செவ்வாய், 6 அக்டோபர், 2009

அரசியல் வியாபாரி : ராமதாஸ்








கடந்த 5 நாட்களாக தமிழ் நாட்டு அரசியலில் சூடு பறக்கிறது. காரண கர்த்தாஅரசியல் வியாபாரி ராமதாஸ். அதிமுக கூட்டணில் இருந்து பா.ம.க. பிரிந்து விட்டதாக அறிக்கை விட்டு தன்னுடைய சுய ரூபத்தை காட்டி விட்டார்.கடந்த நாடளுமன்ற தேர்தலில் தி .மு.க. கூட்டணியில் 1 சீட்டு குறைவாக தருகிறார்களே என்று கூடு விட்டு கூடு பாயும் மந்திரத்தை கொண்டு செல்வி ஜெயலலிதாவிடம் அடைக்கலாமாகி 7 சீட்டுகள் பெற்று , போட்டி இட்ட 7 இடங்களிலும் தோல்வியை தழுவி தான் ஒரு அரசியல் வியாபாரி என்பதை நிருபித்து விட்டார்.

பா.ம.க. எந்த அணியுடன் கூட்டணி சேருகிறதோ அந்த அணிதான் வெற்றி பெரும் என்று சொல்லிவந்த அரசியல் வியாபாரி ராமதாசுக்கு தமிழக வாக்காளர்கள் இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்டி விட்டார்களா. கடந்த நாடளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது துணை முதல்வர் மு.க.ஸ்டான்லின் அவர்கள் ராமதாசை அரசியல் வியாபாரி என்று சொன்னது அவருக்கு 100% பொருந்தும்.

கடந்த முறை நடந்த சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க உடன் கூட்டணி அமைத்து தி.மு.க தொண்டனின் உழைப்பால் வெற்றி பெற்று , பிறகு அந்த தி.மு.க அரசுக்கு பல வகைகளிலும்
குடைச்சல் கொடுத்து அந்த அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்கள் பலவற்றை தன்னுடைய சுய நலத்திற்காக தடை போட்டவர் தான் இந்த ராமதாஸ். உதாரணம் : சென்னை துணை நகரம் , விமான நிலைய விரிவாக்கம் போன்ற திட்டங்களை சொல்லலாம்.

இப்பொழுது கூட அதிமுக கூட்டணில் இருந்து வெளியே வந்ததற்கு நிச்சயமாக ஒரு காரணம் இருக்கும். அந்த காரணமும் சுயநலம் சார்ந்ததாக இருக்கும். தன் மகன் அன்புமணிக்கு ராஜிய சபா
சீட்டு கேட்டு அவர் மீண்டும் தி.மு.க கூட்டணிக்கு தூது விடுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களே : பச்சோந்தி ராமதாஸ் மீண்டும் தங்கள் கூட்டணிக்கு
வந்தால் எக்காரணம் கொண்டும் உங்கள் கூட்டணியில் சேர்த்து கொள்ளாதீர்கள். காரணம் உங்கள் கூட்டணியின் மதிப்பும் மரியாதையும் குறைந்து விடும். தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறும் ராமதாஸ் போன்றவர்களுக்கு தமிழக மக்கள் சரியான் பாடம் புகட்டியும் அரசியல் வியாபாரி ராமதாஸ் மாறுவதாக தெரிய வில்லை.

ராமதாஸ் போன்ற அரசியல் வியாபாரிகள் எப்பொழுது திருந்துவார்களோ அன்றைக்குத்தான் தமிழக அரசியல் இந்திய அரசியலில் தலை நிமிர்ந்து நிற்கும்.

கட்டுரை
அபுல் பசர்.



1 கருத்து:

வரதராஜலு .பூ சொன்னது…

மிகசரியாக சொன்னீர்கள். இனி இவரை அரசியலில் தலை நிமிர யாருமே வாய்ப்பு தரக்கூடாது.