விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஜூலை, 2010

பாரத ரத்னா விருது : ஒரு சிறப்பு பார்வை


 

       பாரத ரத்னா இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். கலை, அறிவியல், இலக்கியம் மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளில் மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. 

இவ்விருது பெற்றவர்களுக்கு சிறப்பு பட்டப்பெயர்கள் எதுவும் வழங்கப்படுவது இல்லையெனினும் இந்தியாவின் மரியாதைக்குரியோர் பட்டியலில் அவர்களுக்கு இடம் உண்டு. பாரத ரத்னா என்பது இந்தியாவின் ரத்தினம் எனப் பொருள் தரும்.

       இவ்விருதுக்கான முதல் வரையறையில் 35 மி.மீ விட்டமுடைய வட்ட வடிவான தங்கப்பதக்கத்தில் சூரியச் சின்னமும் பாரத ரத்னா என்று இந்தியில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் அதன் கீழ் மலர் வளைய அலங்காரமும் இருக்க வேண்டும் என்றும் பதக்கத்தின் பின் பக்கத்தில் அரசு முத்திரையும் தேசிய வாசகமும் (motto) இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படுள்ளது.

       இப்பதக்கத்தை வெள்ளை ரிப்பனில் இணைத்து கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இப்படி ஒரு வடிவமைப்பில் பதக்கம் எதுவும் தயாரிக்கப்பட்டதாக தெரியவில்லை. அதற்கடுத்த ஆண்டு பதக்கத்தின் வடிவமைப்பு மாற்றப்பட்டது. தற்போது பாரத ரத்னா பதக்கத்தில் அரச மர இலையில் சூரியனின் உருவமும் "பாரத ரத்னா" என்ற சொல் தேவநாகரி எழுத்துக்களிலும் பொறிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 23 நவம்பர், 2009

ஆக்ஸ்போர்ட் : தமிழருக்கு பெருமை


ஐரோப்பாவின் ஆக்ஸ்போர்டில் உள்ள தமிழ் மற்றும் நுண்கலைகளுக்கான மையம், தமிழகத்தின் புதுக்கோட்டையில் ஞானாயலா நூலகத்தை நிறுவி, நடத்தி வரும் பா.கிருஷ்ணமூர்த்திக்கு மிக உயரிய விருதான ஆன்றவிந்த சான்றோர் விருதினை அளித்து கவுரவித்துள்ளது. மையத்தின் நிறுவனரும், மூத்த தமிழாசிரியையும், ஊடகவியலாளருமான ரீட்டா பற்றிமாகரனின் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.

முதுகலைப்பட்டதாரியும், மேல்நிலைப்பள்ளியின் தலையாசிரியருமான பா.கிருஷ்ணமூர்த்தியும், அவரது மனைவியும் தாவரவியல் பேராசிரியையுமான ‌டோரதி கிருஷ்ணமூர்த்தியும் கடந்த 50 ஆண்டுகளாக நூலகப்பணியில் தம்மை அர்ப்பணித்து, அரிய தமிழ் நூல்கள் பலவற்றைத் தம் சொந்த பணத்தில் வாங்கி, பாதுகாத்து, ஞானலயா என்னும் நூலகத்தை உலகில் தமிழ் வளர்வதற்காக நடத்தி வருகின்றனர். இந்த தமிழ்ப்பணிக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த ஆன்றவிந்த சான்றோர் விருது வழங்கப்பட்டது. இவ்விருதினை ஐரோப்பாவில் புகழ்பெற்ற ஆய்வாளரும், பத்திரிகையாளரும், ஆசிரியருமான சூ.யோ.பற்றிமாகரன் அறிவிக்க, ஆக்ஸ்போர்டில் வாழும் மேல்நிலைப்பள்ளி தலையாசிரியரான ராமலிங்க தேவர் வழங்கியதுடன் பொன்னாடை‌ போர்த்தியும் கிருஷ்ணமூர்த்தியை கவுரவித்தார். இந்தியாவில் பல விருதுகளையும், மலேசியாவில் நூலக நுண்ணறிவாளர் விருதையும் பெற்ற பா.கிருஷணமூர்த்திக்கு, ஐரோப்பிய விருதாக ஆக்ஸ்போர்டில் வழங்கப்பட்ட ஆன்றவிந்த சான்றோர் விருது அமைந்தது. வாரியார் மீது பெருமதிப்புள்ள கிருஷ்ணமூர்த்தி, வாரியாரின் பெருமைகள் குறித்து விரிவுரை ஒன்றையும் நிகழ்த்தினார். ஆக்ஸ்போர்டு வாழ் தமிழ் விஞ்ஞானிகள், டாக்டர்கள், பெரியோர்கள், வர்த்தகர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

ஞாயிறு, 15 நவம்பர், 2009

வரலாற்று சம்பவம்:நடிகர் திலகத்துக்கு எகிப்து நாட்டின் விருது.


ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில், சிறந்த நடிகருக்கான விருது சிவாஜிகணேசனுக்கு வழங்கப்பட்டது. "வீரபாண்டிய கட்டபொம்மன்" _ இது, தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத படம். ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு தூக்கிலிடப்பட்டு வீர மரணம் அடைந்த பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மனைப் பற்றிய திரைக்காவியம்.
இந்த படத்தில் கட்டபொம்மன் வேடம் ஏற்று சிவாஜி கணேசன் நடித்தார். ஆங்கிலேய அதிகாரி ஜாக்சன் துரையை எதிர்த்து பேசும் அனல் தெரிக்கும் வசனங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. அன்றைய காலகட்டத்தில் "உலக நாட்டியப் பேரொளி" என்று வர்ணிக்கப்பட்ட நடிகை பத்மினி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை பிரபல டைரக்டரான பி.ஆர்.பந்துலு தயாரித்தார்.
1960_ம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் ஆசிய _ ஆப்பிரிக்க நாடுகளின் சினிமாப்பட விழா எகிப்து நாட்டில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள "வீரபாண்டிய கட்டபொம்மன்" சினிமா படத்தை மத்திய அரசு அனுப்பி வைத்தது. இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட ஒரே படம் இதுதான்.
இந்த படத்தில் நடித்த சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் சித்ரா கிருஷ்ணசாமி, படத்தை தயாரித்த பி.ஆர்.பந்துலு ஆகியோரை அனுப்பும்படி எகிப்து அரசாங்கம் கேட்டுக் கொண்டது. இதன்படி சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் கலைஞர்களை எகிப்து பட விழாவுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது.
விழாவில் கலந்து கொண்ட சினிமாப்படங்களுக்கு பரிசு கொடுக்கப்பட்டது. நடிகர் _ நடிகைகளுக்கும் பரிசு தரப்பட்டது. பரிசுக்கு உரிய படத்தையும், நடிகர்களையும் நீதிபதிகள் தேர்ந்து எடுத்தார்கள். "சிறந்த நடிகர்" என்று சிவாஜி கணேசன் தேர்ந்து எடுக்கப்பட்டார். அவருக்கு கழுகு படம் பொறிக்கப்பட்ட "தங்கக் கேடயம்" பரிசு கொடுக்கப்பட்டது. எகிப்து நாட்டின் கலைத்துறை துணை மந்திரி இந்தப்பரிசை வழங்கினார்.
சிறந்த நடிகையாக "லைலா மஜ்னு" என்ற படத்தில் நடித்த மெந்தா என்ற நடிகை தேர்ந்து எடுக்கப்பட்டார். சிறந்த ஆடல் _ பாடல் நிறைந்த படம் என்று "வீரபாண்டிய கட்டபொம்மன்" தேர்ந்து எடுக்கப்பட்டு, தனிப்பரிசு வழங்கப்பட்டது. "சிறந்த படம்" என்று "சாமர்க்கண்டு நாட்டு இளவரசன்" என்ற ரஷியப்படமும், சிறந்த செய்திப்படம் என்று "தாஜ்மகால்" என்ற படமும் தேர்ந்து எடுக்கப்பட்டன. அவற்றுக்கும் பரிசு தரப்பட்டது.
மத்திய அரசு தயாரித்த படம் "தாஜ்மகால்" என்பது குறிப்பிடத்தக்கது.
பரிசை பெற்றுக்கொண்ட பிறகு சிவாஜிகணேசன் எகிப்தில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு பம்பாய்க்கு வந்தார். அவருடன் பி.ஆர்.பந்துலுவும் வந்தார். அதன் பிறகு அங்கிருந்து தனி விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்கள்.
12_3_1960 அன்று இரவு சிவாஜி கணேசன் சென்னைக்கு வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் அவருக்கு கோலாகல வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஏராளமான நடிகர், நடிகைகள் மற்றும் பட அதிபர்கள் வந்திருந்து அவரை வரவேற்றார்கள்.
சிவாஜிகணேசனுக்கு ஏராளமானபேர் மாலைகள் அணிவித்தார்கள். திரை உலகத்தினர் எல்லோரும் பாராட்டினார்கள்.
ஆசிய ஆப்பிரிக்க பட விழா எகிப்தில் நடந்தபோது, அதிபர் நாசர் சிரியா சென்றிருந்ததால், அவர் அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. பிறகு நாசர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது, சென்னை வந்தார். அப்போது நாசருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில், சிவாஜிகணேசன் வரவேற்பு இதழ் வாசித்தளித்தார். ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில் பரிசு பெற்றதற்காக, சிவாஜிகணேசனுக்கு நாசர் பாராட்டு தெரிவித்தார்.

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

தமிழக அரசின் திரைப்பட விருது அறிவிப்பு

தமிழக அரசு விருது பட்டியல் : முழு விவரம்

தமிழக அரசு 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2007ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது, "சிவாஜி' படத்துக்காக ரஜினிகாந்துக்கும், 2008ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது, "தசாவதாரம்' படத்துக்காக கமல்ஹாசனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த வசனகர்த்தாவுக்கான விருது, முதல்வர் கருணாநிதிக்கு (உளியின் ஓசை) அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின், 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளுக்கு பரிந்துரைக்க, நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரை அப்படியே ஏற்கப்பட்டு, விருது பெறுவோர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன் விவரம்:கடந்த 2007ம் ஆண்டுக்கான சிறந்த படம் முதல் பரிசு - சிவாஜி,இரண்டாம் பரிசு - மொழி,மூன்றாம் பரிசு - பள்ளிக்கூடம்,சிறப்புப் பரிசு - பெரியார்,பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் - மிருகம்,குடும்ப நெறிகளை பிரதிபலிக்கிற படம் - தூவானம்சிறந்த நடிகர் - ரஜினிகாந்த் (சிவாஜி),சிறந்த நடிகை - ஜோதிகா (மொழி),சிறந்த நடிகர் சிறப்புப் பரிசு - சத்யராஜ் (பெரியார்),சிறந்த நடிகை சிறப்புப் பரிசு - பத்மபிரியா (மிருகம்),சிறந்த வில்லன் - சுமன் (சிவாஜி),சிறந்த நகைச்சுவை நடிகர் விவேக் (சிவாஜி),சிறந்த குணச்சித்திர நடிகர் - எம்.எஸ்.பாஸ்கர் (மொழி),சிறந்த குணச்சித்திர நடிகை - அர்ச்சனா (ஒன்பது ரூபாய் நோட்டு),சிறந்த இயக்குனர் தங்கர் பச்சான் (பள்ளிக்கூடம்)சிறந்த கதையாசிரியர் - வசந்த் (சத்தம் போடாதே),சிறந்த உரையாடல் ஆசிரியர் - பாலாஜி சக்திவேல்,சிறந்த இசையமைப்பாளர் - வித்யாசாகர் (மொழி),சிறந்த பாடலாசிரியர் - வைரமுத்து,சிறந்த பின்னணி பாடகர் - ஸ்ரீநிவாஸ்,சிறந்த பின்னணி பாடகி - சின்மயி,சிறந்த ஒளிப்பதிவாளர் - நீரவ்ஷா (பில்லா),சிறந்த ஒலிப்பதிவாளர் - அய்யப்பன் (பில்லா),சிறந்த எடிட்டர் - சதீஷ் குரோசோவாசிறந்த கலை இயக்குனர் - தோட்டா தரணி,சிறந்த சண்டை பயிற்சியாளர் - அனல் அரசு,சிறந்த நடன ஆசிரியர் - பிருந்தா,சிறந்த ஒப்பனைக் கலைஞர் - ராஜேந்திரன்,சிறந்த தையல் கலைஞர் - அனுவர்தன்,சிறந்த பின்னணி குரல் - கே.பி.சேகர், மகாலட்சுமி2008ம் ஆண்டுக்கான சிறந்த படம் - முதல் பரிசு தசாவதாரம்,இரண்டாம் பரிசு - அபியும் நானும்,மூன்றாம் பரிசு - சந்தோஷ் சுப்பிரமணியம்,சிறப்புப் பரிசு - மெய்ப்பொருள்,பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படம் - பூ,குடும்ப நெறிகளை பிரதிபலிக்கும் படம் முதல் பரிசு - வல்லமை தாராயோ,இரண்டாம் பரிசு - வண்ணத்துப்பூச்சி,சிறந்த நடிகர் - கமல்ஹாசன் (தசாவதாரம்),சிறந்த நடிகை - சினேகா (பிரிவோம் சந்திப்போம்),சிறப்புப் பரிசு - சூர்யா (வாரணம் ஆயிரம்),சிறந்த நடிகை சிறப்புப் பரிசு - த்ரிஷா (அபியும் நானும்),சிறந்த வில்லன் நடிகர் - ராஜேந்திரன் (நான் கடவுள்),சிறந்த நகைச்சுவை நடிகர் - வடிவேலு (காத்தவராயன்),சிறந்த நகைச்சுவை நடிகை - கோவை சரளா (உளியின் ஓசை),சிறந்த குணச்சித்திர நடிகர் - பிரகாஷ் ராஜ்,சிறந்த குணச்சித்திர நடிகை - பூஜா,சிறந்த இயக்குனர் - ராதா மோகன்,சிறந்த கதையாசிரியர் - தமிழ்ச்செல்வன்,சிறந்த உரையாடல் ஆசிரியர் - கருணாநிதி (உளியின் ஓசை),சிறந்த இசையமைப்பாளர் - இளையராஜா,சிறந்த பாடலாசிரியர் - வாலி,சிறந்த பின்னணி பாடகர் - பெள்ளிராஜ்,சிறந்த பின்னணி பாடகி - மஹதி,சிறந்த ஒளிப்பதிவாளர் - ஆர்தர் வில்சன்,சிறந்த ஒலிப்பதிவாளர் - ரவி,சிறந்த எடிட்டர் - பிரவீன் - ஸ்ரீகாந்த்,சிறந்த கலை இயக்குனர் - ராஜீவன்,சிறந்த சண்டை பயிற்சியாளர் - கனல் கண்ணன்,சிறந்த நடன ஆசிரியர் - சிவசங்கர்,சிறந்த ஒப்பனைக் கலைஞர் - மைக்கேல் வெஸ்ட்மோர், கோதண்டபாணி (தசாவதாரம்),சிறந்த தையல் கலைஞர் - ரவீந்திரன்,சிறந்த குழந்தை நட்சத்திரம் - ஸ்ரீலட்சுமி,சிறந்த பின்னணி குரல் கொடுப்போர் - பிரகாஷ், சவீதா.இதைதவிர, 2006ம் ஆண்டுக்கான திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகளில், சிறந்த இயக்குனர் அன்பு, ஒளிப்பதிவாளர் தினேஷ், ஒலிப்பதிவாளர் ராம்குமார், எடிட்டர் சசிகுமார், படம் பதனிடுபவர் முருகன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டுக்கான விருதுகளில், இயக்குனர் கண்ணன், ஒளிப்பதிவாளர் ஆனந்தகுமார், ஒலிப்பதிவாளர் லட்சுமி நாராயணன், எடிட்டர் மர்பி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
.