காமன்வெல்த்போட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காமன்வெல்த்போட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 1 அக்டோபர், 2010

காமன் வெல்த் போட்டி : கோலாகல துவக்கம் !



காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்  டெல்லியில் நாளை மறுநாள் (03.10.2010) வண்ணமயமான  கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்குகிறது.

இதில் பங்கேற்க பல நாடுகளை சேர்ந்த 8 ஆயிரம் விளையாட்டு 
வீரர்கள் காமன்வெல்த் கிராமத்தில் குவிந்துள்ளனர். காமன்வெல்த் போட்டிக்கான சுடர் ஓட்டத்தை, இங்கிலாந்து ராணி எலிசபெத், கடந்த ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி தொடங்கி வைத்தார். இது 54 நாடுகள் மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் பயணம் செய்து நேற்று டெல்லி வந்தடைந்தது.

நகரில் முக்கிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, நாளை மறுநாள் டெல்லி ஜவஹர்லால் ஸ்டேடியத்தை வந்தடைகிறது.அதன்பின் காமன்வெல்த் ஜோதி ஏற்றப்படுகிறது. இதைத்தொடர்ந்து வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் போட்டிதொடங்குகிறது. இந்தியாவில் முதல்முறையாக காமன்வெல்த்போட்டி நடப்பதால் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


காமன்வெல்த் போட்டி, நாட்டின் கவுரவம். இதை தேசிய விழாவாக கொண்டாட வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது எல்லா பணிகளும் முடிந்து, விளையாட்டு போட்டிக்கு தயார் நிலையில் டெல்லி உள்ளது.

71 நாடுகள் போட்டிகளில் பங்கேற்கின்றன. அந்த நாடுகளைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் வீரர்கள் டெல்லி வந்து தங்கியுள்ளனர். போட்டி நடக்கும் இடங்கள், காமன்வெல்த் கிராமம் உள்பட டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் காமன்வெல்த் பாடல்கள்

    
காமன்வெல்த் போட்டிக்காக இசையமைத்த பாடல், இன்னும் 10 நாட்களில் வெளியிடப்படும். இது உலக கோப்பை கால்பந்து பாடலைவிட பிரபலமாகும்,'' என, இசையமைப்பாளர் ரஹ்மான் உறுதி தெரிவித்துள்ளார்.

டில்லியில் வரும் அக்டோபரில்(3-14) காமன்வெல்த் போட்டி நடக்க உள்ளது. இப்போட்டிக்கான மையநோக்கப் பாடலை, ஆஸ்கர் விருதுகள் வென்ற, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்பாடல் "பிரிவியூ' நிகழ்ச்சிக்கு மீடியா குழுவினர் நேற்று அழைக்கப்பட்டிருந்தனர். 
 
பாடலை இயக்கிய ஷியாம் பெனகல், தயாரிப்பாளர் பரத்பாலா, அமைச்சர் குழு தலைவர் ஜெய்ப்பால் ரெட்டி மற்றும் காமன்வெல்த் போட்டிகள் அமைப்புத் தலைவரான சுரேஷ் கல்மாடி ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஆனால் மையநோக்கப் பாடல் ஒலிபரப்பப்படவில்லை.  

இதுகுறித்து ரஹ்மான் கூறியது:
அறிமுக நிகழ்ச்சி பெரிய அளவில் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது வெளியிடப்படும் பாடல் இந்தியர்களின் மனதில் இடம்பெறும். இந்த பாடல் நிச்சயம் இந்தியர்களை பெருமை கொள்ளச் செய்யும். கொஞ்சம் பொறுமையாக இருந்தால் எல்லாம் சாதகமாகவே நடக்கும்.
காமன்வெல்த் பாடலுக்கான பணியில் நான் கடந்த ஆறுமாதமாக ஈடுபட்டுள்ளேன். இதற்காக என்னுடைய மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்திருந்தேன். இதிலிருந்தே இந்நிகழ்ச்சியை எந்தளவுக்கு தீவிரமாக எடுத்துக்கொண்டேன் என உங்களுக்குத் தெரியும்.