செவ்வாய், 27 அக்டோபர், 2009

சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டுடன் 3 சிங்களர்கள் கைது


ஆலந்தூர், அக்.27-

சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 12.30 மணிக்கு கொழும்புக்கு ஒரு விமானம் புறப்பட தயாரானது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இலங்கையைச் சேர்ந்த முகமது அஷ்ரத், முகமது இர்சாத், ருஷ்மி ஆகிய 3 இளைஞர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.
அவர்களது பாஸ்போர்ட்டை சரி பார்த்தபோது அவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பே திருவனந்தபுரம் வழியாக இந்தியா வந்ததாக போலி முத்திரையிடப்பட்டு இருந்தது. அதை அதிகாரிகள் கண்டுபிடித்து விட்டனர்.
இதையடுத்து 3 பேரையும் அதிகாரிகள் கைது செய்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். பாஸ்போர்ட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 3 பேரும் சிங்களர்கள். இலங்கையின் சிங்கள மாவட்டத்தில் வசித்து வருகிறார்கள்.
இந்தியாவுக்கு போலி பாஸ்போர்ட்டில் எதற்காக வந்தார்கள் என்று விசாரணை நடக்கிறது. “கியூபிராஞ்ச் போலீசாரும் அவர்கள் சதித்திட்டத்துடன் நுழைந்தார்களா? என்று விசாரிக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: