புதன், 28 அக்டோபர், 2009

எண்ணங்களின் எழுச்சி

உள்ளத்தில் உள்ளதுதான் உலகம்.இதை புரிந்து கொண்டால் துன்பம் எல்லாம் விலகும்.எண்ணங்கள்தான் மனித உறவுகளை உன்னதப்படுத்துகின்றன. மனித உறவுகள் பலப்படுவதும் பலவீனப்படுவதும் எண்ணங்களால்தான்.தயவு செய்து (Please),மன்னிக்கவும் (Sorry)
நன்றி (Thanks), இம் மூன்று வார்த்தைகள் மனித உறவுகளில் மிக முக்கிய அங்கம் வகிக்கின்றன. விட்டு கொடுப்பதால் கெட்டும் போவதில்லை, தட்டி கொடுப்பதால் தாழ்ந்தும் போவதில்லை.

சந்தோசம் என்பது பணம் தருவதாக மட்டுமல்ல, அன்பான வார்த்தைகளை உபயோக படுத்துவதன்மூலம் ,உடலால்,உள்ளத்தால்,பலவீனமானவர்களுக்கு ஆறுதலாக வார்த்தைகள்
கூறுவதன்மூலம் உடல் பலகீனமனவர்களுக்கு செயலால் உதவுவது போன்றவை மனித உறவுகளை
வளர்க்கும்.உறவுகள் பலப்பட பாலங்கள் கட்டுவோம்.சுவர்கள் வேண்டாம்.

உங்கள் எதிரி நண்பனாவதற்கு ஆயிரம் வாய்ப்புக்கள் கொடுங்கள்.ஆனால் உங்கள் நண்பர் விரோதியாவதற்கு ஒரு வாய்ப்புக் கூட தந்து விடாதிர்கள்.

இறைவனின் உன்னதமான உயர்ந்த படைப்பான மனிதன் மீது அன்பு காட்டுவது இறைவன்
மீது காட்டும் அன்புக்கு ஒப்பாகும். மனித உறவுகள் மெல்லிய பூக்கள் போன்றவை. பூக்கள்
மீது அலை அடிக்க வேண்டாம்.

இனி ஒரு முறை பிறக்கவா போகிறோம்? இருக்கும் வாழ்வில் எத்தனை ஆண்டு காலம்
வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல, எத்தனை இதயங்களில் வாழ்கிறோம் என்பதுதான்
வாழ்வின் அர்த்தமாகும்.

" குணம் நாடி குற்றம் நாடி அவற்றில்
மிகை நாடி மிக்க கொளல்"

என்ற குறளுக்கு ஏற்ப மற்றவர்களின் நிறைகளை மட்டும் பார்த்தால் உறவின் உன்னதம்
புரியும். முதுமையை நேசியுங்கள். நமக்கும் முதுமை வரும் என்பதை எண்ணுங்கள்.

முதியோர்கள் இல்லத்தில் ( வீட்டில்) இருக்க வேண்டுமே தவிர " முதியோர் இல்லத்தில் "
இருக்க கூடாது.

பகிர்ந்து கொள்ளுங்கள் - துன்பம் பாதியாகும்
பகிர்ந்து கொள்ளுங்கள் - இன்பம் இரட்டிப்பாகும்.

நன்றி:
முஸ்லீம் முரசு.

1 கருத்து:

ரோஸ்விக் சொன்னது…

அருமை...வாங்க பழகலாம்....உங்களுக்காகவும் எழுதியது.....

http://thisaikaati.blogspot.com/2009/10/pinnootam.html