ஞாயிறு, 25 அக்டோபர், 2009

இந்தியாவில் ஒரே வாரத்தில் ரூ.8,904 கோடிக்கு தங்கம் விற்பனை


தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்தியாவில் ஒரே வாரத்தில் ரூ.8,904 கோடிக்கு தங்கம் விற்பனை



சென்னை, உலக தங்க கவுன்சில் அமைப்பின் இந்திய பிரிவு நிர்வாக இயக்குநர் அஜய் மித்ரா கூறியதாவது:
பண்டிகை நாட்களில் தங்கம் வாங்குவதை இந்தியர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி, புஷ்ய நக்ஷத்ரா, தான்டெராஸ், பெஸ்டு வராஸ், பாய் தூஜ் ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட்டன. இதனால் தங்கம் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த 12 முதல் 19ம் தேதி வரையிலான 8 நாட்களில் நாடு முழுவதும் மொத்தம் 56 டன் விற்பனை ஆகி உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தைவிட 5.7 சதவீதம் அதிகம். விற்பனை மதிப்பைப் பொறுத்தவரை 39.2 சதவீதம் அதிகரித்து ரூ.8,904 கோடியானது.

உலக அளவில் ஸ்திரமற்ற பொருளாதார நிலையிலும் தங்கத்தின் மதிப்பு குறையாமல் இருந்ததால், பாதுகாப்பு கருதி இதில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இதுவும் விற்பனை அதிகரித்ததற்கு முக்கிய காரணம் என்றார்.

கருத்துகள் இல்லை: