ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

தற்கொலை போதும்

YsR மரண அதிர்ச்சி:இதுவரை 500பேர் மரணம்

ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்ததகவல் கேட்டு அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் தொடர்ந்து உயிரை மாய்த்து வருகிறார்கள். முதல் நாளிலேயே 67 பேர் மாரடைப்பாலும் 20 பேர் தற்கொலை செய்தும் உயிரிழந்தனர்.

அவரது இறுதிசடங்கு காட்சிகளை டி.வி.யில் பார்த்தபோது 178 பேர் பலியானார்கள். ராஜசேகர ரெட்டிக்காக உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நேற்று வரை 494 பேர் உயிரிழந்ததாக தெலுங்கு நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் ஆந்திராவில் 79 பேர் பலியாகியுள்ளனர். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 12 பேரும், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 7 பேரும், அனந்தபுரம் மாவட்டத்தில் 3 பேரும், குண்டூரில் 7 பேரும்,

அதிலாபாத்தில் 10 பேரும், கிருஷ்ணா மாவட்டத்தில் 6 பேரும், நிஜாமாபாத்தில் 2 பேரும், கர்னூலில் 7 பேரும், கரீம்நகரில் 10 பேரும், நல்கொண்டாவில் 9 பேரும், ஐதராபாத், ஜுப்ளி ஹில்ஸ், மெகபூப் நகர், விஜயநகரம், ஸ்ரீகாகுளத்தில் தலா ஒருவரும் பலியாகியுள்ளனர்.

இது தவிர துபாயிலும் ஒருவர் ராஜசேகர ரெட்டி மரணம் அடைந்த அதிர்ச்சியில் நேற்று உயிரிழந்துள்ளார்.

கருத்துகள் இல்லை: