புதன், 14 ஜூலை, 2010

22 வயதில் ஐ.ஐ.டி., பேராசிரியர் பீகாரை சேர்ந்தவர் சாதனை

 

 பீகாரை சேர்ந்த ததாகத் துளசி (22) என்ற இளம்மேதை, பாம்பே இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐ.ஐ.டி.,) உதவி பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். மிகக் குறைந்த வயதில் ஒருவர் ஐ.ஐ.டி.,யில் பேராசிரியராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை.


பீகாரை சேர்ந்தவர் ததாகத் துளசி. இவர் தன் 9 வயதில் பள்ளி இறுதிப் படிப்பை முடித்தார். 10 வயதில் பி.எஸ்சி., பட்டம் பெற்றார். 12 வயதில் எம்.எஸ்சி., பட்டம் பெற்றார். பின் தன் 21 வயதில், "க்வான்டம் கம்ப்யூட்டிங்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து, இந்திய அறிவியல் கழகத்திடமிருந்து முனைவர் பட்டம் பெற்றார்.கனடாவிலுள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகம் அபரிமிதமான சம்பளத்தில், இவரை தன் நிறுவனத்தில் பேராசிரியராக நியமிக்க விரும்பியது. ஆனால், ததாகத் மறுத்து விட்டார்.

2003ல் உலகப் புகழ் பெற்ற "டைம்' நாளிதழ், சாதனை புரிந்த இளைய வயதினர் ஏழு பேரில் இவரை ஒருவராகக் குறிப்பிட்டு பெருமை அளித்தது. போபாலிலுள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி (ஐ.ஐ.எஸ்.ஆர்.,) நிறுவனம் ஒரு நல்ல வேலைவாய்ப்பை இவருக்கு அளிக்க முன்வந்தது.தற்போது,

பாம்பே ஐ.ஐ.டி.,யின் இயக்குனர் பேராசிரியர் தேவங் வி ககார், ததாகத் ஐ.ஐ.டி.,யில்  உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, அவருக்கு நியமன கடிதம் அனுப்பியுள்ளார். ஐ.ஐ.டி.,யில் இயற்பியல் துறையில் அடுத்த வாரம் உதவி பேராசிரியர் பணியில் இணையவுள்ளார்.

நன்றி:-
தினமலர்.

2 கருத்துகள்:

சிநேகிதன் அக்பர் சொன்னது…

உண்மையிலேயே பெரிய சாதனைதான். பகிர்வுக்கு நன்றி சார்.

Unknown சொன்னது…

உங்கள் வருகைக்கும்,
பின்னூட்டத்திற்கும்
நன்றி@ அக்பர்.