சனி, 31 அக்டோபர், 2009

கிணறு வெட்ட பூதம் வந்த கதை


பாஜக ஆட்சியில் ரூ. 1.6 லட்சம் கோடி டெலிகாம் ஊழல்: ஆ. ராசா


புது தில்லி, அக். 30: தொலைத் தொடர்புத் துறையில் பாஜக ஆட்சியில் ரூ. 1,60,000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா குற்றம் சாட்டியுள்ளார். 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகவும் இதனால் அரசுக்கு சுமார் ரூ. 60 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். டெலிகாம் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து இப்பதவியிலிருந்து ஆ. ராசா விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. சிபிஐ விசாரணை நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற வேண்டுமெனில் அமைச்சர் பதவியிலிருந்து ராசா பதவி விலக வேண்டும் என பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. ராசாவை பதவியிலிருந்து நீக்க பிரதமருக்கு துணிச்சல் இருக்கிறதா? என்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கேட்டிருந்தார். பிரதமரின் ஆலோசனையின் பேரிலும் முன்னர் வரையறுக்கப்பட்ட விதிகளின்படி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ராசா திரும்பத் திரும்ப கூறிவந்தார். தற்போது முதல் முறையாக பாஜக ஆட்சியில் டெலிகாம் ஊழல் நடைபெற்றதாக ராசா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது: பாஜக தலைமையிலான அரசு பதவியில் இருந்தபோது செல்போன் சேவை அளித்த நிறுவனங்களுக்கு அலைக்கற்றைகள் இலவசமாக ஒதுக்கப்பட்டன. டெலிகாம் வரலாற்றில் நடைபெற்ற மிகப் பெரிய முறைகேடு இதுவேயாகும். 4.4 மெகாஹெர்ட்ஸ் அளவுக்கு அலைக்கற்றை சில நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இதற்காக அனைத்து விதிமுறைகளும் மீறப்பட்டுள்ளன. பாஜக ஆட்சியின்போது இலவசமாக அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கு ஆதரவாக பாஜக தலைவர் அருண் ஜேட்லி வாதாடி வருவதாகவும் ராசா கூறினார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முரண்பட்ட முடிவுகள் உருவானதற்கும் பாஜக அரசுதான் காரணம். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்வது தொடர்பான முடிவை முதலில் கிடப்பில் போட்டதும் பாஜகதான். பின்னர் மிகவும் வசதியான சமயத்தில் 500 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பாஜக அமைச்சரவை ஒதுக்கியது. மேலும் 8 மெகாஹெர்ட்ஸிலிருந்து 10 மெகாஹெட்ர்ஸ் வரையிலான அளவை உயர்த்தினாலும் அதற்கான வருவாய் பகிர்வு வரம்பை உயர்த்தவில்லை. 2001-ம் ஆண்டு மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராயிருந்த பிரமோத் மகாஜன் 6.2 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை கூடுதல் கட்டணமின்றி வாடிக்கையாளர்களுக்கு ஒதுக்கினார். இது டெலிகாம் கமிஷன் பரிந்துரையை மீறி மேற்கொண்ட நடவடிக்கையாகும். இதேபோல கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடும் நடைபெற்றுள்ளது. 2004-ம் ஆண்டு இத்துறை அமைச்சராயிருந்த அருண் செüரி, லைசென்ஸ் கட்டணத்தை 2 சதவீதமாகக் குறைத்தார். அருண் செüரி எடுத்த முடிவினால் மட்டும் ரூ. 900 கோடி இழப்பு ஏற்பட்டதாக ராசா குற்றம் சாட்டினார்.

கருத்துகள் இல்லை: