ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

இனிய சுதந்திரத் தின நல்வாழ்த்துக்கள் !



இன்றைய நாள் நம்வாழ்வில் ஒரு பொன்னாள்! ஆம் இன்று 
நம்முடைய  64 வது  சுதந்திர நாள். அடிமை சங்கிலி அறுக்கப்பட்டு 
சுதந்திர காற்றை சுவாசித்த இனியநாள் .

110 கோடி மக்களைக்  கொண்ட நம் பாரதம்  பல்வேறு கலாச்சாரங்கள்
மொழிகள்,பழக்கவழக்கங்கள்,மதங்கள்,ஆகியவற்றால் பிண்ணி பிணைக்கப்பட்டது. இன்று அத்துணை வேறுபாடுகளையும் மறந்து நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம்.

இன்று அணைத்து சுதந்திரமும் நமக்கு கிடைத்திருகிறது.எழுத்து சுதந்திரம்,பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம்,தனி மனித சுதந்திரம், இப்படி எல்லா சுதந்திரங்களையும் அனுபவித்தவர்களாக நாம் இருக்கிறோம்.காரணம் நாம் வாழ்வது சுதந்திர இந்தியாவில். 

ஒன்றுபட்டு வாழும் நம் தேசத்தில்,ஆங்காங்கே வன்முறைகளும்,தீவிரவாத தாக்குதல்களும், மதக் கலவரங்களும் நடைபெற்றாலும் அத்தனை தீய சக்திகளையும் ஒருமுகமாக,ஒன்றுபட்ட இந்தியர்களாக நின்று அந்த தீய சக்திகளை வென்று காட்டுகிறோமே அதுதானே நம் ஒற்றுமை !

இந்த ஒற்றுமை என்றென்றும் நிலைத்து நின்று,நாம் அனைவரும் பிறப்பால் இந்தியர்கள் என்று இந்த உலகுக்கு காட்டுவோம். எல்லா துறைகளிலும் வளர்ச்சி அடைந்த இந்தியாவை, ஒரு வல்லரசு இந்தியாவை படைத்துக் காட்டுவோம்.

அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை அந்நியரிடமிருந்து மீட்டு ,சுதந்திரம் பெற  தமது,உடல்,பொருள்,ஆவி  அத்துனையையும் இழந்து நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்த அத்தனை சுதந்திரப் போராட்ட வீரர்களையும்,அவர்களின் தியாகத்தையும் இந்த நன்னாளில் நினைவு கூர்வோம். 

அந்த தியாக தீபங்கள் கண்டக் கனவை நனவாக்குவோம்.

வாழ்க பாரதம்                                  வளர்க இந்தியர் ஒற்றுமை

பட்டொளி வீசி பறக்கட்டும் நம் தேசிய கொடி
                              பாரெங்கும் பரவட்டும்  இந்தியர் ஒற்றுமை 

இந்த இனிய நாளில் வலைப்பூ பதிவர்களுக்கும்,வலைப்பூ நண்பர்களுக்கும்,வலைப்பூ வாசகர்களுக்கும்  என்  

                "இனிய சுதந்திர  தின நல்வாழ்த்துக்கள்" 


நட்புடன்

.

10 கருத்துகள்:

Unknown சொன்னது…

உங்களுக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்

தூயவனின் அடிமை சொன்னது…

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

என் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்..

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

ஜெய் ஹிந்த்!

Unknown சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
@ இளம் தூயவன்

Unknown சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
@ ஸ்டார்ஜன்

Unknown சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
@ வெறும்பய

Unknown சொன்னது…

வாருங்கள் சிநேகிதி.தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

சுதந்திர தின வாழ்த்துகள்.

Unknown சொன்னது…

வாருங்கள் அக்பர்.
வருகைக்கும்,வாழ்த்துக்கும்
நன்றி