சனி, 31 அக்டோபர், 2009

உலகின் மிக பெரிய பயணிகள் கப்பல்


உலகிலேயே மிகப்பெரிய பயணிகள் கப்பல் ஓயாசிஸ் பின்லாந்து நாட்டில் உள்ள தூர்கு தளத்தில் கட்டப்பட்டுள்ளது. 360 மீட்டர் நீளம் கொண்ட இக்கப்பல் 16 அடுக்கு மாடிகளை கொண்டது.
2700 அறைகள் உள்ளது. இதில் 6,300 பேர் பயணம் செய்யலாம். 2100 பேர் இக்கப்பலில் பணிபுரிகின்றனர். இது ரூ.7500 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
இதில், 4 நீச்சல் குளங்கள், கைப்பந்து, கூடைப் ந்து, விளையாட்டு மைதானங் களும் உள்ளன. இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பொழுது போக்க கூடிய பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளன.
கோல்ப் விளையாட்டு மைதானமும் அமைக்கப் பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 780 பேர் அமரக்கூடிய கலை அரங்கமும் உள்ளது.
இக்கப்பல் பின்லாந்தில் இருந்து அமெரிக்காவின் புளோரிடாவுக்கு இன்று தனது பயணத்தை தொடங்கியது. இதில் 6300 பேர் பயணம் செய்கின்றனர்.

இது வருகிற 10-ந் தேதி அமெரிக்கா சென்ற டைகிறது. அங்கு இக்கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்படு கிறது.

கருத்துகள் இல்லை: