திங்கள், 1 பிப்ரவரி, 2010

ஏ.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்க கிராமி விருதுகள்

 
உலக அளவில் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான அமெரிக்க கிராமி அவார்டு தமிழகத்தை சேர்ந்த ஏர்.ஆர்.ரகுமானுக்கு கிடைத்துள்ளது. 

இந்த விருது கிடைத்தது எல்லாம் இறைவன் அருளால்தான் என்றும், தமது இந்திய ரசிகர்களின் அன்பும் , ஆதரவும் எனக்கு தொடர்ந்து அளித்து வரும் அவர்களுக்கு இத் தருணத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். 

ஏர்.ஆர்.ரகுமான், கடந்தாண்டு இசையமைத்து வெளிவந்த ஸ்லம்டாக் மில்லினர் திரைப்படம் ஆஸ்கருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் சிறந்த பாடல் ஜெய் கோ மற்றும் இசைக்காக 2 ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டது. இப்படத்திற்கு இசை உட்பட எட்டு விருதுகள் கிடைத்தன. 

இதன்மூலம் தனிநபராக ஆஸ்கர் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஏர்.ஆர்.ரகுமான் பெற்றார். இதனைதொடர்ந்து இவருக்கு ஏராளமான பாராட்டுகள் குவிந்தன.
இந்நிலையில் இவருக்கு மேலும் இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. ஆண்டுதோறும் அமெரிக்காவில் கிராமி விருதுகள் வழங்கப்படுகிறது. அதில் இந்தாண்டுக்கான சிறந்த சவுண்ட் டிராக் மற்றும சிறந்த பாடல் ( ஜெய் ஹோ ) ஆகியவற்றுக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன.

ஸ்லம்டாக் மில்லினர் படத்தினன்மூலம் இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. லாஞ் ஏஞ்சல்ஸ்சில் நடந்த விழாவில் விருதினை பெற்ற ஏர்.ஆர்.ரகுமான் , பேசுகையில் என்ன சொல்வது என்றே தெரியவில்லை, கடவுள் மீண்டும் ஒருமுறை இவ்விருதினை தமக்கு வழங்கியுள்ளார்.


இது எல்லாம் கடவுள் அருளால் தான் நடந்துள்ளது. இறைவனுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்தியர்களின் பேராதரவும், அன்பும் அவரதும் பிரார்த்தனையும் எனக்கு எப்போதும் உள்ளது. இதன் மூலம் இந்த கிராமி விருதை பெற்றதை இந்தியர்களுடன் பகிர்ந்து மகிழ்ச்சி கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


பன்டிட் ரவிசங்கர், விக்கு வினாயம், ஜாகீர் உசேன் , விஸ்வமோகன்பட் ஆகியோர் இந்த கிராமி விருது பெற்ற இந்தியர்கள் ஆவர். 

நன்றி: 
தினமலர்.

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

எல்லா புகழும் இறைவனுக்கே

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நல்வாழ்த்துகள் A.R. RAHMAN

goma சொன்னது…

நிறைகுடம் தழும்பாத அவரது குணத்துக்கே இன்னும் பல பரிசுகள் அவர் பெறுவார்