புதன், 21 அக்டோபர், 2009

சென்னை மருத்துவமனையில் வாசிம் அக்ரம் மனைவி திடீர் அனுமதி

சென்னை மருத்துவமனையில் வாசிம் அக்ரம் மனைவி திடீர் அனுமதி



சென்னை, அக். 20: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் மனைவி ஹூமா (42) சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விமானத்தில் பயணம் செய்த அவர், திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மயக்க நிலையை அடைந்தார். இதையடுத்து அவர் பயணம் செய்த விமானம், சென்னை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
அவரைப் பரிசோதனை செய்த டாக்டர்கள், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அவருடன் வந்த வாசிம் அக்ரமிடம் கூறினர்.

கருத்துகள் இல்லை: