ஞாயிறு, 31 ஜனவரி, 2010

பழங்களும் அதன் பலன்களும்



 

  
இன்றைக்கு நமக்கு வரும் பல நோய்களுக்கும் காரணம் நம்முடைய உணவுப்பழக்கங்களை நாம் மாற்றிக் கொண்டிருப்பதுதான்.  இயற்கை உணவுகளாகிய பழங்களையும் காய்கறிகளையும் அதிக அளவில் நாம்  நமது உணவில் சேர்த்துக்கொண்டால் நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளமுடியும். ஆரோக்கியமாக வாழமுடியும். 


மலையும் மலைசார்ந்த பகுதிகளில் வாழும் மக்கள்  பழங்களையும்,காய்கறிகளையும் அதிக அளவில் உணவாக கொள்வதால் ஆரோக்கியமாக வாழ்வதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.


ஏன் காடுகளில் வாழ்ந்த சித்தர்களும், ஞானிகளும் இயற்கை உணவாகிய பழங்களையும்  காய்கறிகளையும் சாப்பிட்டு நூறு வயதை கடந்தும் ஆரோக்கியமாக வாழ்ந்ததாக வரலாறு கூறுகின்றது.
அப்படிப்பட்ட இயற்கை உணவாகிய பழங்களும்,அதன் பலன்களும்.


ஆப்பிள் : இருதயநோய், இரத்தகொதிப்பு, மூட்டுவலி, தலைவலி போன்றவை வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.


திராட்சை : பசியின்மை, மலச்சிக்கல், சிறிநீரக கல், போன்ற நோய்களிலிருந்து உடலை பாது காக்கக்கூடியது.


ஆரஞ்சு : காய்ச்சல், எலும்பு நோய்கள், போன்ற வற்றிக்கு சிறந்த மருந்தாகும். முகப்பரு வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. வளரும் குழந்தைகளுக்கு ஆரஞ்சு பலத்தை அதிக அளவில் கொடுக்கலாம்.


மாதுளை : வயிற்றில் பூச்சி, அஜீரனகோளாறு, பித்தப்பை,சிறுநீரக கல், புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. மார்பக புற்று நோய் வரும் வாய்ப்பு குறைவு. இதில் உள்ள பைட்டோகெமிகல் என்னும் அமிலம் ஆன்றோஜான் என்ற ஹார்மோனை கட்டுப்படுத்தி மார்பக புற்றுநோய்க்கு காரணமான் செல்கள்,கட்டிகள் வளராமல் தடுக்கிறது.


வாழைப்பழம் : மூட்டுவலி, சிறுநீரக கோளாறு, மலசிக்கல், காசநோய், அலர்ஜி போன்ற நோய்கள் வராமல் தடுக்ககூடியது.


பப்பாளி : பசியின்மை, வயிற்றுபூசி, ஈரல், சம்பந்தமான நோய்களை தீர்க்கக்கூடியது. உடலை பளபளப்பாக்கும் தன்மை கொண்டது பப்பாளி.


நெல்லிக்கனி : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.  தூக்கமின்மை, உடல் கொழுப்பு குறைய, இளநரை, முடிஉதிர்வு போன்ற நோய்களிலிருந்தும் பாதுகாக்ககூடியது.


தர்ப்பூசணி :அதிக நீர்சத்து நிறைந்தது. வைட்டமின் "சி" ,பொட்டாசியம்,மற்றும் இரும்பு சாது கொண்டது. தாகத்தை தீர்க்க கூடியது.


சாத்துக்குடி : இரத்தத்தை விருத்தி அடைய செய்கிறது, உடல் அசதியை போக்ககூடியது, ஆரஞ்சு பழச்சாற்றை இரத்தம் உறிஞ்சி கொள்வதால் உடலுக்கு வெப்பமும்,சக்தியும் உடனடியாக கிடைத்துவிடுகிறது. எலும்புகள் வலுவடையும்.

பலாப்பழம் : கண்பார்வைக்கு உதவக்கூடிய விட்டமின் "  எ " சத்து அதிக அளவில் உள்ளது. நரம்புகளை உறுதியாக்கும்.


பேரிச்சை : இரும்பு சத்து, விட்டமின் "எ" மற்றும் சுண்ணாம்பு சத்து நிறைந்தது.  இதயம் வலுப்பெறும்.


இன்னும் வரும் ............................

3 கருத்துகள்:

சிநேகிதன் அக்பர் சொன்னது…

அருமையான தொகுப்பு இன்னும் எழுதுங்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

பழங்களை பத்திய குறிப்புகள் அருமை

goma சொன்னது…

FRUIT FULL பதிவு