மரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 31 மே, 2010

விபத்து எப்படி எதனால் ,ஏன் ஏற்படுகிறது ?


உலகத்தில் ஆண்டு தோறும் நடைபெறுகின்றன சாலை விபத்துகளில் ஏராளமான மக்கள் மரணம் அடைகின்றனர்.. அதிலும் குறிப்பாக இரு சக்கர வாகனங்களினால் மரணமடைவோரின் எண்ணிக்கை அதிகம். 
இந்த படங்களை பாருங்கள். இந்த படங்கள் " ஜமைக்காவில் " எடுக்கப்பட்டவை.  
இரு சக்கர வாகனங்களில் செல்லும் இவர்கள் தலைகவசம் (Helmet) அணியவில்லை.
மரணத்திற்கு காரணம் தலைகவசம் அணியாததே.



வியாழன், 26 நவம்பர், 2009

வரலாற்று சம்பவம்: பூட்டோ தூக்கில் போடப்பட்டார்; கருணை காட்ட ஜியா மறுப்பு


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பூட்டோ, தூக்கில் போடப்பட்டார். அவரிடம் கருணை காட்டும்படி உலகத் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை, அதிபர் ஜியா நிராகரித்தார்.
தன் அரசியல் எதிரியை கொலை செய்ய உத்தரவிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், பூட்டோவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
7 அடி அகலமும், 10 அடி நீளமும் உள்ள சிறையில் பூட்டோவை அடைத்து வைத்து இருந்தார்கள். இந்த அறைக்குள் சூரிய வெளிச்சமே தெரியாது. இதை பூட்டோவின் நெருங்கிய நண்பரான பிர்ஓடா என்பவர் பூட்டோவை சிறையில் சந்தித்துவிட்டு திரும்பிய பிறகு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "பூட்டோ உணவு எதையும் சாப்பிடவில்லை. தேன் மட்டும் சாப்பிடுகிறார். சில நேரம் காபி குடிக்கிறார். இதனால் பூட்டோ உடல் எலும்பு கூடு போல இருக்கிறது. முகச்சவரம் செய்யாததால் தாடி வளர்ந்து இருக்கிறது" என்று தெரிவித்தார். விசாரணைக்காக ஒருமுறை பூட்டோ கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டபோது கண் கலங்கியபடி காட்சி அளித்தார்.
"இந்த நாட்டுக்கு நான் எந்த தீமையும் செய்யவில்லை. என்னை சிறையில் சித்ரவதை செய்கிறார்கள்" என்று அவர் முறையிட்டார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அதை ரத்து செய்யும்படி அதிபருக்கு கருணை மனு போட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதை பூட்டோ ஏற்கவில்லை.
கருணை மனு தாக்கல் செய்தால், குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ஆகிவிடும். ஆகவே கருணை மனு தாக்கல் செய்யமாட்டேன்" என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். அதோடு தனது உறவினர்களும், நண்பர்களும் தனக்காக கருணை மனு கொடுக்கக்கூடாது என்றும் தடுத்துவிட்டார்.
ஆனால் பூட்டோவின் அக்காள் முனுவார் பூஸ்லாம் என்பவர் ஜியாவுக்கு கருணை மனு அனுப்பினார். அதனை கேள்விப்பட்ட பூட்டோ மிகவும் கோபம் அடைந்தார். சாகும் வரை அவர் தனது உறுதியில் இருந்து மாறவில்லை. தூக்கு மேடை ஏற அவர் அஞ்சவில்லை.
பூட்டோவுக்கு 2 மனைவிகள். முதல் மனைவி பெயர் அமீர் பேகம். 2_வது மனைவி பெயர் நசரத் இக்பாகனி. ஈரான் நாட்டைச் சேர்ந்தவர். பூட்டோவுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் இருந்தனர். மகன்கள் லண்டனில் தங்கி படித்து வந்தனர்.
பூட்டோ சிறையில் அடைக்கப்பட்டதும் மனைவி நசரத்தும், மகள் பெனாசிரும் தீவிர அரசியலில் ஈடுபட்டார்கள். இதனால் இந்த 2 பேரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
தூக்கில் போடப்படுவதற்கு முன்தினம் பூட்டோவை கடைசி முறையாக வந்து பார்க்குமாறு பூட்டோவின் மனைவி நசரத், மகள் பெனாசிர் ஆகியோருக்கு பாகிஸ்தான் அரசாங்கம் கடிதம் அனுப்பியது.
அதன்படி அவர்கள் 3_4_1979 அன்று சந்தித்தனர். இதற்காக இருவரும் போலீஸ் வேன் மூலம் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வழக்கமாக பூட்டோவை சந்திக்க 1 மணி நேரம் தான் கொடுக்கப்படும்.
ஆனால் இது கடைசி சந்திப்பு என்பதால் 3 மணி நேரம் ஒதுக்கப்பட்டது. பூட்டோவுடன் நசரத்தும், பெனாசிரும் 3 மணி நேரம் தங்கி இருந்தனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த இருவரையும் சந்திப்பதற்கு யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. போலீஸ் வேனுக்குள் இருந்த நசரத், பெனாசிர் இருவரும் கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருந்தனர். பூட்டோவை பார்க்கச்சென்ற குடும்பத்தினர் கதறி அழுதபோது, "எனக்காக யாரும் வருத்தப்படவேண்டாம். தூக்கு மேடை ஏற நான் பயப்படவில்லை" என்று பூட்டோ கூறினார்.
பூட்டோவுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டதுமே அவர் உயிரைக் காப்பாற்ற உலக நாடுகள் பலவற்றின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அவர்கள் அனுப்பிய கடிதங்களை அதிபர் ஜியா பார்க்கவே இல்லை. பாகிஸ்தானின் வெளிநாட்டு இலாகா அலுவலகத்திலேயே அந்த கடிதங்கள் வைக்கப்பட்டு இருந்தன.
பூட்டோவுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதில் ஜியா குறியாக இருந்தார். பூட்டோ தூக்கிலிடப்படுவது உறுதி செய்யப்பட்டபின், செவ்வாய்க்கிழமை இரவும் சில வெளிநாட்டு தலைவர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.
ரஷியா, சுவீடன், சீனா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாட்டுத் தலைவர்கள் கடைசி நிமிடத்தில் தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்த அவசர செய்திகளை அனுப்பி வைத்தனர். பிரான்சு ஜனாதிபதி அவசர தந்தி அனுப்பினார். ஆனால் அவைகள் எல்லாவற்றையுமே அதிபர் ஜியா அடியோடு புறக்கணித்துவிட்டு பூட்டோவை தூக்கில் போட்டார்.
தூக்கில் போடப்பட்டபோது பூட்டோவுக்கு 51 வயது தான். பூட்டோவை தூக்கில் போடப்பட்ட செய்தியையும் பாகிஸ்தான் உடனடியாக அறிவிக்கவில்லை. உடலை அடக்கம் செய்தபின்பு 30 நிமிடம் கழித்து பகல் 11_30 மணிக்கே ரேடியோ மூலம் அறிவித்தது.
பொதுவாக, சூரியன் உதிக்கும் நேரத்தில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுவது வழக்கம். ஆனால் பூட்டோவை இரவோடு இரவாக தூக்கில் போட்டு உடலை விடிவதற்கு முன்பே சொந்த ஊருக்கு கொண்டுபோய் விட்டனர். உடல் கொண்டுபோகப்பட்ட விமானத்தில் ராணுவத்தின் காவல் பலமாக இருந்தது.
தூக்கில் போடப்படுவதற்கு முன்னால் பூட்டோ குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டார். கடந்த சில வாரங்களாக அவர் சவரம் செய்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அதனால் தாடி வளர்ந்து இருந்தது. சவரம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயிலில் கையெழுத்து போடும்படி அதிகாரிகள் கூறினார்கள். அதன்படி அவர் கையெழுத்துப் போட்டார்.
பிறகு, பூட்டோவின் கைகளை பின்புறமாக கட்டினார்கள். அதன் பின் பூட்டோ தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறை அதிகாரிகள், ஒரு ராணுவ அதிகாரி, ஒரு மாஜிஸ்திரேட்டு ஆகியோர் உடன் சென்றனர். இந்திய நேரப்படி அதிகாலை 2_30 மணிக்கு பூட்டோ தூக்கில் போடப்பட்டார்.
பூட்டோவை தூக்கில் போட்டவரின் பெயர் _ தாரா மஷியா. இவர் பாகிஸ்தானில் வசிக்கும் கிறிஸ்தவர். தூக்குப்போடுவதையே பரம்பரை தொழிலாக செய்து வந்தவர். அவருக்கு கூலியாக 25 ரூபாய் கொடுக்கப்பட்டது.
அதிகாலை 4 மணிக்கு ஒரு ராணுவ லாரி சிறைச்சாலைக்குள் சென்றது. உடனடியாக பூட்டோ உடலை ஏற்றிக்கொண்டு விமான நிலையத்துக்கு சென்றது. பூட்டோ உடல், சிந்து மாநிலத்தில் உள்ள சுக்கூர் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து தனி விமானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட இருந்த இடத்துக்கு கொண்டு போகப்பட்டது.
பூட்டோ உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம், சிந்து நதிக்கரையில் உள்ளது. பூட்டோவின் தந்தை ஷாநவாஸ் உடல் இங்கு தான் அடக்கம் செய்யப்பட்டது. அதற்கு பக்கத்திலேயே பூட்டோவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
உடல் அடக்கம் நடந்த இடத்துக்கு முதல் மனைவி அமீர் பேகம் வந்திருந்தார். அவர் முஸ்லிம் சம்பிரதாயப்படி முகம் முழுவதையும் மூடி `பர்தா' அணிந்திருந்தார். உடல் அடக்கம் முடிந்ததும் உறவினர்கள் பிரார்த்தனை செய்தார்கள். பூட்டோவை தூக்கில் போட்டதற்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இங்கிலாந்து பிரதமர் கல்லகன் இதுபற்றி கூறியதாவது:-
"பூட்டோவை தூக்கில் போட்டது குறித்து மிகவும் வருத்தப்படுகிறேன். பூட்டோவுக்கு மன்னிப்பு வழங்கும்படி 3 முறை வேண்டுகோள் விடுத்தேன். அதை அலட்சியம் செய்துவிட்டனர்."
இவ்வாறு கல்லகன் கூறினார்.
இந்திரா காந்தி கூறியதாவது:-
"இந்த செய்தி எனக்கு அதிர்ச்சியை தருகிறது. பூட்டோவை கொல்ல வேண்டாம் என்று உலக தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். அதை ஜியா மதிக்காமல் நடந்து கொண்டார். பூட்டோவை தீர்த்துக்கட்டும் இந்த முடிவுக்கு சில வெளிநாட்டு சக்திகளும் காரணமாகும்.
பூட்டோவின் மனைவி நசரத்துக்கும், மகள் பெனாசிருக்கும் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1972_ல் சிம்லாவில் பெனாசிர் என்னை சந்தித்து உரையாடியதை நினைத்து கண் கலங்குகிறேன். பாகிஸ்தான் மக்களுக்கும் என் துயரத்தை தெரிவித்துக்கொள்கிறேன்."
இவ்வாறு இந்திரா காந்தி கூறியிருந்தார்.
ஆனால் மலேசிய முன்னாள் பிரதமரான துங்கு அப்துல் ரகுமான், ஜியாவுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார். "அரசியல் குற்றத்துக்காக தண்டிக்கப்பட்ட முதல் முன்னாள் பிரதமர் பூட்டோ. தேசத்துக்கு தலைமை பொறுப்பு ஏற்பவர்களுக்கு இது ஒரு பாடம்" என்று அவர் தெரிவித்து இருந்தார்.
பூட்டோ சிறையில் இருந்தபோது தன் வாழ்க்கை குறிப்பை எழுதினார். அது பூட்டோவின் மரண சாசனம் போல் அமைந்துள்ளது. அதில் பூட்டோ கூறியிருந்ததாவது:-
"என் எதிரியை கொலை செய்ய உத்தரவிட்டதாக என் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இது அபாண்டமான குற்றச்சாட்டு. சிறையில் வாடி வதங்கி தூக்கு மேடையை சந்திப்பதற்காக நான் பிறந்தவன் அல்ல. ஆயினும் ஒரு நன்றி கெட்ட துரோகியினால் (ஜியா) நான் இன்று தூக்கு மேடையை சந்திக்க இருக்கிறேன்.
நான் அரசியல்வாதி என்பதைத்தவிர, கவிஞன், புரட்சிக்காரன். இப்படியே இவ்வளவு நாட்களும் வாழ்ந்தேன். இனி என் உடலில் இருந்து கடைசி மூச்சு பிரியும்வரை அப்படியே வாழ்வேன்."
இவ்வாறு பூட்டோ குறிப்பிட்டு இருந்தார்.
ராவல்பிண்டியில் பூட்டோ ஆத்மா சாந்தியடைய ஒரு பெரிய பிரார்த்தனைக்கூட்டம் நடந்தது. "லியாகத்பாக்" பூந்தோட்டத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கூடியிருந்தனர். குறிப்பாக பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டத்தை கலைக்க போலீசார் முயன்றபோது, அவர்கள் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. அந்த வழியாகப் போன 3 பஸ்கள் உடைத்து நொறுக்கப்பட்டன.
பூட்டோ தூக்கிலிடப்பட்ட ராவல்பிண்டி சிறைச்சாலை அருகேயும் பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆண்களும், பெண்களும் மாரடித்து அழுதபடி சிறைச்சாலையை நோக்கி சென்றனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பஸ்களையும், லாரிகளையும் தீ வைத்துக் கொளுத்தினார்கள். 6 பஸ்கள் அடியோடு எரிந்து சாம்பலாயின. பாகிஸ்தானின் முக்கிய நகரமான கராச்சியிலும் கலவரம் நடந்தது. கராச்சி நகர எல்லையில் உள்ள "இப்ராகிம் ஹைதிர்" என்ற இடத்தில் பூட்டோ ஆதரவாளர்கள் கூடினார்கள்.
தூக்கிலிடப்பட்ட பூட்டோவுக்காக தொழுகை நடத்தி இறைவனைப் பிரார்த்தனை செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் பாகிஸ்தான் அதிபர் ஜியா_வுல்_ஹக்குக்கு எதிராகவும், ராணுவ அரசாங்கத்துக்கு எதிராகவும் குரல் எழுப்பிக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். போலீஸ் நிலையத்தை தீ வைத்து கொளுத்தினார்கள்.
பூட்டோ தூக்கிலிடப்பட்டபோது நடந்த சம்பவங்கள் பற்றி பாகிஸ்தான் பத்திரிகைகள் பலவித தகவல்களை வெளியிட்டன. அதில் ஒரு தகவல் வருமாறு:-
பூட்டோ தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டவுடன் மஷியா அவரது இரு கால்களையும் கட்டி கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டினான். பூட்டோ கடைசியாகப் பேசினார். "இறைவா! எனக்கு உதவி செய்! நான் நிரபராதி!"
பூட்டோ கடைசியாக இந்த வார்த்தைகளை உச்சரித்தவுடன் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு "சிக்னல்" கொடுக்கப்பட்டது. உடனே பூட்டோவின் காலடியில் இருந்த பகுதி விலகி கீழே சென்றது. அவர் பிணமாக தொங்கினார்.
மொத்தம் 35 நிமிட நேரம் அவர் தூக்கில் தொங்க விடப்பட்டதாக அந்த பத்திரிகை கூறியது.

புதன், 18 நவம்பர், 2009

வரலாற்று சம்பவம்: ராஜீவ் காந்தியின் மரணம்


கடந்த 20_ம் நூற்றாண்டில் உலக நாடுகளில் எத்தனையோ அரசியல் படுகொலைகள் நடந்துள்ளன. இந்தியாவில் தேசத்தந்தை காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரதமர் இந்திரா காந்தியை அவருடைய மெய்க்காவலர்களே சுட்டுக்கொன்றனர்.
ஆயினும் 47 வயதே நிறைந்தவரும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவருமான ராஜீவ் காந்தி தமிழ் மண்ணில் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடி குண்டாகவந்த ஒரு பெண்ணால் கொல்லப்பட்ட கொடிய சம்பவம் ரத்தத்தை உறையச் செய்வதாக இருந்தது.
பிரதமர் பதவியை 7_3_1991_ல் சந்திரசேகர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. ஜுன் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபை தேர்தலும் நடைபெறுவதாக இருந்தது. மே 21_ந்தேதி தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய ராஜீவ் திட்டமிட்டார்.
21_ந்தேதி பகலில் அவர் ஆந்திராவில் பல தேர்தல் கூட்டங்களில் பேசிவிட்டு மாலை 6.30 மணிக்கு தனி விமானத்தில் சென்னைக்குப் புறப்படுவதாக இருந்தார். ஆனால் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் மறுநாள் காலை சென்னை போகலாம் என்று எண்ணினார். விருந்தினர் மாளிகைக்கு சென்று கொண்டிருந்தபோது "விமானம் சரியாகி விட்டது சென்னைக்குப் புறப்படலாம்" என்று தகவல் வந்தது. எனவே காரை விமான நிலையத்துக்குத் திருப்பச் சொன்னார்.
விமானம் 7 மணிக்குப் புறப்பட்டது. அதில் இரவு 8.26 மணிக்கு ராஜீவ் காந்தி சென்னை வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தேர்தல் பற்றி கேட்டதற்கு "மத்தியில் முழு மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்" என்று பதிலளித்தார். பிறகு சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்குக் காரில் சென்றார். அங்கு இ.காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு 10.10 மணிக்கு அவர் ஸ்ரீபெரும்புதூர் போய்ச்சேர்ந்தார்.
பொதுக்கூட்டம் நடக்கும் இடத்துக்கு அருகே இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். பிறகு மேடையை நோக்கிச் செல்லும்போது வழியில் கூடியிருந்தவர்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார். வரவேற்க நின்று கொண்டிருந்தவர்களில் அரக்கோணத்தை சேர்ந்த லதா கண்ணன் (வயது 35) என்ற காங்கிரஸ் ஊழியரும் ஒருவர். அவருடன் அவர் வளர்ப்பு மகளான கோகிலா என்ற 15 வயதுச்சிறுமியும் வந்திருந்தாள். அவள் ராஜீவ் காந்தியைப் புகழ்ந்து இந்தியில் எழுதி வைத்திருந்த கவிதையைப் படித்தாள்.
அதை ராஜீவ் ரசித்துக் கேட்டார். இவர்களுடன் சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஒரு மர்மப்பெண் நின்று கொண்டிருந்தாள். சுடிதார் உடையில் இருந்த அவள் மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தாள். கையில் ஒரு சந்தன மாலை இருந்தது. கோகிலா கவிதை பாடி முடித்ததும் ராஜீவ் காந்தி அவள் முதுகில் அன்புடன் தட்டிக்கொடுத்தார். அவர் அங்கிருந்து நகரத் தொடங்கும்போது கையில் சந்தன மாலை வைத்திருந்த பெண் அவர் அருகே சென்றாள். மாலையை அவர் கழுத்தில் அணிவித்தாள்.
கண்மூடி திறப்பதற்குள் அவள் கை இடுப்பில் மறைவாக கட்டியிருந்த பெல்ட்டைத் தொட்டது. அவ்வளவுதான். பெல்ட்டுடன் கட்டியிருந்த குண்டுகள் வெடித்தன. ராஜீவ் காந்தியும், அவரைச் சூழ்ந்து நின்று கொண்டிருந்தவர்களும் உடல் சின்னாபின்னமாகச் சிதறி தரையில் வீழ்ந்தார்கள். குண்டு மிக சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் சத்தம் அதிகம் கேட்கவில்லை.
தவிரவும் மேடை அருகே காங்கிரசார் பட்டாசுகளைக் கொளுத்திக்கொண்டு இருந்தனர். எனவே அருகே இருந்தவர்கள் கூட குண்டு வெடித்ததை உடனடியாக உணர முடியவில்லை. புகை மண்டலமாக இருக்கிறதே என்று ஓடிச்சென்று பார்த்தபோது பலர் உடல் சிதைந்து பிணமாகக் கிடந்த பயங்கரக்காட்சியைக் கண்டு அலறினார்கள்.
இந்தக் கூட்டத்துக்காக வந்திருந்த காங்கிரஸ் தலைவர்கள் கருப்பையா மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோர் ஏதோ விபரீதம் நடந்து விட்டதை அறிந்து ஓடோடி வந்தனர். "ராஜீவ் எங்கே? ராஜீவ் எங்கே?" என்று கதறினார் மூப்பனார். ராஜீவ் காந்தி தலைகுப்புற கிடந்தார். அவர் தலையின் பின்புறம், காலில் அணிந்திருந்த பூட்ஸ் ஆகியவற்றைக் கொண்டு, அவர் ராஜீவ் காந்தி என்று அடையாளம் கண்டு கொண்ட ஜெயந்தி நடராஜன் எம்.பி., தாங்க முடியாத அதிர்ச்சியும், துயரமும் அடைந்து கதறினார். இதற்குள் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் அந்த இடத்திற்கு ஓடிவந்தனர். ராஜீவ் உடலைப்பார்த்து அலறித்துடித்தனர்.

செவ்வாய், 10 நவம்பர், 2009

ஹிட்லரின் வாழ்வும் மரணமும் ?


1945 ஏப்ரல் 30-ந்தேதி இரவு 9 மணி. "இன்று மாலை 4 மணிக்கு இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியும், அவர் மனைவியும் எதிர்ப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்" என்று சுவீடன் நாட்டு ரேடியோ அறிவித்தது. ரேடியோச் செய்தியை ஹிட்லர் நேரடியாகக் கேட்டார். காதலியுடன் முசோலினியின் முடிவு, ஹிட்லருக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கியது. அன்றிரவு 12 மணி, பெர்லின் நகரம் முற்றிலுமாக ரஷியப்படைகள் வசமாகிவிட்டது என்றும், எந்த நேரத்திலும், சுரங்க மாளிகை தகர்க்கப்படலாம் என்றும், ஹிட்லருக்குத் தகவல் கிடைத்தது. ஹிட்லரின் முகம் இருண்டது. மவுனமாக எழுந்து, தன் தோழர்களுடன் கை குலுக்கினார்.
1945-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி பெர்லின் நகரை ரஷியப் படைகள் சூழ்ந்து கொண்டு விட்டன. விமானங்கள் குண்டு மாரிப்பொழிந்து கொண்டு இருந்தன. எந்த நேரத்திலும் ரஷியப் படைகள், பெர்லின் நகருக்குள் புகுந்து விடலாம் என்கிற நிலை. எதிரிகளிடம் யுத்தக் கைதியாகப் பிடிபட்டால் தன் நிலை என்னவாகும் என்பதை உணர்ந்தார் ஹிட்லர். எதிரிகளிடம் சிக்குவதற்குள் தற்கொலை செய்து கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். தன் முடிவைக் காதலி ஈவாபிரவுனிடம் தெரிவித்தார். ஹிட்லரின் முடிவைக் கேட்டு, ஈவாபிரவுன் திடுக்கிடவில்லை. "வாழ்விலும் உங்களுடன் இருந்தேன். சாவிலும் உங்களுடன்தான் இருப்பேன். உங்களுடன் நானும் தற்கொலை செய்து கொள்வேன்" என்றாள்.
பிறகு தன் அந்தரங்க உதவியாளரை அழைத்து, "நானும் ஈவாவும் ஒன்றாக இறந்துவிடப்போகிறோம். நாங்கள் இறந்தபின், எங்கள் உடல்களை ஒரு போர்வையில் சுருட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்துச் சாம்பலாக்கி விடுங்கள். எங்கள் அறையில் உள்ள கடிதங்கள், டைரிகள், என் உடைகள், என் பேனா, கண்ணாடி முதலிய பொருள்களை சேகரித்து, ஒன்று விடாமல் எரித்துவிடுங்கள்" என்று கூறிவிட்டு, மனைவியையும் அழைத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றார். அறைக்கதவு சாத்தப்பட்டது. வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. ஹிட்லரும் ஈவாவும் என்ன ஆனார்கள் என்று வெளியே இருந்தவர்களுக்குத் தெரியவில்லை. வெளியே நீண்ட நேரம் காத்திருந்த மந்திரிகளும், தளபதிகளும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றனர். அங்கே அவர்கள் கண்ட காட்சி: ஒரு சோபாவில், உட்கார்ந்த நிலையில் ஹிட்லரின் உயிரற்ற உடல். அவர் காலடியில் ஒரு துப்பாக்கி கிடந்தது. அதன் நுனியிலிருந்து புகை வந்து கொண்டிருந்ததால், அவர் சற்று நேரத்துக்கு முன்தான் தன்னைச் சுட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று அனுமானிக்க முடிந்தது. அவருடைய வலது காதுக்கு கீழ் அரை அங்குல அளவுக்கு துவாரம் விழுந்து, அதிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.
ஹிட்லர், துப்பாக்கி முனையை வாய்க்குள் வைத்து சுட்டதால்தான், குண்டு காதுக்கு அருகே துளைத்துக் கொண்டு சென்றிருக்கவேண்டும் என்று தளபதிகள் கருதினார்கள். ஹிட்லரின் வலது கரம் ஒரு புகைப்படத்தை மார்போடு அணைத்தபடி இருந்தது. அந்தப்படம், ஹிட்லரின் தாயாரின் புகைப்படம். தாயின் மீது ஹிட்லர் கொண்டிருந்த பாசத்தை எண்ணி அவர் நண்பர்கள் கண்ணீர் சிந்தினர். ஹிட்லர் உடல் இருந்த சோபாவில் சாய்ந்தபடி பிணமாகியிருந்தாள் அவருடைய மனைவி ஈவா. வெள்ளைப் புள்ளிகளோடு கூடிய கருநீல "மாக்சி" உடை அணிந்திருந்தாள். அவள் உடல் நீலம் பாய்ந்திருந்தது. எனவே அவள் சயனைடு விஷம் சாப்பிட்டிருக்க வேண்டும் என்பது புலனாகியது.
ரஷ்யாவின் பீரங்கி தாக்குதலால் பொடிபொடியான ஹிட்லரின் பாதாள மாளிகை ஹிட்லர் உடலையும், ஈவா உடலையும் உதவியாளர்கள் ஒரு கம்பளிப்போர்வையில் சுற்றினார்கள். பிறகு அந்த உடல்களை அந்த அறையிலிருந்து தலைமைச் செயலகத் தோட்டத்திற்கு தூக்கிக் கொண்டு போனார்கள். அங்கே, பெட்ரோலையும், எரிவாயுவையும் கொண்டு இரு உடல்களையும் எரித்துச் சாம்பலாக்கினார்கள். சில மணி நேரம் கழித்து அங்கு வந்த ரஷியப்படையினர் ஹிட்லரைக் காணாமல் திகைத்துப் போனார்கள். அவர் தற்கொலை செய்து கொண்டதும், பிணம் எரிக்கப்பட்டதும் பிறகுதான் தெரிந்தது. எனினும் ஹிட்லர் சாகவில்லை, தலைமறைவாக இருக்கிறார் என்று நீண்ட காலம் நம்பியவர்கள் ஏராளம்!
ஹிட்லர் ஈவு இரக்கமற்ற கொடியவராக இருந்தாலும், ஆச்சரியப்படத்தக்க வகையில் சில நல்ல குணங்களும் இருந்தன. ஹிட்லர், குழந்தைகளிடமும், பிராணிகளிடமும் அன்பு கொண்டவர். மது அருந்த மாட்டார். புகை பிடிக்க மாட்டார். சைவ உணவே சாப்பிடுவார்.
உலகப் போரின்போது, ஹிட்லரின் பிரசார பீரங்கியாகச் செயல்பட்டவர், கோயபல்ஸ். 1897-ல் பிறந்த கோயபல்ஸ், 8 பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பயின்றவர். தத்துவத்தில் "டாக்டர்" பட்டம் பெற்றவர். சிறந்த பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் மிக்கவர். 1929-ல் இவர் ஹிட்லர் மந்திரி சபையில் பிரசார மந்திரியானார். உலகப்போரின்போது, புதுப்புது உத்திகளைக் கையாண்டு, ஹிட்லரின் பெயர் உலகம் முழுவதும் பரவச் செய்தார். (போரில் ஹிட்லர் தோல்வியைச் சந்தித்தபோதும், அவர் வெற்றி பெற்று வருவதாக பிரசாரம் செய்தார். இதன் காரணமாக பொய் பேசுபவர்களை "கோயபல்ஸ்" என்று வர்ணிக்கும் வழக்கம் வந்தது.) ஹிட்லர் மீது இவர் கொண்டிருந்த பக்திக்கு அளவே இல்லை. ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதற்கு மறுநாள், கோயபல்ஸ் தன் மனைவியுடனும், 6 குழந்தைகளுடனும் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார். குழந்தைகள் 2 முதல் 12 வயது வரை உள்ளவர்கள்.

சனி, 7 நவம்பர், 2009

தமிழக காவல்துறையை கலங்கடித்த பெண் ஏட்டுகளின் மரணங்கள்

தமிழக காவல் துறைக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. இந்தியாவிலேயே அதிக போலீசாரை கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு 5-வது இடத்தில் உள்ளது. 98 ஆயிரத்து 858 போலீசாரும் 73,410 சிறப்பு காவல்படை போலீசாரும் உள்ளனர். 632 மக்களுக்கு 1 போலீஸ் என்ற நிலை உள்ளது.
அதே போன்று இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக பெண் போலீசாரும் உள்ளனர். முதல் முதலாக மகளிர் போலீஸ் நிலையமும் தமிழ்நாட்டில்தான் ஏற்படுத்தப்பட்டது.
இப்படி புகழ்பெற்ற தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கை காப்பதிலும் சிறப்பாகவே செயல்படுகிறது. அதனால் தான் 2002ல் 26,696 ஆக இருந்த குற்றங்களின் எண்ணிக்கை 2008ல் 19ஆயிரத்து 410 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
திருடர்களையும், ரவுடிகளையும் ஒடுக்கி குற்றங்களை தடுக்கும் விஷயத்தில் சட்டை காலரை தூக்கி விட்டு கொண்ட தமிழக காவல்துறைக்கு சமீபத்தில் ஏற்பட்ட 2 பெண் ஏட்டுக்களின் துர் மரணங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. பெண் ஏட்டுக்களான திருப்பூர் ஜெயமணி, காயத்திரி மாலாவுக்கு ஏற்பட்ட முடிவுதான் இதற்கு காரணம்.
அப்பாவி ஏட்டு ஜெயமணிக்கு ஒரு கொடூரகாமுகனால் துர்மரணம் ஏற்பட்ட தென்றால் சிறைகாவலரான ஏட்டு காயத்ரி மாலாவுக்கு அவரது கள்ளக்காதலனால் துர் மரணம் ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றிய ஜெயமணி, கடந்த செப்டம்பர் மாதம் பணி விஷயமாக பெருமாநல்லூர் என்ற இடத்தில் பாதுகாப்பு பணி முடிந்து வீட்டிற்கு செல்ல முயன்றார்.
இரவில் ஆண் நடமாட்டம் இல்லாத ரோட்டில் தனியாக வந்த ஏட்டு ஜெயமணியைலிப்ட்கொடுப்பது போல நடித்து ஆத்தூரை சேர்ந்த வேன் சங்கர் என்பவர் காட்டுக்குள் கடத்திச் சென்று கற்பழித்தார். பிறகு கத்தியால் குத்தி கொன்றான்.
பெண் போலீசார் இந்த அதிர்ச்சியில் இருந்து மிள்வதற்குள் சேலம் மத்திய சிறையில் ஏட்டாக பணியாற்றிய கோவையை சேர்ந்த காயத்ரி மாலா, சங்ககிரி அருகே ஒரு காட்டுப்பகுதியில் தலையில் கல்லை போட்டு கொல்லப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
போலீஸ் விசாரணையில் சிறையில் காவல் பணியில் இருந்த காயத்ரி மாலாவுக்கும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த சங்ககிரி சரவணனுக்கும் சிறைக்கு உள்ளேயே கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது. முதல் திருமணம் தோல்வியில் முடிந்து 2-வது திருமணமும் செய்த ஏட்டு காயத்ரி மாலா ஆயுள் தண்டனை கைதி சரவணனை கள்ளக்காதலனாக தேர்வு செய்து உள்ளார்.
சிறையைவிட்டு பரோலில் வெளியான சரவணன் தலைமறைவாக சுற்றி உள்ளார். தன்னை வாரம் 1 முறை சந்தித்து உல்லாசமாக இருக்காவிட்டால் போலீசில் பிடித்து கொடுத்து விடுவேன் என மிரட்டியதால காயத்ரி மாலாவை சரவணன் தலையில் கல்லை போட்டு கொன்றது தெரிய வந்தது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயம் நடத்திய தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட ஏட்டு ஜெயமணி பாதையில் லிப்டுக்கு தவறான ஆளை தேர்வு செய்ததும் சிறைக்காவலிலும் ஏற்பட்டு காயத்ரிமாலா வாழ்க்கையில் தவறான பாதையை தேர்வு செய்ததாலும் துர் மரணத்தை சந்தித்து உள்ளனர்.
இவர்களை கொன்ற ஆத்தூர் சங்கரும் சங்ககரி சரவணனும் தற்போது சேலம் சிறையில்தான் உள்ளனர். இவர்களுக்கு சிறையில் உணவு, வழங்கி பாதுகாப்பதும் போலீசாரின் கடமையாகிப் போவதுதான் கொடுமை!
ஏட்டு ஜெயமணியும் காயத்ரி மாலாவும் மற்றவர்களுக்கு உணர்த்துவது2 விஷயங்கள் தான் என்றனர் திருச்சி போலீசார். காவலரே ஆனாலும்... பெண் போலீசை... தனியாக பாதுகாப்புக்கு அனுப்ப கூடாது!
காவலரே... ஆனாலும்... குற்றவாளியுடன் பழக்கம் கூடாது.

திங்கள், 14 செப்டம்பர், 2009

டாக்டர் ராஜசேகர ரெட்டி மரணம்- புகைப்படங்கள்

மறைந்த ஆந்திர பிரதேச முதல் அமைச்சர் டாக்டர் ராஜசேகர ரெட்டியின் மரணம்நிகழ்ந்த காட்டு பிரதேசம். தயவு செய்து இதயம் பலகீனமானவர்கள் பார்கவேண்டம்.

வியாழன், 3 செப்டம்பர், 2009

ஆந்திர முதலமைச்சர் மரணம்

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
செப்டம்பர் 03,2009,00:00 IST

ஐதராபாத் : ஆந்திர முதல்வர் சாலமன் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். முதல்வர் உட்பட ஐந்து பேர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மாயமான ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் 24 மணி நேரத்துக்குப் பிறகு கர்னூல் பகுதி மலையில் ‌இன்று காலையில் கண்டுபிடிக்கப்பட்டது.முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மரணத்தை பிரதமர் மந்திரியின் அலுவலகம் உறுதி செய்துள்ளது. முதல்வர் மரணம் குறித்து ம‌த்திய கேபினட் குழு கூடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறது. முதல்வர் மரண‌த்தை அடுத்து காங்., தலைவர் சோனியா ஆந்திரா விரைகிறார்.

ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணமடைந்துவிட்டார். நேற்று காலை 8.35 மணிக்கு ஐதராபாத்திலிருந்து சித்தூர் செல்லும் வழியில் கர்னூல் அருகே உள்ள மலைப் பகுதியில் அவர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இந்திய அரசியலில் மிகப்பெரிய தலைவராக உருவெடுத்து வரும் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1949 ஜூலை 8ல், புலிவெண்டுலு எனும் இடத்தில் ராஜா மற்றும் ஜெயம்மா தம்பதியினருக்கு மகனாக பிறந்த அவர், மருத்துவத்தில் பட்டம் பெற்றவர். அவர் பிறந்த கடப்பா மாவட்டத்தில் சில காலம் மருத்துவப் பணியில் ஈடுபட்டார். பின்னர் காங்கிரசில் சேர்ந்தார். கடப்பா லோக்சபா தொகுதியிலிருந்து அவர் நான்கு முறை தேர்வானார். புலிவெண்டுலு சட்டசபை தொகுதியிலிருந்து ஆறு முறை தேர்வாகியிருக்கிறார்.

1980-83ல் கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். கர்நாடாகவிலுள்ள துங்கபத்திரா நதியிலிருந்து, புலிவெண்டுலு கிளை கால்வாயில் தண்ணீர் பெற்றுத் தந்தது இவரை அரசியலில் மற்றவர்களை திரும்பிப் பார்க்க வைக்கும் சாதனையாக அமைந்தது.

1983-1985 மற்றும் 1998 - 2000 ஆகிய காலங்களில் ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தார். இவர் தலைவராக இருந்த காலத்தில் கட்சியை வலுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

2003ல், தெலுங்கு தேசம் சார்பில் முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து, சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த அவர் மூன்று மாதத்தில் 1,400 கி.மீ., தூரம் பாதயாத்திரை மேற்கொண்டார். இந்திய அரசியலில் இது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியானது.பிற்படுத்தப்பட்டவர்கள் வாழும் அதிகப்பகுதிகளுக்கு இந்த பாதயாத்திரையின் போது சென்றார். அதற்கடுத்த ஆண்டில் நடந்த தேர்தலில் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு இது காரணமாக அமைந்தது.

தேர்தலில் வெற்றி பெற்ற அவர், விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை அளித்தார். கிடப்பில் இருந்த 70 நீர்ப்பாசன வசதிகளை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டார். நெல் கொள்முதல் விலையை உயர்த்தினார். சிறு தொழில் நடத்துவோருக்கு சிறப்பு சலுகைகள், சுய உதவிக்குழுக்களுக்கு ஆதரவு, ஏழை எளியோருக்கு உதவிகள் உள்ளிட்ட நலத்திட்டங்களை அவர் வாரி வழங்கினார்.