி நியமிக்கப்பட்டார். மணியும், ஜெயவேலுவும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர். ஆனால் பாபு போலீசாரிடம் உண்மையை கக்கிவிட்டான். சம்பத், மோகன், கோவிந்தராஜ், ரவி, சுடலை ஆகிய 5 பேரை கொலை செய்ததாக தெரிவித்தான். பிணத்தை வீட்டிற்குள் புதைத்ததாகவும் ஒப்புக்கொண்டான்.
 
சம்பத், மோகன், கோவிந்தராஜ், ரவி ஆகிய 4 பேர் பிணங்களையும் திருவான்மிïர் பெரியார் நகர் ரங்க நாதபுரத்தில் தெனாலி கால் வாய்க்கு அருகில் உள்ள 2 வீடுகளில் புதைத்துவிட்டதாக கூறினான். சுடலையின் உடலை எரித்து சாம்பலை மட்டும் காட்டிற்கு எடுத்துச்சென்று கடலில் கரைத்துவிட்டதாகவும் தெரிவித்தான்.
 
அவன் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் பெரியார் நகருக்கு விரைந்து சென்று பிணங்களை தோண்டி எடுக்கும் வேலையில் ஈடுபட்டனர். ஒரு வீட்டின் 3,வது அறையில் போலீசார் தோண்டினார்கள். 15 அடி ஆழமுள்ள குழியில் சம்பத், மோகன் ஆகியோரின் பிணங்கள் ஒன்றாக புதைக்கப்பட்டிருந்தன. 2,வது அறையில் புதைக்கப்பட்டிருந்த கோவிந்தராஜனின் பிணத்தையும் போலீசார் வெளியே எடுத்தனர்.
 
அந்த வீட்டுக்கு பக்கத்தில் உள்ள இன்னொரு கூரை வீட்டில் பின்புறத்தில் ரவியின் பிணம் புதைக்கப்பட்டிருந்தது. அதையும் போலீசார் தோண்டி எடுத்தனர். 4 பிணங்களும் அழுகிப்போய் இருந்தன. அவர்கள் அணிந்து இருந்த உடைகள் மக்கிப்போகாமல் அப்படியேருந்தன. ரவி காக்கிச்சட்டையும், பாண்டும் அணிந்து இருந்தான். மற்ற 3 பேர்களும் சட்டையும் பேண்டும் அணிந்து இருந்தனர். உடல்கள் எலும்புக்கூடாக இருந்தன. அந்த இடத்திலேயே பிரேத சோதனை நடத்தப்பட்டது.
 
இதனைத் தொடர்ந்து ஆட்டோ சங்கரும், அவனது 7 கூட்டாளிகளும் 7.7.1988 அன்று கைது செய்யப்பட்டனர். சங்கரின் மனைவி ஜெகதீசுவரி மற்றும் சில அழகிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. கூட்டாளிகள் வாக்குமூலம் அளித்தனர். ஆட்டோ சங்கர் தனது கொலை படலத்தை எப்படியெல்லாம் நிறைவேற்றினான் என்ற நெஞ்சை பதபதைக்க வைக்கும் தகவல்களை வெளியிட்டனர்.
 
பிணங்களை எடுத்துச் செல்ல பயன்படுத்திய கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
 
வீட்டில் சோதனை நடத்தியபோது ஆட்டோ சங்கரின் டைரி சிக்கியது. அழகிகளுடன் சங்கர் எடுத்துக்கொண்ட ஆபாச படங்கள் கட்டுக்கட்டாக இருந்தன. அழகிகளுக்கு சங்கர் முத்தம் கொடுப்பது போல் உள்ள கலர் போட்டோக்களும் இருந்தன.
 
சங்கர் அவனுடைய காதலி விஜி, மது, லலிதா ஆகியோர்களின் பெயர்களை கையில் "பச்சை" குத்தி இருந்தான். அவனுடைய தம்பி மோகனின் பெயரையும் பச்சை குத்தி இருந்தான். மார்பில் 3,வது மனைவி சுமதியின் பெயரை பொறித்திருந்தான்.
 
சங்கரின் 4,வது மனைவியான பெங்களூர் லலிதாவை காணவில்லை. போலீசுக்கு பயந்து அவள் ஓடி இருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்த லலிதாவும் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக மோகன் (ஆட்டோ சங்கர் தம்பி) போலீசாரிடம் தெரிவித்தான். இதனை அடுத்து திருவான்மியூர்  பெரியார் நகரில் அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு குடிசை வீட்டிற்கு சென்று தோண்டினார்கள்.
 
சமையல் கூடத்தில் இருந்த அடுப்பை அகற்றியதும் சிமெண்டு தரை இருந்தது. அதை தோண்டியபோது நீண்ட வரிசையில் செங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு சிமெண்டு பூசப்பட்டு இருந்தது. அந்த செங்கற்களை போலீசார் அகற்றினார்கள். அதற்கு கீழே மேலும் தரையைத் தோண்டியபோது உள்ளே எலும்புக் கூடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
எலும்புக்கூட்டின் மீது எந்தவித துணியும் இல்லை. நிர்வாணமாக இருந்தது. எலும்புக்கூட்டை போலீசார் வெளியே எடுத்தனர். லலிதாவை கொலை செய்து நிர்வாணமாக புதைத்து உள்ளனர் என்று தெரியவந்தது. அது பெண்ணின் உடல்தான் என்று டாக்டர்கள் உறுதி செய்தனர். இதனால் ஆட்டோ சங்கர் செய்த கொலை பட்டியலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. கொலை செய்யப்பட்டவர்கள் விவரம்:-
 
1. பெங்களூர் அழகி லலிதா (வயது 22).
 
2. சுடலை (வயது 28). ஆட்டோ டிரைவர், தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சியைச் சேர்ந்தவன்.
 
3. திருவான்மிïர் ரவி. ஆட்டோ டிரைவர் (வயது 27).
 
4. சம்பத் மந்தைவெளியை சேர்ந்த டெய்லர் (வயது 30).
 
5. மோகன், பொதுப்பணித்துறை ஊழியர் (வயது 29)
 
6. கோவிந்தராஜ் (வயது 28).
 
கைது செய்யப்பட்ட ஆட்டோ சங்கர், மோகன் (சங்கர் தம்பி), எல்டின் என்கிற ஆல்பர்ட் (மைத்துனர்) கூட்டாளிகள் சிவாஜி, ஜெயவேலு, செல்வராஜ், தாமன் என்கிற ராஜாராமன், ரவி, பழனி, பரமசிவன் ஆகிய 10 பேரும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
 
ஆட்டோ சங்கரின் கூட்டாளிகளில் ஒருவரான பாபு என்கிற தேவேந்திரபாபு (34) அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறி விட்டார். இவர் கட்டிட காண்டிராக்டர் ஆவார். இந்த வழக்கு முக்கியமாக கருதப்பட்டதால் மாநில ரகசிய குற்றப்புலனாய்வு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சவுக்கத் அலி, விசாரணையை மேற்கொண்டார்.


இன்னும் வரும் . . . . . . . . . . . 

வெள்ளி, 22 ஜனவரி, 2010

சாத்துக்குடியின் மருத்துவக் குணங்கள் !




மனித உடலுக்கு நேரடியாக சத்துக்ளை கொடுப்பது பழங்கள் மட்டுமே. பழங்கள் எளிதில் சீரணமாவதற்கும், வாய், வயிறு, குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் ஏற்றவை. உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து அதாவது புரதச் சத்து, வைட்டமின் சத்துக்கள், கால்சியம் சத்து, நார்ச்சத்து என அனைத்து சத்துக்களும் பழங்களில் அதிகம் அடங்கியிருக்கின்றது. 

தினமும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அந்தந்த சீதோஷ்ண காலங்களில் அதிகம் விளையும் பழங்களைச் சாப்பிட்டால் நல்லது.

பழங்கள் மலச்சிக்கலைப் போக்கி உடலை நோயின்றி காக்கின்றன. பழங்களின் மருத்துவக் குணங்களைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம்.  இந்த இதழில் எங்கும் கிடைக்கும் சாத்துக்குடியின் மருத்துவக் குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இந்தப் பழம் இருக்கும். சாத்துக்குடி, நாரத்தை, ஆரஞ்சு வகையைச் சார்ந்தது. தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவது நல்லது.

நோயுற்றவர்களுக்கு

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும்.

ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது.

இரத்த விருத்திக்கு

சிலர் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். சிறிது வேலை செய்தாலும், அதிகமாக அசதி உண்டாவதாகக் கூறுவார்கள். கை, கால் மூட்டுக்களில் வலி உண்டாகும். சில சமயங்களில் தலைச் சுற்றலுடன் இலேசான மயக்கம் ஏற்படும்.

இவர்களுக்கு தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும்.

இரத்தத்தில் சிவப்பணுக்களின் (ஹீமோ குளோபின்) எண்ணிக்கை குறைவதால் இரத்தச் சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. நமது நாட்டில் இரத்தச் சோகையால் 67 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரத்தச் சோகையை விரட்டியடிக்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.

எலும்புகள் வலுவடைய

சிலருக்கு இலேசாக அடிபட்டால் கூட எலும்புகள் உடைந்துவிடும். மேலும் எலும்புகள் வலுவற்று காணப்படும். இதற்குக் காரணம் கால்சியச் சத்து குறைபாடே ஆகும். இவர்கள் சாத்துக்குடி கிடைக்கும் காலங்களில் அதிக அளவு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.

மலச்சிக்கல் தீர

மலச்சிக்கல்தான் அனைத்து நோய்களுக்கும் மூலகாரணம் என்பதை நாம் பல இதழ்களில் அறிந்துள்ளோம் . மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க பழங்களே சிறந்த மருந்தாகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

நன்கு பசியைத் தூண்ட

பசியில்லாமல் சிலர் அவதியுறுவார்கள். இவர்களின் வயிறு எப்போதும் நிரம்பி உள்ளது போல் தோன்றும். சாத்துக்குடி பழத்தை தினமும் உண்டு வந்தால் சீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.

குழந்தைகளுக்கு

ஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கால்சியச் சத்து அதிகம் தேவை. குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது இந்த கால்சியம் சத்துதான். சாத்துக்குடியில் அதிகளவு கால்சியச் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுப்பது மிகவும் நல்லது.

பெண்களுக்கு

நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கு எலும்புகள், எலும்பு மூட்டுகள் தேய்மானம் அடையும். மேலும் மாதவிலக்கு நிற்கும் காலமான (40-45 வயதுகள்) மெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு சத்துக் குறைவால் பல இன்னல்கள் உண்டாகும். இந்தக் குறை நீங்க பெண்கள் தினமும் சாத்துக்குடி சாறு அருந்துவது நல்லது.

முதியோர்களுக்கு

வயது முதிர்ந்தவர்களுக்கு உணவு சரியாக செரிக்காமல் மலச்சிக்கல் உண்டாகும். இதனால் உடல் அசதி, சோர்வு உண்டாகும். இவை நீங்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.

கிடைக்கும் காலங்களில் இந்தப் பழத்தை அதிகம் சாப்பிட்டு நோயின்றி வாழலாம்.

வியாழன், 21 ஜனவரி, 2010

வரலாறு : ஆட்டோ சங்கர் (பகுதி - 1)

 
 

 

 
தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்குகளில் ஆட்டோ சங்கர் மீதான வழக்கு ஒன்றாகும். 1988 ம் ஆண்டு தொடங்கி சுமார் 5 ஆண்டு காலம் நீடித்தது.
 
ஆட்டோ சங்கர் தனது கூட்டாளிகளுடன் நடத்திய கொலை சம்பவங்கள், `திகில்' சினிமா படங்களில் வரும் காட்சி கள் போல அமைந்தன. காதலி உள்பட 6 பேரை கொடூரமான முறையில் படு கொலை செய்த ஆட்டோ சங்கருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. சேலம் ஜெயிலில் தூக்கில் போடப்பட்டான்.
 
சென்னை திருவான்மியூர் பெரியார் நகர் காந்தி தெருவில் வசித்தவன் சங்கர் (வயது 29) ஆட்டோ டிரைவர். இதனால் ஆட்டோ சங்கர் என்று அழைக்கப்பட்டான். சங்கர் ஆட்டோவில் கள்ளச்சாராயம் கடத்திக்கொண்டு வந்து திருவான்மியூர் பகுதியில் விற்பனை செய்தான். அதன் பிறகு அவன் ஆட்டோ ஓட்டும் தொழிலை கை கழுவினான். சாராய தொழிலில் அவன் மிகவும் தீவிரமாக ஈடுபட்டான்.
 
திருவான்மிïரில் உள்ள ஒரு ஓட்டலில் (லாட்ஜ்) சங்கர் அறை எடுத்து சாராய வியாபாரத்தை கவனித்தான். அங்கு அழகிகளை அழைத்துக்கொண்டு வந்து விபசாரம் நடத்தினான். சாராயம், விபசாரம் ஆகிய தொழில் நடத்தியதன் மூலம் சங்கர் பெரும் பணக்காரன் ஆனான்.
 
பெரியார் நகரில் 2 பங்களா கட்டினான். அங்கு எல்லா அறைகளையும் "ஏர்கண்டிஷன்" வசதி செய்தான். விலை உயர்ந்த கட்டில்கள், கலர் டெலிவிஷன், டெலிபோன் வசதிகளை செய்து ஆடம்பர சொகுசு பங்களாவாக மாற்றினான்.
 
இந்த நவீன பங்களாவுக்கு கோடம்பாக்கம், சேலம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இருந்து அழகிகள் அடிக்கடி வந்து போவார்கள். முக்கிய பிரமுகர்களுக்கு அந்த சொகுசு பங்களாவில் சங்கர் விபசார விருந்து படைப்பான். ஆட்டோ சங்கருக்கு ஜெகதீசுவரி என்ற மனைவியும், குழந்தைகளும் இருந்தார்கள். ஆனாலும் விபசார தொழிலில் இறங்கிய தால் அவனுக்கு பல காதலிகள் இருந்தார்கள். அழகிகளை மயக்கி மனைவி ஆக்கிக் கொள்வான்.
 
இப்படி பெங்களூரில் இருந்து வந்தவள் அழகி லலிதா (வயது 19). சங்கர் அவளை தனது 4,வது மனைவி ஆக்கிக்கொண்டான். அவள் திடீரென்று ஆட்டோ சங்கரை விட்டு ஓடி, சுடலை (மற்றொரு ஆட்டோ டிரைவர்) என்பவனுடன் வசித்து வந்தாள். அதோடு தொழிலில் ஏற்பட்ட போட்டி சங்கரை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இந்த சூழ்நிலைகளும், நண்பர்களின் துதி பாடல்களும் அவனை சிக்கலில் மாட்டி விட்டன.
 
சென்னை மந்தைவெளியை சேர்ந்த சம்பத், மோகன், கோவிந்தராஜ் ஆகிய 3 பேர் ஆட்டோ சங்கர் வீட்டுக்கு சென்றனர். அதன் பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. இதுபற்றி அவர்களது பெற்றோர்கள் 29.5.1988-ல் போலீசில் புகார் செய்தார்கள். 
 
இது தொடர்பாக செங்கல்பட்டு டி.ஐ.ஜி.யாக இருந்த ஜாபர் அலி, சூப்பிரண்டு சுப்பையா ஆகியோர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஏறத்தாழ ஒரு மாத கால தீவிர விசாரணைக்கு பிறகு அதில் துப்பு துலங்கியது.
தொடரும்.....................................
 

புதன், 20 ஜனவரி, 2010

பென்சில் கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்கள்

நீங்கள் இங்கு காணும் ஓவியங்கள் அனைத்தும் பென்சில் கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்கள்.பென்சில் மாத்திரமே இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.எவ்வளவு தத்ரூபமாக  வரையப்பட்டுள்ளது  என்பதை பாருங்கள்.
இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இந்த ஓவியங்கள் எப்படி தீட்டப்பட்டது என்பதுதான்.ஓவியத்தின் இறுதி பகுதியில் பாருங்கள்.ஆச்சரியம் உங்களை அசத்தும்.


 
  
  
 
 
 
 
 



இந்த ஓவியங்கள் எப்படி வரையப்பட்டது என்பதை பாருங்கள் 

 
என்ன? பார்த்து வியந்தீர்களா.இந்த ஓவியங்கள் அனைத்தும் 
பென்சில் கொண்டு வாயால் வரைந்த ஓவியங்களே.

செவ்வாய், 19 ஜனவரி, 2010

உச்ச நீதிமன்றத்தின் பத்து கட்டளைகள்




  


மக்களுக்கு தைரியம் அளிக்கும் வகையில், தற்காப்புக்காக என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்த 10 விதிமுறைகளை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது. 

தீவிரவாதமும், போதைக் கடத்தலும் நடக்கும் தற்போதைய சூழ்நிலையில், பொதுமக்கள் அதை நேருக்கு நேர் சந்தித்து, மோதும் வகையில் அதிக அதிகாரத்தை இந்த விதிமுறைகள் அளித்துள்ளன.
 

காஷ்மீரில் தனது குடும்பத்தையே பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த பாகிஸ்தான் தீவிரவாதியை, அவனுடைய ஏ.கே. 47 ரக துப்பாக்கியையே பிடுங்கி, குண்டுகளால் துளைத்தாள் ருக்சேனா என்ற இளம் பெண். 

அதற்கு முன், அந்தப்பெண் துப்பாக்கியை தொட்டது கூட கிடையாது. பின் எப்படி வந்தது அந்த வேகம்? சூழ்நிலைதான் அந்தப் பெண்ணுக்கு அப்படிப்பட்ட தைரியத்தை கொடுத்தது. அதேபோன்ற சூழலில் யார் வேண்டுமானாலும் திருடர்களை, தீவிரவாதிகளை தாக்கலாம், கொல்லவும் செய்யலாம்.


துப்பாக்கி முன்பும், வெடிகுண்டு முன்பும் சட்டத்தைக் கடைப்பிடிக்கும் மக்கள் கோழைகள் போல் அஞ்சி நடுங்கி இருக்க வேண்டிய அவசியமில்லை; ஆபத்தைக் கண்டு பயந்து ஓட வேண்டியதும் இல்லை; தற்காப்புக்காக எதிர்த்து நின்று போராடலாம்; எதிராளியை தாக்கலாம்; அப்போது எதிராளி மரணமடைந்தால் கூட அதை கொலையாகக் கருதப்பட மாட்டாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரியும் ஏ.கே. கங்குலியும் கூறியிருக்கிறார்கள்.
 

எப்போது திருப்பித் தாக்கலாம்? உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து வரும் சூழல் இருந்தாலே போதும். யார் வேண்டுமானாலும் திருப்பித் தாக்கலாம். அப்படித் தாக்கும் போது, எடுத்த
உடனேயே உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாமல், படிப்படியாக தாக்குதலை அதிகரிப்பது என்பது முடியாத காரியம். எனவே, தற்காப்புக்காக என்ன தோன்றுகிறதோ அதை செய்யலாம். 


உயிருக்கே ஆபத்து வரும்போது, அதற்கு காரணமான சமூக விரோதிகளை கொலை கூட செய்யலாம். ஒரு கட்டுப்பாட்டையும் கூடவே விதித்துள்ளது உச்ச நீதி மன்றம்.  யாரையும் பழி வாங்கவோ,  பழைய பகையை தீர்த்துக் கொள்ளவோ இந்த விதிமுறைகளை பயன்படுத்தக் கூடாது என கண்டிப்பாகக் கூறி
யுள்ளது. 


அப்படி நடக்காமல் இருக்காது. அப்படி ஏதாவது நடந்தால், அதை கூடுதல் கண்காணிப்புடன் இருந்து கண்டுபிடிக்க வேண்டியது
போலீசாரின் கடமை.

திங்கள், 18 ஜனவரி, 2010

பாலின் மகத்துவம்


பூமியில் வசிக்கும் மானுடர்களுக்கு அமுதம் கிடைக்க வாய்ப்பில்லை. அதற்குப் பதிலாக, அவர்களுக்கு வாய்த்திருப்பது பால்! என்கின்றன வேதங்கள். இ‌தி‌ல் இரு‌ந்தே பா‌லி‌ன் மக‌த்துவ‌த்தை நா‌‌ம் அ‌றி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.
பா‌லி‌ல் தா‌ய்‌ப்பால‌், பசு‌ம்பா‌ல், எரு‌மை‌ப்பா‌ல், ஆ‌ட்டு‌ப்பா‌ல் என ‌சில வகைக‌க‌ள் உ‌ண்டு. ஒ‌வ்வொ‌ன்‌றிலு‌ம் ஒ‌வ்வொரு குண‌ம் உ‌ள்ளது.

தா‌ய்‌ப்பா‌ல் எ‌ன்பது ஒ‌வ்வொரு குழ‌ந்தை‌க்கு‌ம், தா‌யிட‌ம் இரு‌ந்து ‌கிடை‌க்கு‌ம் முத‌ல் ம‌ற்று‌ம் ஈடு இணைய‌ற்ற உணவாகு‌ம்.

அடு‌‌த்து பசு‌ம்பா‌ல் எ‌ன்பது இயல்பாகவே இனிப்பானது, உடலு‌க்கு குளிர்ச்சி தருவது. ஆனா‌ல் எ‌ளி‌தி‌ல் ‌ஜீரணமாகாது. எருமை‌ப் பா‌ல் அ‌திக‌க் கொழு‌ப்பு ‌நிறை‌ந்தது. உடலு‌க்கு ந‌ல்லது. எருமைப்பால் பசும்பாலை விடக் குளிர்ச்சியானது. நிறையக் கொழுப்புச் சத்து கொண்டது. பசி அதிகம் எடுப்பவர்கள் இதைச் சாப்பிடலாம். இதுவும் செரிக்கத் தாமதமாகும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

ஆ‌ட்டு‌ப் பா‌‌லி‌ல் ம‌னித உடலு‌க்கு‌த் தேவையான ‌‌நிறைய ச‌த்து‌க்க‌ள் உ‌ள்ளன. ஆட்டுப்பால் விரைவாகச் செரிமானம் ஆகும். பாலூட்டும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால், அதிகப் பால் சுரக்கும். இருமல், மூச்சுத் திணறல் போன்ற சுவாசப் பிரச்னைகளுக்கு ஆட்டுப்பால் நல்லது.

வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பசும்பால் சாப்பிட்டால், பேதி அதிகமாகப் போகும். ஆனால், ஆட்டுப்பால் அதை உடனே கட்டுப்படுத்தும்!

பா‌ல் குடி‌த்தது‌ம் புத்துணர்வு தர‌க் கூடியது. பசு‌ம்பா‌ல் குடி‌த்து வ‌ந்தா‌ல் உடல் பலம், மூளை பலம் இரண்டையும் பெறலா‌ம். சோர் வாக இருப்பவர்களுக்கும், தலைச்சுற்றல் உள்ளவர்களுக்கும், மலச்சிக்கல், நீர்ச்சுருக்கு போன்றவற்றால் அவதிப்படுகிறவர்களுக்கும், ரத்தக்கசிவு நோய் உள்ளவர்களுக்கும் பசும்பால் மா மரு‌ந்தாக உ‌ள்ளது. தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்குப் பால் நல்ல தூக்க மருந்து. ஆண்மையைத் தூண்டும் சக்தியும், குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது.

இந்தியாவில் அரிசி பிரதான உணவு. அமெரிக்காவில் கோதுமை முக்கிய உணவு.ஆனால், உலகம் முழுமைக்குமான பொதுவான உணவு பால் மட்டுமே. பிறந்த குழந்தை முதல் மரணப்படுக்கையில் கிடக்கும் முதியவர் வரை எல்லோருக்கு‌ம் ஏ‌ற்ற உணவாக பா‌ல் உ‌ள்ளது.


WDஇதில் பிரதானமானது பசும் பால். பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம். ஏதோ ஒரு காரணத்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால், அதற்கு மாற்று பசும்பால் தான். கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையான குணங்களும், குழந்தைக்கு ஊட்டம் கொடுத்து வளர்க்கும் தன்மையும் பசும்பாலில் மட்டும்தான் இருக்கிறது!

பால், மா‌ட்டி‌ன் ரத்தம் இல்லை. அது தாவரங்களின் உயிர்ச் சத்து. பசு சாப்பிடும் பச்சைத் தாவரங்களின் உயிர்ச்சத்து, பசுவின் உடலில் போய் மாற்றம் பெற்று, பாலாக வருகிறது.

 

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

நம்பிக்கை+உழைப்பு+திறமை = ப்ரிட்னி ஸ்பியர்ஸ்








ஹோட்டலை விட்டு ப்ரிட்னியும், மாக்ஸ் மார்ட்டினும் வெளியே வரும்போது நள்ளிரவை தாண்டி இருந்தது.நல்ல குளிர்.ப்ரிட்டினிக்கு வீட்டில் இருக்க பிடிக்கவில்லை.நண்பர் ஏராளம் உண்டு என்றாலும் யார் வீட்டுக்கும் போகவும் பிடிக்கவில்லை.ஓரிடத்தில் உட்காரவும் முடியாத அவஸ்தை.பதற்றமும் கலவர உணர்வும்,அடிவயிற்று பயமும் அவளை ஆக்கிரமித்திருந்தன.

என்ன ஆகும் மார்டின்? ஆயிரத்தி ஒன்றாவது முறையாக கேட்டாள்.

அமைதியாக இரு,நல்லதே நடக்கும் என்று மார்டின் சொன்னார்.
பிரிட்னிக்கு மட்டுமல்ல ....மார்டினுக்கும் அது அமில பரீட்சை.கவிஞனாக தன் வாழ்க்கையைத் தேர்வு செய்துகொண்டு ஸ்பெயினிலிருந்து புறப்பட்ட நாளாக ஒரு பெரிய வெற்றிக்காக காத்திருந்த கொக்கு அவர். 


நிறைய மேடை நாடகங்கள்,விளம்பரப் படங்கள், இசை ஆல்பங்களுக்கு எழுதிவிட்ட பிறகும் எதிர்பார்த்த அந்த பிரமாண்ட வெற்றி இன்னும் கிடைத்தபாடில்லை.




எதோ ஒன்று,என்னமோ ஒன்று குறுக்கே மரித்துப் புகழின் கழுத்தை நெரிக்கிறது. அது எது? தெரியவில்லை.தனக்கொரு பாடல் வேண்டும் என்று  18 வயது பிரிட்டனி,அவரிடம் கேட்டு வந்தபோது,பெரிதாக எந்த எதிபார்ப்பும் இல்லாமல்தான் பாடல் எழுதினார்.சின்ன பெண்,அழகாக,துருதுருவென இருக்கிறாள்,நன்றாக பாடுகிறாள், ஒருவேளை  பெரிய ஆளாக வரக்கூடும் என்பதற்கு மேல் வேறெதையும் அவர் யோசிக்கவில்லை.


ஆனால் "ஆல்பம் ரெடி" என்று ஜிவ் ரெகார்டிங் கம்பெனியின் தலைமை நிர்வாகி போன் செய்து கூப்பிட்டு ஆல்பத்தை போட்டு காட்டிய போது,மார்ட்டினும்,பிரிட்டனியும் மட்டுமல்லாமல்,அந்த முதல் பிரதியை பார்த்த அத்தனை பேருமே வாயடைத்துப் போனார்கள்.


பெண்ணே,நீ உலகை ஆளப்போகிறாய்,ஜாக்கிரதையாக இரு,உடம்பை கெடுத்துக் கொள்ளாதே,குரலையும் கெடுத்துக்கொள்ளாதே."உன் ஆட்டமும்,பாட்டும்,பூமி சுற்றிக்கொண்டிருக்கும் வரை உலகைக் சுற்றிகொண்டிருக்கும" என்று தலைமை நிர்வாகி தலையில் கைவைத்து ஆசிர்வதித்தார் சோனி மியூசிக்கின் நியூயார்க் பிரிவு தலைவர்.

அதுதான் கனவை வளர்த்தது.அதுதான் அச்சத்தையும் கொடுத்தது.ஹிட் ஆகிவிட்டால் சரி.ஒருவேளை ஆகாவிட்டால்?

அடுத்த ஆல்பம் என்று புன்னகை செய்தார் மார்ட்டின்.

இல்லை மார்ட்டின்,நான் கடுமையாக உழைத்திருக்கிறேன்,ஆகையால் நான் ஜெயிப்பதுதான் நியாயம்.நினைவு தெரிந்த நாளாக நான் பாடிக் கொண்டும்,ஆடிக் கொண்டும்தான் இருக்கிறேன்.நான் ஒழுங்க்காக பள்ளிகூடம்கூட போகவில்லை.எனக்கு சமையல் தெரியாது.மற்ற பலரைப் போல என்னால் ஓரிடத்தில் வேலை பார்க்கவும் முடியாது.இசையை மட்டும் நம்பி நான் பிறந்திருக்கிறேன்.அதற்கு முழு நேர்மையுடன் உழைத்திருக்கிறேன்.  

மார்ட்டினுக்கு அது இன்னொரு ஆல்பம்தான்.ப்ரிட்டனி  ஸ்பியர் சுக்கோ 
அதுதான் வாழ்க்கை.நிறைய சொல்லியிருந்தாள்.தன்னை பற்றி,இளமை காலங்கள் பற்றி,தன் குடும்பம் பற்றி. 8 வயதில் டி.வி.ஆடிசனுக்குப் 
போன ப்ரிட்டனி தேர்வானதும் வயது காரணமாக் வாய்ப்பு மறுக்கப்பட்ட 
பிரிட்னி, நாளெல்லாம்,பொழுதெல்லாம் நடன வகுப்புகளிலும், நாடக தியட்டர்களிலும் பயிற்சி,பயிற்சி...என்று பிசாசு மாதிரி பயின்றார் ப்ரிட்டனி.மடோனாவை கடவுளாக வழிபட்டார்.

எனக்கு அவர்தான் இன்ஸ்பிரேசன்.என்ன முயற்சி, என்ன அசுர சாதகம்,எப்பா!எப்பேர்பட்ட புகழ் அவருக்கு.உலகம் அவரது இசையைத்தான் ரசிக்கிறது.எனக்கு அதன் பின்னால் இருக்கும் உழைப்பு தெரியும்.அந்த உழைப்புக்கு சரியான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.அதையேதான் நானும் எதிர்பார்க்கிறேன்.

இது ஒரு தருணம்.அந்தரத்தில் கட்டப்பட்ட மாய நூலின்மீது நிற்கும் தருணம்.எண்ணி ஒரே நாள்.இதோ விடிந்ததும் ப்ரிட்டனியின் முதல் ஆல்பம் ரிலீஸ் ஆகிவிடும்.வெற்றியா,இல்லையா என்பது அடுத்த ஒரு மணி நேரத்தில் தெரிந்துவிடும்." ஜிவ் ரெகார்ட்ஸ் " பெயரில் வெளியிடும் " சோனி " நிறுவனம் உலகமெங்கும் பிரபலமானது.அதன் சக்தியும் வீச்சும் அபரிமிதமானது.அறிமுகங்கள் சோனியின் மூலமாக இருப்பதற்காக எத்தனை ஆயிரம் பேர் தவமிருக்கிறார்கள்.


ப்ரிட்டனிக்கு அந்த அதிர்ஷ்ட்டம் நிறையவே இருந்தது.எக்காரணம் கொண்டும் உப்புமா கம்பனிகள் மூலம் தனது ஆல்பம் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள். 18 வயதுக்கு அத்தனை தெளிவு ஆச்சரியமானது.போராடிக்கொண்டுதான் இருந்தாள் என்றாலும்,கிடைத்த  குட்டி வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.

முயற்சிகளை விடாமல் தொடர்ந்தாள்.திரும்பத் திரும்ப சோனியின் கதவுகளை உடையுமளவுக்குத் தட்டி எழுப்பி,தன்னை நிரூபித்து அந்த வாய்ப்பை பெற்றிருந்தாள்.




ஜிம்னாஸ்டிக்ஸ் தெரிந்திருந்தது,டிஸ்னி சேனல் நிகழ்ச்சிகளில் நடித்திருந்தது,நியூயார்க் ப்ரொபசனல் பெர்போர்மிங் ஆர்ட்ஸ் பள்ளிகூடத்தில் படித்தது," இன்னொசென்ஸ் " என்னும் இசைக்குழுவில் சில காலம் பாடியது, எல்லாம் அவளுக்கு உதவி செய்தன.


எல்லாவற்றைவிடவும் உதவியது ப்ரிட்டனியின் அபாரமான் தன்னம்பிக்கைதான்." நான் அழகானவள்,நான் இளமையானவள்,நான் திறமைசாலி,நான் கடுமையான உழைப்பாளி.எனவே நான் ஜெயித்தாக  வேண்டும்".


ஆனாலும் அதிர்ஷ்ட்டம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா?


வீட்டில் அப்பாவும்,அம்மாவும் எப்போதாவது கவலை மேலோங்கினால் மெதுவாக கேட்பார்கள். அப்படி ஏதும் இருபதாக எனக்குக் தெரியவில்லை என்று சொல்லிவிடுவாள்.


அந்த முதல் ஆல்பம் "  Hit Me Baby One More Time " 1998 இறுதியில் வெளியான தினம் வரை நம்பிக்கை மட்டுமே அவளது உணவாக இருந்தது.ஒரு கணமும் தனது நம்பிக்கையை அவள் தவற விட்டதில்லை.  மிக நிச்சயமாக  நம்பினாள்.


நான் தகுதியானவள்.எனவே நான் நிச்சயம் ஜெயிப்பேன்.


ஆல்பம் வெளியானது. அவ்வளவுதான் " ஐயோ,யார் இந்த பொண்ணு?
செம அழகாக  இருக்கிறாளே? குட்டை பாவாடைச் சட்டையும் ரெட்டை பின்னலுமாக என்ன குதியாட்டம் போடுகிறாள்! குரலா இது, அதிரும் தந்திக்கருவி  மாதிரி அல்லவா இருக்கிறது. இந்த பேஸ் வாய்ஸ் ஒரு வரபிரசாதம்.

எத்தனை ஆழத்திற்குப் போகிறாள்.அங்கிருந்து என்னமாய்த் தாவி மேலே உயர்கிறது அந்த குரல்.ஐயோ என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறதே! உலகமே தலைக்குமேல் வைத்துக் கொண்டாடத் 
தொடங்கிவிட்டது.

சோனி அறிவித்துவிட்டது.அன்றைக்கு மாலையே ப்ரிட்டனி ஸ்பியர்ஸ் 
ஓர் உலக நட்சத்திரமாகிபோனால்.ஹிட் மிகப்பெரிய ஹிட். நூற்றாண்டு கால சரித்திரத்தில் அமெரிக்காவில் வேறு எந்த பெண் கலைஞரின் முதல் ஆல்பமும்  அத்தனை பெரிய ஹிட் ஆனதில்லை.

தனது முதல் வெற்றியின்போது ப்ரிட்டனிக்கு 18 வயதுகூடப் பூர்த்தியாகியிருக்கவில்லை.இன்றைக்கு முப்பதை எட்டி பிடித்துகொண்டிருக்கும் வயதில்,அவரது அந்த முதல் புகழின் சதவிகிதத்திலிருந்து அரை அங்குலம் கூடக் குறையவில்லை.


ப்ரிட்டனி ஸ்பியர்ஸ,பாப் இசை ரசிகர்களுக்கு ஒரு வாழும் தேவதை.
எத்தனையோ ஆல்பங்கள்,எவ்வளவோ வெற்றிகள்,கோடிக்கணக்கான பணம்,புகழ்,ஆடம்பரம்,உல்லாசம்,கிசுகிசுக்கள்,கசமுசாக்கள் பிறகு வந்துவிட்டன.

 ஆனால் அவர் நினைத்தது நடந்து விட்டது.

நான் தகுதியானவள்.எனவே நான் ஜெயிப்பேன்.


ஆம்! ஜெயித்துவிட்டார்.











சனி, 16 ஜனவரி, 2010

கூகுள் -சீன அரசு மோதல் உச்சகட்டம்








 மனித உரிமைகளை தட்டிக் கேட்டு வெப்சைட்டில் வரும் கருத்துக்களை தாங்கிக்கொள்ள முடியாத சீனா, கூகுள் வெப்சைட்டை தணிக்கை செய்ய ஆரம்பித்துள்ளது. இதனால், சீன கம்யூனிச அரசுக்கும், கூகுளுக்கும் இடையே மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.



எந்த ஒரு தகவலையும் தெரிந்து கொள்ள இன்டர்நெட் மூலம் வழி செய்வது வெப்சைட்கள். இவைகளை தேடுவதற்காக அமைக்கப் பட்டது தான் யாகூ, கூகுள் போன்ற தேடுதல் சாதனங்கள் (சர்ச் இன்ஜின்). சீன கம்யூனிச ஆதிக்கத்தின் மனித உரிமை மீறிய செயல் களை, கூகுள் வெப்சைட்கள் மூலம் சீனாவைச் சேர்ந்த பலரும் விமர்சித்து வருகின்றனர். இது போதாதென்று, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள இந்த சீனர்கள், இன்டர்நெட்டை பயன்படுத்தி, கூகுள் வழியாக பல வெப்சைட்களிலும், சீனாவில் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்து பகிரங்கமாக பல தகவல்களை வெளியிட்டு வருவது, சீன கம்யூனிச அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வந்தது. இதனால், சீன கம்யூனிச அரசு இரண்டு வழிகளில் கூகுள் வெப்சைட்களை கட்டுப்படுத்த திட்டமிட்டது. ஒரு பக்கம், கூகுள் வெப்சைட்களை "அபகரித்து' அதில் உள்ள தகவல்களை தனக்கு சாதகமாக மாற்றி வெளியிட ஆரம்பித்தது. இப்படி பல வெப்சைட்களைத் "திருடி' வந்தது.



இது பற்றி கூகுள் நிறுவனம் கேட்ட போது, தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. உரிய விசாரணை செய்வதாக மட்டும் கூறியது. ஆனால், தொடர்ந்து, சீனாவில் இருந்து தான் கூகுளில் உள்ள வெப்சைட்கள் "திருடப்படுவது' அதிகரித்தது. அதிலும் குறிப்பாக, சீன மனித உரிமை பற்றி சொல்லும் வெப்சைட்கள் மட்டும் இப்படி "திருடப்பட்டு' சீன அரசுக்கு சாதகமாக வெளியிடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோல, மனித உரிமை மீறலை கிளப்புவோரின், "இ - மெயில்'களும் மாயமாகி விடுகின்றன.



இப்படி ஒரு பக்கம் தன் "வேலை'யைக் காட்டிய சீன அரசு, தணிக்கை அதிரடியையும் இன்னொரு பக்கம் ஆரம்பித்து விட்டது; "கூகுள் வெப்சைட்களில் சீனாவின் இறையாண்மைக்கு எதிராக தகவல்கள் வருகின்றன; பலான வெப்சைட்கள் அதிகமாக வருகின்றன; அதனால், தணிக்கை செய்து தான் சீன மக்கள் பார்ப்பதற்கு அனுமதிக்க முடியும்' என்று தணிக்கையை சீனா நியாயப்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் முற்றியதை அடுத்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனை கூகுள் நிறுவன உயர் அதிகாரிகள் சந்தித்து முறையிட்டுள்ளனர். "கூகுள் தேடுதல் சாதனம் என்பது, உலகில் உள்ள மக்கள் சுதந்திரமாக தகவல்களை தெரிந்து கொள்ளவும், எண்ணங் களை பரிமாறிக் கொள்ளவும் ஏற்படுத்தப்பட்டது. மக்களுக்கு தகவல்களை அளிப்பது தான் இணைய தளங்களின் பொறுப்பு. அதன் நம்பகத்தன்மை பற்றி சந்தேகிப்பது சரியல்ல; சீனா தன் கெடுபிடியை நீக்கி, கூகுள் நிறுவனத்துடன் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும்' என்று ஹிலாரி கிளின்டன் தெரிவித்தார்.



கூகுள் நிறுவனம் சார்பில் உயர் அதிகாரி டேவிட் ட்ரம்மண்ட் கூறுகையில், "கூகுள் வெப்சைட்கள் அடிக்கடி "திருடு' போவதற்கு, சீனாவில் உள்ள சில கம்ப்யூட்டர் நிறுவனங்கள் தான் காரணம். திட்டமிட்டு இப்படி வெப்சைட்களை "திருடி' தகவல்களை திரிக்கின்றனர்; இப்படி செய்வதால், ரகசியமான தகவல்கள் திருடப்படுவதும், கடத்தப்படுவதும் எளிதாகி விடும். இதை கூகுள் அனுமதிக்க விரும்பாது. சீன அரசு இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதுபோல தணிக்கையையும் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், சீனாவில் கூகுள் செயல்பாடுகள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டிய கட்டாயம் வரும்' என்று தெரிவித்தார். கூகுள் தேடுதல் சாதனத்தை அதிகம் பயன்படுத்துவோரில் சீன மக்கள் தான் அதிகம்.



சீனாவின் கெடுபிடி நிறுத்தப்படாவிட்டால், விரைவில், சீன மக்களுக்கு கூகுள் மூலமான வெப்சைட்கள் கிடைக்காது; அதனால், பெரிய அளவில் சீன தொழில், வர்த்தகர்கள் முதல் சாதா மக்கள் வரை பாதிக்கப்படுவர். சீன அரசுக்கும், கூகுளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலில், கூகுள் பக்கம் அமெரிக்கா உள்ளது. இதனால், சீனாவின் கோபம் அதிகரிக்க வாய்ப்புண்டு. கூகுள் தன் செயல்பாட்டை நிறுத்துவதற்கு முதல் கட்டமாக, பீஜிங்கில் உள்ள தன் அலுவலகத்தை மூட திட்டமிட்டுள்ளது.

நன்றி:
தினமலர்.