சனி, 5 செப்டம்பர், 2009

இந்திய கார் சந்தையில் புதிய பென்ஸ்

மெர்சிடிஸ் நிறுவன புதிய கார் அறிமுகம்





புதுடில்லி: பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் மெர்சிடிஸ்-பென்ஸ், விரைவில் தனது புதிய மாடல் காரை அறிமுகப்படுத்துகிறது. ஜெர்மனியின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் மெர்சிடிஸ் -பென்ஸ். இந்தியாவில் இந்நிறுவனத்தின் கார் விற்பனை, கடந் தாண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு குறைந்துள்ளது. இந்த இழப்பை ஈடு செய்யும் வகையில், புதிய 'இ-கிளாஸ்' மாடல் காரை, இந்தாண்டு இறுதியில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த கார், பி.எம்.டபிள்யூ 5 -சீரியஸ் போன்ற கார்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மெர்சிடிஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் வில்பிரட் ஆல்பர் கூறியதாவது: இந்த கார், வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த மதிப்பு மிக்க பொருளை வைத்திருக்கும் ஒரு அனுபவத்தை ஏற்படுத்தி தரும் என்பது உறுதி. கடந்தாண்டு இந்தியாவில் எங்கள் நிறுவனம் சார்பில், 3,562 கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்தாண்டு விற்பனையில் பின் தங்கியுள்ளோம். புதிய இ-கிளாஸ் கார்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், 2010ம் ஆண்டில் விற்பனையில் குறிப்பிடத் தக்க வளர்ச்சி கிடைக்கும் என, நம்புகிறோம். இவ்வாறு வில்பிரட் ஆல்பர் கூறினார். கார் டீலர் வட்டாரங்கள் கூறுகையில், 'நவீன தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கியதாக இந்த கார் வடிவமைக்கப்படும். இதன் விலை, 40 லட்ச ரூபாயில் இருந்து 45 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது'என்றார்.

கருத்துகள் இல்லை: