
ஆடை இல்லா மனிதன் அரை மனிதன் என்பது பழமொழி,
ஆனால் தற்போது சமூக வலை தளங்களைப்
பயன்படுத்தாதவன் மனிதனல்ல - புது மொழி என்பதுபோல
சமூகவலை தளங்கள் இன்றைய நாகரீக மக்களை பெரிதும்
ஆட்கொண்டுள்ளன.
அதற்கு ஒரு சான்றாக, பஞ்சாப் மாநிலம்
ஜலந்தரில் உள்ள குர்சிம்ரன் என்ற பெண் தான் டுவிட்டரில்
இணைந்ததோடு மட்டுமல்லாமல், பிறந்து 2 நாட்களே ஆன
ஹினாயத் என்று பெயர் சூட்டப்பட்ட தனது
பச்சிளங்குழந்தையையும் டுவிட்டரில் இணைத்துள்ளார்.
டுவிட்டர்அட்பேபிஹினாயத் என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள
இந்த டுவிட்டரில் அவரைப் பின்தொடர்பவர்களின்
எண்ணிக்கை வெகுவேகமாக அதிகரித்து வருகிறது.
இதுகுறி்தது குர்சிம்ரன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது :
தான் கர்ப்பமாக இருந்தபோது, என் டுவிட்டர் நண்பர்கள் எனக்காக
பிரார்த்தித்ததாகவும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும்
விதமாக, தங்களது பச்சிளங்குழந்தையையும் டுவிட்டரில்
இணைத்து, அவளது போட்டோக்களையும் டுவிட்டரில்
இணைத்ததாக அவர் அதில் தெரிவித்தார். தாங்கள், டுவிட்டரில்
பேபிஹினாயத் சேர்ந்த சில நிமிடங்களிலேயே, அவருக்கு
உலகின் பலபகுதிகளிலிருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம்
உள்ளதாகவும், அவர் மேலும் கூறுகையில், டுவிட்டரில்
செய்திகள் உடனுக்குடன் பரிமாறப்படுவதால், நட்புறவு எளிதில்
விரிவடைவதாகவும், தங்கள் குழந்தைக்கு ஹினாயத் என்ற
பெயர் கூட டுவிட்டரில் உள்ள நண்பர் கூறித்தான் வைத்தது
என்றும், இதன்மூலம், டுவிட்டரில் பிறந்து 2 நாட்களே ஆன என்
குழந்தைக்கும் டுவிட்டரில் அக்கவுண்ட் உள்ளது குறித்து
பெருமையடைவதாக குர்சிம்ரன் தெரிவித்துள்ளார்.
நன்றி :
தினமலர்