ஞாயிறு, 25 ஜூலை, 2010

சுஜாதா : ஒரு சிறப்புப் பார்வை ! பகுதி -1

பிரபல எழுத்தாளரும்,திரைப்பட வசனகர்த்தாவும்,கணினி தமிழ் கண்டவரும், அறிவியல் தமிழ் தந்தவரும், ஆகிய பண்முகம் கொண்ட " திரு:சுஜாதா" அவர்களைப் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை.

திருச்சி ஸ்ரீரங்கத்தை பூர்விகமாக கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். இவர் 1935 ம் ஆண்டு மே மாதம் 3  தேதி  பிறந்தார்.

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். 

சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா.

இவருடைய, "இடது ஓரத்தில்" என்ற சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம்இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா. கி. ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தன் மனைவி பெயரான, 'சுஜாதா'வைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ். ஆர் எனும் பெயரிலும் எழுதி வந்தார்.
 
திருக்குறள்,புறநானுறு,சிலப்பதிகாரம்,இவற்றிற்கு ஆழ்வார் பாசுரங்களோடு உரை எழுதினார் சுஜாதா. மக்களின் பெருத்த வரவேற்பைப் பெற்றன இந்த உரைகள்.

ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி இயற்பியல்  படிப்பை முடித்தார். முன்னாள் குடியசுத் தலைவர் டாக்டர்.அப்துல் கலாம் அவர்களும்,  சுஜாதாவும் திருச்சி ஜோசப் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள்.

அதன் பின் சென்னை எம்.ஐ.டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து  பொறியியல் பட்டதாரி ஆனார். இங்கும் டாக்டர் அப்துல் கலாமும் இவரும் சேர்ந்தே படித்தார்கள். இருவரும் பல சிகரங்கள் தொட்டபிறகும் அந்த நட்பு கடைசி வரை உறுதியாக இருந்தது. 

மத்திய அரசுப் பணியில் சேர்ந்து , டெல்லியில் முதலில் பணியாற்றினார். 
14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.


அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.

20 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார். கமல்,மணிரத்னம்,
சங்கர்,  ஆகியோர் படங்களில்  அவரது திறமை மின்னலாக தெரியும். இவர் இறுதியாக திரைகதை எழுதிய படம் சங்கரின் " எந்திரம்". திரைகதை முழுவதையும் முழுமையாக எழுதி முடித்துவிட்டார்.


தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் சுஜாதாவின் முக்கிய கண்டுப்பிடிப்புகளில் ஒன்றாகும்.இதற்காக பிரசித்தி பெற்ற " வாஸ்விக்" விருது தரப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.இவரின் கண்டுப்பிடிப்பான அந்த வாக்கு என்னும் இயந்திரத்தில் எவ்வளவோ குறைகள் எழுந்தாலும்,அவை எதுவும் நிரூபணமாகவில்லை என்பதுதான் உண்மை.

சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.

 சுஜாதாவின் கணேஷ்-வசந்த்,கதாபாத்திரங்கள் தமிழ் வாசகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கணேஷ்,வசந்த், என்று பெயர் சூட்டி மகிழ்ந்த காலங்கள்  உண்டு. கணேஷ்-வசந்த், கதையில் வசந்த் இறக்கும் தருவாயில் இருப்பதாக ஒருமுறை தொடரில் இவர் எழுதிவிட,கதையின் கதாப்பாத்திரங்களாக மாறிவிட்ட வாசகர்கள்,அவர் என்ன "பிளட்"குரூப் என கேட்டு சுஜாதாவிற்கு தந்திகள் கொடுத்து அந்த கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுத்துவிட்டார்கள். அந்த அளவிற்கு சுஜாதாவின் எழுத்து வாசகர்களை வசியப்படுதியது.

ஒரு காலத்தில் தொடர்ந்து புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்ட இவர், ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப்பட்டதும் புகைப் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டார்.இதை மைய்ய கருவாக வைத்து இவர் ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரை வாசகர்களிடம்  பெரும் வரவேற்பை பெற்றது.

இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என்று இவர் தொடாத துறை இல்லை. புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். ஒரு கவிதைத் தொகுப்பும் படைத்துள்ளார்.

 இவரின் புதினங்கள் 
  • பதவிக்காக
  • ஆதலினால் காதல் செய்வீர்
  • பிரிவோம் சந்திப்போம்
  • அனிதாவின் காதல்கள்
  • எப்போதும் பெண்
  • என் இனிய இயந்திரா
  • மீண்டும் ஜீனோ
  • நிலா நிழல்
  • கரையெல்லாம் செண்பகப்பூ
  • யவனிகா
  • கொலையுதிர் காலம்
  • வசந்த் வசந்த்
  • ஆயிரத்தில் இருவர்
  • பிரியா
  • நைலான் கயிறு
  • ஒரு நடுப்பகல் மரணம்
  • மூன்று நிமிஷம் கணேஷ்
  • காயத்ரி
  • கணேஷ் x வஸந்த்
  • அப்ஸரா
  • மறுபடியும் கணேஷ்
  • வீபரீதக் கோட்பாடுகள்
  • அனிதா இளம் மனைவி
  • பாதிராஜ்யம்
  • 24 ரூபாய் தீவு
  • வசந்தகாலக் குற்றங்கள்
  • வாய்மையே - சிலசமயம் - வெல்லும்
  • கனவுத்தொழிற்சாலை
  • ரத்தம் ஒரே நிறம்
  • மேகத்தைத் துரத்தினவன்
  • நிர்வாண நகரம்
  • வைரம்
  • ஜன்னல் மலர்
  • மேற்கே ஒரு குற்றம்
  • உன்னைக் கண்ட நேரமெல்லாம்
  • நில்லுங்கள் ராஜாவே
  • எதையும் ஒருமுறை
  • செப்டம்பர் பலி
  • ஹாஸ்டல் தினங்கள்
  • ஒருத்தி நினைக்கையிலே
  • ஏறக்குறைய சொர்க்கம்
  • என்றாவது ஒரு நாள்
  • நில் கவனி தாக்கு
  • காந்தளூர் வசந்தகுமாரன் கதை
  • பெண் இயந்திரம்
  • சில்வியா"

    குறும் புதினங்கள்

  • "ஆயிரத்தில் இருவர்"
  • "தீண்டும் இன்பம்"
  • "குரு பிரசாத்தின் கடைசி தினம்"
  • "ஆகாயம்"

     சிறுகதைத் தொகுப்புகள்

  • ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்
  • நிஜத்தைத் தேடி

    சிறுகதை மற்றும் குறும் புதினத் தொகுப்புகள்

  • நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம்

     கவிதைத் தொகுப்பு

  • நைலான் ரதங்கள்

     நாடகங்கள்

  • Dr. நரேந்திரநாத்தின் வினோத வழக்கு
  • கடவுள் வந்திருந்தார்
  • பாரதி இருந்த வீடு
  • ஆகாயம்

     கட்டுரைத் தொகுப்புகள்

  • கணையாழியின் கடைசி பக்கங்கள்
  • கற்றதும் பெற்றதும் [பகுதி 1-5]
  • கடவுள் இருக்கிறாரா
  • தலைமை செயலகம்
  • எழுத்தும் வாழ்க்கையும்
  • ஏன் ? எதற்கு ? எப்படி ?
  • சுஜாதாட்ஸ்
  • இன்னும் சில சிந்தனைகள்
  • தமிழ் அன்றும் இன்றும்
  • உயிரின் ரகசியம்
  • நானோ டெக்னாலஜி
  • கடவுள்களின் பள்ளத்தாக்கு
  • ஜீனோம்
  • திரைக்கதை எழுதுவது எப்படி?

    திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள்

  • காயத்ரி
  • கரையெல்லாம் செண்பகப்பூ
  • ப்ரியா
  • விக்ரம்
  • வானம் வசப்படும்
  • ஆனந்த தாண்டவம்

     பணியாற்றிய திரைப்படங்கள்

  • ரோஜா
  • இந்தியன்
  • ஆய்த எழுத்து
  • அந்நியன்
  • பாய்ஸ்
  • முதல்வன்
  • விசில்
  • கன்னத்தில் முத்தமிட்டால்
  • சிவாஜி த பாஸ்
  • வரலாறு (திரைப்படம்)
  • செல்லமே
இன்னும் வரும்.......

நன்றி: விக்கிபீடியா.

9 கருத்துகள்:

சிநேகிதன் அக்பர் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி அபுல்பசர்.

பத்மநாபன் சொன்னது…

சுஜாதாவின் எழுத்தும் ,சுஜாதா பற்றிய எழுத்தும் என்றும் இனியவை. அவரது படைப்புக்களை வரிசை படுத்தி குறிப்பிட்டது சிறப்பு. சிறப்பு பார்வை பல பகுதிகளை காண வாழ்த்துக்கள்.

ஜோதிஜி சொன்னது…

இது போன்ற சுஜாதா சம்மந்தப்பட்ட விசயங்கள் இருந்தால் நிறைய பகிர்ந்து கொள்ளுங்கள்.

எதிர்பார்க்கின்றேன்.

நல்வாழ்த்துகள்.

Amudhavan சொன்னது…

சுஜாதாவைப் பற்றிய விவரங்கள் எப்போதுமே சுவாரஸ்யமானவைதாம்,அவரைப்போலவும் அவரது எழுத்துக்களைப் போலவும். நல்ல பகிர்வைத் தந்துள்ள நீங்கள் அவரைப்பற்றியோ அல்லது அவரது எழுத்துக்களைப் பற்றியோ உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்திருக்கலாம். பெங்களூரில் நான் அவருடன் சுமார் இருபது ஆண்டுக்காலம் பழகினவன்.அந்த நினைவுகளையெல்லாம் விரைவில் புத்தகமாகவும் எழுதவிருக்கிறேன். என்னுடைய பதிவுகளை இங்கே படிக்கலாம்.http://amudhavan.blogspot.com சுஜாதா மீது தாங்கள் கொண்டுள்ள ஆர்வத்திற்குப் பாராட்டுக்கள்.

Unknown சொன்னது…

வணக்கம் அமுதவன் அவர்களே.

தங்களின் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.
சுஜாதா அவர்கள் என்றைக்கும் ஒரு சிறப்புக்குரிய மனிதரே.
அவரைப் பற்றி என்னுடைய கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளாமல் போனது நிச்சயமாக தவறுதான்.

இருந்தாலும் உங்களைப் போன்றவர்கள் சுஜாதா அவர்களை நன்கு அறிந்தவர்கள்.
அவரின் நினைவுகளை எங்களோடு பகிர்ந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
தங்களின் வலைப்பூ சென்று படித்துவிட்டு என்னுடைய கருத்துக்களை தங்களோடு
பகிர்ந்துகொள்கிறேன்.

என்னுடைய வலைப்பூவில் குறைகள் இருந்தால் சுற்றி காட்டுங்கள்
தயங்காமல் அதை திருத்திகொள்கிறேன்.
உங்களைப் போன்றவர்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும்
என்றும் எதிர் பார்த்தவனாக.

Unknown சொன்னது…

தங்களின் வருகைக்கும்,வாழ்த்துக்கும்
நன்றி ஜோதிஜி அவர்களே.
அடிகடி வருகை தாருங்கள்.
குறைகள் இருப்பின் சுற்றி காட்டுங்கள்.அதை நிறைவாக்கி கொள்கிறேன்.

வலைசரத்தில் தாங்கள் ஆசிரியராக பொறுப்பேற்று அதை சிறப்பாக செய்தீர்கள்.தாங்கள் அறிமுகப்படுத்திய
வலைப்பூ தளங்கள் அத்தனையும் சிறப்பானது.
உங்களைப் போன்றவர்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும்
என்றும் எதிர் பார்த்தவனாக.

வாழ்த்துக்கள் ஜோதிஜி.
நட்புடன்

ஜோதிஜி சொன்னது…

நண்பரே மகிழ்ச்சி. இடையில் சற்று படங்களையும் சேர்த்து சுவராஸ்யப்படுத்துங்கள்.

எனக்கு சுஜாதா பற்றி எந்த தனிப்பட்ட கருத்தும் இல்லை. சொல்லப்போனால் அவர் புத்தகங்கள் என்றும் எனக்கு பாடப்புத்தகங்கள் போலத்தான்.

எனது வாழ்வில் எத்தனை குறைகள் இருந்தாலும் சிலரை எந்த சூழ்நிலையிலும் விமர்சிக்கவே கூடாது என்ற கருதுபவன். ஆனால் சுஜாதா பற்றி கடந்து 20 ஆண்டுகளில் எந்த தவறான செய்திகளையும் நான் படித்ததும் இல்லை. கேள்விப்பட்டதும் இல்லை.

கடைசியாக பார்ப்பன சங்கத்தில் கலந்து கொண்டது அவரைப் பொறுத்தவரையில் செய்த காரியம்.

அது தவறு என்றும் நான் சொல்ல மாட்டேன்.

நீங்கள் பழகி இருக்கிறீர்கள். உங்களைப் போனற்வர்களின் கருத்துக்கள் எனக்கு அவஸ்யம் தேவை. அவர் குறித்த தேடல்கள் எனக்கு எப்போதும் உண்டு.

மின் அஞ்சல் வசதி இருந்தால் உருவாக்குங்கள்.

இல்லாவிட்டால்
உங்கள் பதிவு ஒவ்வொன்றும் ஏற்றும் போது தயை கூர்ந்து ஒரு தகவல் அனுப்பினால் இன்னும் நலம்.

இரண்டு தளங்களும் நிறைய செய்திகள் உள்ளது.

நல்வாழ்த்துகள்.
texlords@gmail.com



ஜோதிஜி
http://deviyar-illam.blogspot.com

ஜோதிஜி சொன்னது…

மன்னிக்கவும்

மின் அஞ்சல்வசதி உள்ளது.

இணைத்துக் கொண்டேன்,

Unknown சொன்னது…

தங்களின் வருகைக்கும்,வாழ்த்துக்கும்
நன்றி @ ஜோதிஜி அவர்களே.