இங்கிலாந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இங்கிலாந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 டிசம்பர், 2009

வரலாறு : ராணி எலிசபெத் முடி சூட்டு விழா


கடந்த நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று, ராணி எலிசபெத் முடிசூட்டு விழா. ராணி எலிசபெத்தின் பெரியப்பாவான "எட்டாம் எட்வர்ட்", காதலுக்காக 1936 டிசம்பர் 10 ந்தேதி முடிதுறந்தார். அதைத்தொடர்ந்து எலிசபெத்தின் தந்தை ஆறாம் ஜார்ஜ் இங்கிலாந்து மன்னரானார். 1937 மே 12.ல் முடிசூட்டு விழா நடந்தது.
 
ஆறாம் ஜார்ஜ் மன்னர் காலத்தில்தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது. ஆறாம் ஜார்ஜ், புற்று நோயினால் பீடிக்கப்பட்டார். இதன் காரணமாக 1951 செப்டம்பரில் அவருக்கு ஆபரேஷன் நடந்தது. அவருடைய ஒரு நுரையீரல் அகற்றப்பட்டது. 1952 பிப்ரவரி 6ந்தேதி தனது 57-வது வயதில் மரணம் அடைந்தார்.
 
ஆறாம் ஜார்ஜ க்குப்பிறகு இங் கிலாந்து அரசியாக அவர் மகள் எலிசபெத் அறிவிக்கப்பட்டார். எலிசபெத்தின் இயற்பெயர் அலெக்சாண்ட்ரா மேரி. 1926 ஏப்ரல் 21.ந்தேதி லண்டனில் பிறந்தார். 1947 ல் அவருடைய திருமணம் நடைபெற்றது. மணமகன் பிலிப், திருமணத்துக்குப்பின்னர் "எடின்பரோ கோமகன்" என்று அழைக்கப்படுகிறார்.
 
பட்டத்துக்கு வரும்போது எலிசபெத்துக்கு வயது 26. முடிசூட்டு விழா 1953 ஜுன் 2 ந்தேதி லண்டனில் உள்ள மாதா கோவிலில் மிக கோலாகலமாக நடந்தது. முடிசூட்டு விழாவுக்கு எலிசபெத் ராணி தங்கமயமான கோச்சு வண்டியில் கணவர் எடின்பரோ கோமகனுடன் ஊர்வலமாக சென்றார். ஊர்வலத்துக்கு முன்பாக குதிரைப்படை, காலாட் படை, பாண்டு வாத்தியக்குழு ஆகியவை அணிவகுத்து சென்றன. ரோட்டின் இருபுறமும் ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.
 
ஊர்வலம் காலை 9.27 மணிக்கு புறப்பட்டது. கடும் குளிர் வாட்டியது. இடைஇடையே மழை தூறல் போட்டது. இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் உடலில் போர்வையை போர்த்திக் கொண்டும், பத்திரிகை காகிதங்களை தலைக்கு மேல் பிடித்துக் கொண்டும் லட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் திரண்டிருந்தார்கள். ஊர்வலத்தை காண வழி நெடுகிலும் 50 லட்சம் மக்கள் கூடினார்கள்.
 
சில இடங்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதியது. பெண்களும், குழந்தைகளும் நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இந்த முடிசூட்டு விழாவில் `காமன் வெல்த்' அமைப்பில் பங்கு வகிக்கும் இந்தியா உள்பட 8 நாட்டு பிரதமர்கள் கலந்து கொண்டார்கள். ஊர்வலத்தில் அவர்களும் பவனியாக சென்றார்கள்.
 
பிரதமர் நேருவும், அவருடைய மகள் இந்திரா காந்தியும் இரண்டு குதிரைகள் பூட்டிய கோச்சில் (சாரட்டு வண்டி) சென்றார்கள். 11:32 மணிக்கு ஊர்வலம் மாதா கோவிலை சென்றடைந்தது. இங்கிலாந்தின் தலைமை கிறிஸ்தவ பாதிரியார் (ஆர்ச் பிஷப்) முடிசூட்டு வைபவத்தை நடத்தி வைத்தார். சடங்குகள் எல்லாம் முடிந்ததும் வைரக் கற்கள் பதித்த தங்க மகுடம் எலிசபெத்தின் தலையில் சூட்டப்பட்டது.
 
பிறகு அவர் மேடையில் வைக்கப்பட்டிருந்த தங்க சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டார். கையில் செங்கோல் பிடித்திருந்தார். மகுடாபிஷேகம் முடிந்ததும் சடங்குகளை நடத்தி வைத்த ஆர்ச் பிஷப் மண்டியிட்டு ராணிக்கு மரியாதை செலுத்தினார். மற்ற பாதிரியார்களும் முழங்காலிட்டு நின்று மரியாதை செலுத்தினர்.
 
பிறகு ராணியின் கணவரான எடின்பரோ கோமகன் தனது மனைவிக்கு (எலிசபெத் ராணி) முன்பாக வந்து நின்று முழங்காலிட்டு விசுவாசப் பிரமாணம் செய்தார். "எடின்பரோ கோமகனான நான், உங்களுக்கு அடிபணிகிறேன். உங்களுக்காகவே வாழ்ந்து, உங்களுக்காகவே உயிர் துறக்க இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்" என்று அவர் விசுவாச பிரமாண உறுதிமொழி எடுத்தார்.
 
இந்த முடிசூட்டு வைபவத்தை மாதா கோவிலின் மாடிப்பகுதியில் அமர்ந்து இளவரசர் சார்லஸ் (அப்போது அவருக்கு வயது 4) பார்த்துக்கொண்டிருந்தார். அம்மாவுக்கு முன்பாக அப்பா மண்டியிட்டு பிரமாணம் செய்து கொடுத்ததை கண்டு ஆச்சரியப்பட்டு கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.
 
எடின்பரோ கோமகனுக்கு அடுத்து ராணியின் உறவினர்களும், பிரபுக்களும் ஒருவர்பின் ஒருவராக சென்று விசுவாசப்பிரமாணம் செய்து கொடுத்தார்கள். மாதா கோவிலில் கூடியிருந்த பிரபுக்களும், மந்திரிகளும், முக்கிய பிரமுகர்களும் ஒன்றுபட்ட குரலில், "கடவுளே! எலிசபெத் ராணியை காப்பாற்றுவாயாக!", "ராணி எலிசபெத் நீடூழி வாழ்க", "ராணி எலிசபெத் சிரஞ்சீவியாக வாழ்க" என்று வாழ்த்து கோஷங்களை முழங்கினார்கள்.
 
பிறகு விஷேச ஆராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ராணி அரண்மனைக்கு பவனியாக சென்றார். அவருக்கு பின்னால் ராஜ குடும்பத்தினர், காமன்வெல்த் தலைவர்கள், பிரபுக்கள், மந்திரிகளும் பவனி சென்றனர்.
 
மறுநாள் ராணி எலிசபெத் தனது அரண்மனையில் விருந்து அளித்தார். இந்த விருந்தில் பிரதமர் நேரு, மகள் இந்திரா காந்தியுடன் கலந்து கொண்டார். வெளிநாட்டு தூதர்களும் இதில் கலந்து கொண்டார்கள். அதற்கு முன்னதாக இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் காலை விருந்து கொடுத்தார். அதிலும் நேரு உள்பட 8 காமன்வெல்த் நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
 
முடிசூட்டு விழாவின்போது ராணி எலிசபெத்துக்கு சார்லஸ் (வயது 4), ஆனி (வயது 2) ஆகிய இரண்டு குழந்தைகள். பிறகு 1960-ல் ஆண்ட்ரூவும், 1964-ல் எட்வர்டும் பிறந்தனர். பட்டத்து இளவரசரான சார்லஸ், அழகி டயானாவை மணந்து பிறகு விவாக ரத்து செய்ததும், டயானா கார் விபத்தில் பலியானதும் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்.
 
உலகின் மிகப்பெரும் கோடீசுவரியாக எலிசபெத் மதிக்கப்படுகிறார். அவருடைய சொத்துக்களின் மதிப்பு ரூ.35,000 கோடி. 1993 ஏப்ரல் மாதம் முதல் எலிசபெத் தானே முன்வந்து வருமான வரி செலுத்தி வருகிறார். அவர் கட்டும் வருமான வரி ஆண்டுக்கு சுமார் 315 கோடி ரூபாய்.

செவ்வாய், 1 டிசம்பர், 2009

அப்பாவை தேடினால் ‘அம்மா’ கிடைத்தார்

லண்டன்: என் அப்பா யாரும்மா? என்று கேட்டு நச்சரித்த மகளிடம் அடையாளம் சொல்லி அனுப்பினார் அம்மா. தேடியலைந்த மகள் கண்டுபிடித்ததோ அப்பாவை அல்ல, இன்னொரு அம்மாவை! இந்த ருசிகர தேடல் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அரங்கேறியது. 22 வயது பெண் எமிலி வாலிஸ். இவர் தந்தையை பார்த்ததே இல்லை, தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். ஆனால், அடிக்கடி அப்பா யாரும்மா? என்று தாயிடம் கேட்டு வந்தார். நீ வளர்ந்ததும் சொல்றேன், பொறுமையா இரு என்று சொல்லி வந்தார் அம்மா. ஓராண்டுக்கு முன், உன் அப்பா பேரு கிளைவ் ஹாரிங்சன் என்று கூறி அடையாளங்களைச் சொல்லி மகளை தேடி வரச் சொன்னார் அம்மா.

விடா முயற்சியுடன் கிளைவ் ஹாரிங்சனை தேடிய எமிலி, கடைசியில் கடந்த சில நாட்கள் முன்பு அவரைக் கண்டுபிடித்து விட்டார் . ஆனால், அப்பாவாக அல்ல, அம்மாவாக! ஆம். கிளைவ் ஹாரிங்சன், சலோ என்று பெயரை மாற்றிக் கொண்டு பெண்ணாக மாறியிருந்தார். லிப்ஸ்டிக் பூசிய உதடுகள், வீட்டில் 82 ஜோடி லேடீஸ் செருப்புகள் என சகதோழியாக அப்பாவை பார்த்து முதலில் அதிர்ந்தார் எமிலி. பிறகு, சகஜ நிலைக்கு திரும்பினார். இப்போது எப்படியோ, இனி அப்பன் பேர் தெரியாதவள் என யாரும் சொல்ல முடியாது. ஒரிஜினல் அப்பாவை கண்டுபிடித்தாகி விட்டது என மகிழ்கிறார் எமிலி.

அவர் கூறியதாவது: லிப்ஸ்டிக், வெள்ளி நிற சல்வார், மேக்கப், நீண்ட விக் என அப்பாவைப் பார்த்ததும் என்ன சொல்வது என புரியாமல் தவித்தேன். பிறகு, என்னை விட நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் அப்பா(!) என்றேன்.எனது அப்பாவைக் கண்டுபிடித்து அம்மாவுடன் ஒன்று சேர்க்க வேண்டும் என்று கனவு கண்டு வந்தேன்.  அவரைக் கண்ட பிறகு இனி, அதற்கு வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தேன். எனினும், அவருடன் தோளோடு தோள் நின்று வாழ்க்கையை தொடர முடிவு செய்துள்ளேன்.முழு பெண்ணாக மாற அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்போது மருத்துவமனையில் உடனிருந்து கவனித்துக் கொள்வேன். எனது திருமணத்தின்போது மணப்பெண் தோழியாக ÔசலோÕ எப்போதும் இருக்க வேண்டும். அப்படி நடந்தால் பெருமைப்படுவேன் என்றார். அம்மா ஏன் இந்த புது அம்மாவை விட்டுப் பிரிந்திருப்பார் என்பதை மகள் உணர்ந்திருப்பார் என்று நம்புவோம்.

செவ்வாய், 10 நவம்பர், 2009

டைட்டானிக்’ படத்தில் நடித்த கேத் வின்ஸ்லெட் மதிப்பு 470 கோடி


லண்டன் : டைட்டானிக் சினிமா ஹீரோயின் கேத் வின்ஸ்லெட், ரூ.470 கோடிமதிப்புள்ள தேசிய சொத்து என்று இங்கிலாந்து அரசு நியமித்த பொருளாதாரநிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் பற்றிஆய்வு நடத்த பொருளாதார நிபுணர்கள் குழுவை அந்நாட்டு அரசு நியமித்தது. அதற்கு நிதி உதவியும் அளித்தது.
அந்த நிபுணர்கள் அளித்த ஆய்வறிக்கையின்படி, டைட்டானிக் சினிமாஹீரோயின் கேத் வின்ஸ்லெட் ரூ.470 மதிப்பு கொண்ட தேசிய சொத்து என்றுஅறிவிக்கப்பட்டார். இங்கிலாந்து சினிமா கவுன்சிலால் தணிக்கை செய்யப்பட்டஒரே நடிகை என்ற பெயர் பெற்றவர் வின்ஸ்லெட்.
சினிமா துறை மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு வின்ஸ்லெட் அளித்து வரும்பங்கு மகத்தானது என்று கவுன்சிலின் புள்ளிவிவரம் மற்றும் ஆராய்ச்சிக் குழுதலைவர் டேவிட் ஸ்டில் தெரிவித்தார். அவரது வசீகரம், சினிமாவைத் தாண்டிமற்ற துறை வளர்ச்சியிலும் பங்கு வகிக்கிறது. எனது ஆடை வடிமைப்புகளைவின்ஸ்லெட்டின் அழகிய உடலமைப்பை மனதில் வைத்து உருவாக்கி வெற்றிபெற்றிருக்கிறேன்ÕÕ என பிரபல டிசைனர் இயன் கலும் கூறினார்.
இங்கிலாந்து அரசியல்வாதிகளும் வின்ஸ்லெட் பற்றி பெருமைப்படுகின்றனர். ஒரு படத்துக்கு அவரது அதிகபட்ச சம்பளம் (ரூ.47 கோடி), அதே நேரம் கலை, டாகுமென்டரிகளிலும் நடிப்பது, சினிமா துறையில் அவரது படங்கள் மூலம்சுமார் ரூ.420 கோடி முதலீடு ஆகியவை அவர்களை பிரமிக்க வைத்துள்ளன. எனவே, ஆஸ்கர் விருது பெற்ற கேத் வின்ஸ்லெட்டை தங்கள் தேசிய சொத்தாகஇங்கிலாந்து மக்கள் பலர் கருதுகின்றனர்.

வியாழன், 15 அக்டோபர், 2009

பிரிட்டிஷ் கரன்சி தேய்கிறதா ?



பிரிட்டன் கரன்சி தேய்கிறது: 'யூரோ' முந்துகிறது : மாறிவரும் உலகிற்கு இது ஓர் அடையாளம்







பொருளாதார மந்த நிலை பாதிப்பு, பிரிட்டனை அதிகம் பாதித்திருக்கிறது. அமெரிக் காவை விட,

ஜெர்மானியை விடவும் அதிகம் பாதித்திருக் கிறது. அதன் அடையாளமாக, இதுவரை மிகவும் கவுரமாக கருதப்பட்ட பிரிட்டன் கரன்சியான பவுண்ட் ஸ்டெர்லிங், சற்று மதிப்பு குறைந்து விட் டது.ஆனால், ஐரோப்பிய நாடுகளில் புழங்கும் "யூரோ ' கரன்சி முந்துகிறது.



சமீபத்தில், அமெரிக்காவின் பீட்டர்ஸ்பர்க் நகரில் "ஜி-20 ' நாடுகளின் தலைவர்கள், உலகம் சந்திக்கும் பொருளாதார மந்த நிலை பற்றி ஆலோசித்தனர்.அதில்,"உலகப் பொருளாதாரத்தின் சமநிலை நீடிக்க வழிகாண வேண்டும். அதாவது அன்னியச்செலாவணி நடைமுறைகள் பற்றி ஆராய வேண் டும்' என்று, பேசி முடிவு செய்தனர். அதே சமயம் எந்த நாட்டு கரன்சியின் மதிப்பு, ஏற்றம், சரிவு அல்லது எதிர்கால போக்கு ஆகியவை பற்றி பேச வில்லை.மேலும்,"ஜி7' என்ற பணக் கார நாடுகளின் நிதியமைச் சர்கள் மற்றும் அந்தந்த நாட்டின் மத்திய வங்கித் தலைவர்கள் இஸ்தான்புல் நகரில் சமீபத்தில் நடத்திய ஆலோசனைகளில் இந்த கரன்சிப் பிரச்னை பெரிதாக அலசப்படவில்லை. அளவுக்கதிகமான பட்ஜெட் நிதிப்பற்றாக்குறை,� தாழில் துறை தேக்கம் ஆகிய பிரச்னையில் பிரிட்டனை ஆளும் தொழிற் கட்சியைச் சேர்ந்த பிரதமர் கார்டன் பிரவுன் ஆட்சி கலகலத்து வருகிறது.பொதுத் துறை நிறுவனங்கள் அதிகம் சிரமப்படுகின்றன. போதும் 12 ஆண்டுகள் ஆண்டது, இனி என்ன ஆனால் என்று கார்டன் பிரவுன் நினைக்கும் அளவுக்கு பிரச்னைகள் மண்டிக்கிடக் கின்றன.



பாங்க் ஆப் -இங்கிலாந்து தலைவர் மெர்வின் கிங் ,வெளிப்படையாக, "பவுண்ட் ஸ்டெர்லிங் அன்னியச் செலாவணியில் பலமிழந்தால் என்ன? உள்நாட்டு பொருளாதாரம் சிறப்பாக இருந்தால் சரி' என்றிருக்கிறார். பவுண்ட் ஸ்டெர் லிங்க் பலவீனப் பட்டாலும், ஏற்றுமதி அதிகரித்தால் அது நல்லது என்ற கருத்து, பிரிட்டனுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், பிரிட்டனுக்கு சுற்றுலா வருபவர்கள் இனி அதிகம் செலவழிக்க வேண் டும், இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதலாக அன் னியச் செலாவணியைக் கட்ட நேரிடும். இது பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும்.



கடந்த ஏப்ரல்மாதத்தில் இருந்தே "யூரோ' கரன்சி தலைதூக்க ஆரம்பித்தது. அதாவது ஒரு யூரோ கரன்சி கொடுத்தால், அதற்கு ஈடாக 90.89 பென்ஸ் சமம் என்ற நிலை ஏற்பட்டது. நூறு பென்ஸ் சேர்ந்தது ஒரு பவுண்ட் ஸ்டெர்லிங்.அது மட்டும் அல்ல, அமெரிக்க டாலர், பிரிட்டிஷ் பவுண்ட், ஐரோப்பிய "யூரோ' ஜப்பான் "யென்' ஆகிய சில நாடுகளின் ஒட்டு மொத்த நாணய மதிப்பீட்டில் "யூரோ' கவுரவம் அதிகரித்தது. பவுண்ட் ஸ்டெர்லிங் மதிப்பு சரிந்தது. கடந்த சில நாட்களாகப் பார்த்தால், நம் ரூபாய் மதிப் பில் ஒரு பவுண்ட் ஸ்டெர்லிங் மதிப்பு 74.50 ரூபாய் ஆகும். அதே போல ஒரு யூரோ மதிப்பு 66.75 ரூபாய் ஆகும்.இந்த இரு நாணயங்களுக்கும் இடையே உள்ள இடைவெளி எந்த அளவுக்கு குறைந்திருக்கிறது என்பது இதனால் புரியும்.



பிரிட்டனின் பொருளாதார நிலையை சில நிபுணர்கள், "இந்த சூழ்நிலையில் பிரிட்டன் அரசு புன்முறுவல் பூத்தது என்றால், அது நிதிக் கொள்கையை கோட்டை விட முன்வந்திருக்கிறது' என்று அர்த்தம் என்கின்றனர்.கடந்த 1999 ஜனவரி முதல் தேதியில், பெரிய எதிர்பார்ப்புடன் யூரோ கரன்சி அறிமுகமானது. ஐரோப்பிய நாடுகளில் 16 நாடுகளின் மதிப்பு மிக்க கரன்சியாக இப்போது இருக்கிறது. பிரான்சு,ஜெர்மனி ஆகிய வலுவான நாடுகள் மட்டுமின்றி சுலோவேகியா போன்ற ஏழை நாடுகளும் இந்த அணியில் அடங்கும். பிரிட்டன் தன் பழைய கவுரவம் கருதி பவுண்ட் ஸ்டெர்லிங்கை கைவிட்டு, யூரோவுக்கு மாறவில்லை.ஆனால், இன்று பவுண்ட் ஸ்டெர் லிங்கிற்கு மவுசு குறைகிறது. மாறாக யூரோ புதிய கரன்சியாக எழுகிறது. அமெரிக்க டாலர் சற்று சரிவைச் சந்திக்கும் காலம்.இனி அமெரிக்க டாலர் முந்தைய தலைமையிடத்தை ஏற்க முடியாது.



ஆசியாவைப் பொறுத்தளவில் சீனாவின் யுவான் மற்றும் ஜப்பான் யென் முக்கியத்துவம் பெறுகிற காலம்.அதே போல ஐரோப்பிய நாடுகள் என்றால், பிரிட்டிஷ் பவுண்டா, அல்லது யூரோவா என்றால் யூரோவை நேசிக்கும் காலம் வந்து விட்டது.அதன் அறிகுறியாக, எண் ணெய் வள நாடுகளே டாலரை மட்டும் முன்னிறுத்தி, தங்கள் வர்த்தகத்தை இனி மையப்படுத்த விரும்பாமல், பல்வேறு பெரிய நாடுகளின் கரன்சியை ஒருங்கிணைத்து செயல்பட விரும்புகின்றனர். காலம் எப்படி மாறி விட்டது பாருங்கள் ! சூரியனே அஸ்தமிக்காத நாடு என்று மார் தட்டும் பிரிட்டன் இன்று சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம்.அதில் முக்கியமானது அவர்களின் நாணயமான பவுண்ட் ஸ்டெர்லிங் முகமதிப்பு தேய்வதாகும்.